சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் குறித்த இந்தியா கவலை கொள்வதாக, இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தாரூர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சுயசரிதை வெளியீட்டு வழாவில் உரையாற்றிய போதே அவர் இதுபற்றி குறிப்பிட்டுள்ளார். 15 ஆம் நூற்றாண்டில் சீன அட்மிரல் செங் சிறிலங்காவுக்கு வந்தது தனியே வணிக நோக்கத்துக்காக அல்ல. சீனப் பேரரசின் கீழ் உலக ஒழுங்கைக் கொண்டு […]
Other News
வடமாகாண சபை உறுப்பினர்கள் இருவருக்கு சபையை தலைமை தாங்கும் அதிகாரம்
வட மாகாண சபை அவை தலைவர் மற்றும் பிரதி அவை தலைவர் சபையில் இல்லாத நிலையில், சபையை தலைமை தாங்கும் அதிகாரம் வடமாகாண சபை உறுப்பினர்கள் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 90 ஆவது அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே, மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் ஜி.ரி. லிங்கநாதன் ஆகியோருக்கு அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் இந்த அதிகாரத்தை வழங்கியுள்ளார். […]
இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆதாரங்கள் உள்ளன
இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, அருட்தந்தை பிராஸ்சிஸிசுடன் 56 முன்னாள் போராளிகள் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதம நிதியரசர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கான சம்பளத்தில் திருத்தம் மேற்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது
ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு காணப்படுவதாக குறிப்பிடும் தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அதனை அரசாங்கம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஸ்ரீலங்கா தொடர்பிலான தீர்மானமானது வேறு எவரும் கொண்டுவந்த ஒரு தீர்மானமல்ல எனவும், ஸ்ரீலங்காவின் அனுசரணையுடனேயே அது கொண்டுவரப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நேற்று […]
கிளிநொச்சியில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் தீவிரம்; 592 பேர் பாதிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் 592 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சலானது தற்போது ஸ்ரீலங்காவில் தீவிரமாகப் பரவிவரும் நிலையில், கிளிநொச்சியில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளமையை மாவட்ட சுகாதார பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. கிளிநொச்சியில் இதன் தாக்கமானது கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி கண்டறியப்பட்டுள்ள நாள் முதல், கடந்த 03 ஆம் திகதி வரையான 67 நாட்களுக்குள் கிளிநொச்சி […]
நாடாளுமன்றில் மஹிந்த அணியினரால் அமளிதுமளி; நாளை வரை ஒத்திவைப்பு
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இன்றைய தினம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவிருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான தரப்பினரது தொடர் இடையூறுகளால் சபை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இந்த விவாதத்தை சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையான மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் சபையில் கொண்டுவந்தது. எனினும், விவாதம் ஆரம்பமாவதற்கு முன்னர் நேரப்பிரச்சினையை ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் சுட்டிக்காட்டியதால் சபையில் அமளி ஏற்பட்டது. ஒன்றிணைந்த எதிர்கட்சியிலுள்ள 52 […]
வட மாகாணத்தில் ஆயிரத்து 252 வெற்றிடங்கள்
வட மாகாணத்தில் ஆயிரத்து 252 வெற்றிடங்கள் உள்ள நிலையில், அவற்றை அடையாளங்கண்டு பட்டதாரிகளை நியமனம் செய்யுமாறு வடமாகாண ஆளுநருக்கு தெரியபடுத்தப்பட்டுள்ளதாக வட மாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் கூறியுள்ளார். வடமாகாண சபையின் 90 ஆவது அமர்வு இன்றைய தினம் மாகாண சபை பேரவை செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது பட்டதாரிகள் கடந்த 39 நாட்களாக தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்திவரும் நிலையில், மாகாண சபை […]
கால இழுத்தடிப்புக்கு 2 வருட அவகாசத்தை பயன்படுத்தக்கூடாது! – அரசிடம் வலியுறுத்தியது சர்வதேச மன்னிப்புச் சபை
* சர்வதேச பங்களிப்புடன் கலப்பு நீதிமன்றம் நிறுவப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். * குற்றமிழைத்தவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். * வடக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும். * பொதுமக்களின் காணிகள் அவர்களிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். * காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும். “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வழங்கப்பட்ட கால அவகாசத்தை, கால இழுத்தடிப்புக்காக இலங்கை அரசு பயன்படுத்தக்கூடாது. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளை […]
அரசு பராமுகம்! உறவுகள் கடும் கவலை!! – தொடர்கின்றது நீதி வேண்டி போராட்டம்
காணாமல்போனோரின் உறவுகள் தமிழர் தாயகத்தில் முன்னெடுத்து வருகின்ற போராட்டங்கள் தீர்வு எதுவும் இல்லாமல் இன்று வியாழக்கிழமையும் தொடர்கின்றன. தேசிய அரசும் இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது தமக்குக் கடும் வேதனையாக உள்ளது என்று போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர். கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்பாக, கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 46ஆவது நாளாகவும் தொடர்கின்றது. வவுனியா நகரில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 42 […]
போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை: ராஜிதவின் கருத்தால் தமிழர்கள் அதிர்ச்சி!
“இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது ‘போர்க்குற்றங்கள்’ இடம்பெற்றதாகச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு ஏதும் இடம்பெறவில்லை” என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட விசாரணை அறிக்கையில் போர்க்குற்றச்சாட்டுக்கள் என்று கருதக்கூடியயளவிலான மனித உரிமை மீறல்களும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் நிகழ்த்தப்பட்டதற்கு நம்பகரமான சாட்சிகள் இருக்கின்றன என்று கூறப்பட்டுள்ள நிலையில் […]





