Other News

செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோவை தெற்கு தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், வழக்கு தொடர்ந்தவர் அந்த தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளரும் அல்ல, வாக்காளரும் அல்ல என்பதால் மனுவை ஏற்க முடியாது என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

“தென்னிந்தியர்கள் வடமொழி ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும்”.. ஆளுநர் அர்லேக்கர்

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேசினார். அப்போது, “நமது கலாசாரம் பல்வேறுபட்ட கலாசாரம் கொண்டது என்று சொல்வதைவிட தனித்துவமான கலாசாரம் என்று சொல்லலாம். வடஇந்தியாவில் உள்ளவர்கள் தமிழை கற்று வருகிறார்கள். தமிழ் கலாசாரம், பண்பாடை கற்கத் தயாராகவும் உள்ளனர். நானும் தமிழ் கற்றுக்கொண்டு வருகிறேன்; அதேபோல தென்னிந்தியர்களும் வட இந்திய மொழி ஏதாவது ஒன்றை […]

“127 தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் கொத்து புரோட்டா போட்டதை மறந்துவிட்டீர்களா?”.. – சபாநாயகர் அப்பாவு

கரூரில் இன்று (ஜூலை.10) பேசிய முதலமைச்சர் விஜய், “கொளத்தூரில் 5 நிமிடம் பேசி மு.க. ஸ்டாலினுக்கு கொத்து பரோட்டா போட்டாச்சு” என பேசினார். இதற்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், “முதலமைச்சர் அவர்களே, தேர்தலுக்கு முன் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தவெக சார்பாக இந்த விஜய் தான் போட்டியிடுகிறேன் என்று கெத்தாக சொன்ன உங்களுக்கும் 127 தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் கொத்து பரோட்டா போட்டதை மறந்துவிட்டீர்களா?” என்றார்.

செருப்பு பிஞ்சிரும்.. வசமாக சிக்கிய அரோரா.. கழுவி ஊற்றிய பிக்பாஸ்!

பிக்பாஸில் தற்போது பேமிலி டாஸ்க் நடைபெறுகிறது. அதாவது ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தினரும் வருகை தரும் நிகழ்வாகும். இதில் அரோராவுக்கு மட்டும் அவரது நண்பர்கள் வந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவரான அரோரா பணப்பெட்டியுடன் வெளியேற திட்டமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸூக்கு தனி இடம் உண்டு. 9வது சீசனாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி […]

ஜனாதிபதி தலைமையில் பேரிடர் முகாமைத்துவத்துக்கான விசேட தேசிய சபைக் கூட்டம் இன்று!

ஜனாதிபதி தலைமையில் பேரிடர் முகாமைத்துவத்துக்கான விசேட தேசிய சபைக் கூட்டம் இன்று!

பேரிடர் முகாமைத்துவத்துக்கான விசேட தேசிய சபைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். பிரதமர் இணைத் தலைமை வகிப்பார் 2004 ஆம் ஆண்டு சுனாமியைத் தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்கப் பேரிடர் முகாமைத்துவ சட்டத்தின் கீழ் இந்தச் சபை நிறுவப்பட்டது. எனினும், அந்தச் சபையின் செயற்பாடு இயங்கா […]

எவரும் ஓடி ஒளியாதீர்; ஒன்றிணைந்து நாட்டை மீட்க முன்வாருங்கள்! – ஜனாதிபதி அநுர

எவரும் ஓடி ஒளியாதீர்; ஒன்றிணைந்து நாட்டை மீட்க முன்வாருங்கள்! – ஜனாதிபதி அநுர

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும், இத்தகைய சவாலை எதிர்கொள்வது ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதுடன், ஓடி ஒளிவதோ அல்லது அச்சத்துடன் பார்ப்பதோ அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையில் நடைபெற்ற கடற்படையின் நிகழ்ச்சி ஒன்றின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி […]

பகிடிவதை குற்றச்சாட்டு: யாழ் பல்கலை மாணவர்கள் 19 பேருக்கும் பிணை!

பகிடிவதை குற்றச்சாட்டு: யாழ் பல்கலை மாணவர்கள் 19 பேருக்கும் பிணை!

பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள வீடொன்றுக்குக் கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கடந்த மாதம் 29ஆம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். விளக்கமறியல் […]

மாகாண சபைத் தேர்தல் பற்றி ஆராய விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு!

மாகாண சபைத் தேர்தல் பற்றி ஆராய விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு!

மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது. சபை முதல்வரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த யோசனை நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படடுள்ளது. கலப்புத் தேர்தல் முறைமை, வாக்களிக்கும் உரிமை மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வாக்களிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட தேர்தல் முறைமையொன்றை உருவாக்குவதற்கு விரிவான விவாதங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்தநிலையில், தெரிவுக்குழுவின் அறிக்கை […]

85,000 அமெரிக்க விசாக்கள் ரத்து

85,000 அமெரிக்க விசாக்கள் ரத்து

இவ்வாண்டின் ஆரம்பம் முதல், இதுவரையான காலப்பகுதியில் 85,000 விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, வெளிநாட்டு மக்கள் கொள்கையில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிகளையும் அமுல்படுத்தி வருகிறார். அந்த வகையில், ஹெச் 1பி விசாவுக்கு புது கட்டுப்பாடுகள், சில நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் […]

அசோக ரன்வலவுக்கு பிணை

அசோக ரன்வலவுக்கு பிணை

முன்னாள் சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். முன்னதாக நேற்று இரவு இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் இன்று(12) அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.