Tuesday , March 19 2024
Home / விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

2 கைகளையும் இழந்த ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைனை சந்தித்தார் சச்சின் டெண்டுல்கர்.

கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ சமீபத்தில் வைரலானபோது, அவரைப் பாராட்டி X தளத்தில் பதிவிட்டிருந்தார் சச்சின். பேட்டி ஒன்றில் சச்சினை சந்திக்க ஆசை என கூறியிருந்தார் அமீர். அதனை நிறைவேற்றும் விதமாக, காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர் அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்

Read More »

தெற்காசிய தடகளம்- தமிழக வீரர்கள் 9 பேர் தேர்வு

3-வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டி கொழும்பில் வருகிற 5 மற்றும் 6-ந்தேதி நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 9 வீரர்- வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். ஆண்கள் பிரிவில் நிதின் சிதானந்த் (200 மீட்டர் ஓட்டம்), ராஜேஷ் ரமேஷ் (400 மீட்டர் தொடர் ஓட்டம்), கமல்ராஜ் (டிரிபிள் ஜம்ப்), சந்தோஷ் மணிகண்டன் (உயரம் தாண்டுதல்) ஆகியோரும், பெண்கள் பிரிவில் சுபா (200, 400 …

Read More »

ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் சரிவில் இருந்து மீளுமா? டெல்லி அணியுடன் இன்று மோதல்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சந்திக்கின்றன. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி 8 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் பின்தங்கி இருக்கிறது. கொல்கத்தா அணியை வீழ்த்திய டெல்லி அணி முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி …

Read More »

ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி இந்தியா 10 தங்க பதக்கங்களை வென்றது

தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள்; 10 தங்க பதக்கங்களை வென்றது இந்தியா நேபாள நாட்டில் தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 21ந்தேதி தொடங்கின. இதில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், பூடான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் விளையாடின. இந்த நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 10 தங்க பதக்கங்களை கைப்பற்றி உள்ளனர். அவற்றில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 7 தங்கம் மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் …

Read More »

உடுவில் மகளிரை வென்றது வேம்படி!!

கீர்த்திகன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில், நேற்று இடம்பெற்ற ஆட்டமொன்றில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி வெற்றிபெற்றது. கொக்குவில் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் உடுவில் மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி மோதியது. 38:34 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி வெற்றிபெற்றது.

Read More »

ஐ.பி.எல். போட்டி – ஹூடாவின் பொறுப்பான ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது

ஐ.பி.எல். போட்டியின் 11-வது சீசனில் ஏழாவது போட்டி இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், லெவிசும் களமிறங்கினர். ஐதராபாத் அணி சார்பில் சந்தீப் சர்மா, பில்லி ஸ்டான்லேக், சித்தார்த் கவுல் தலா 2 விக்கெட்டும், ரஷித் கான், …

Read More »

காமன்வெல்த் – இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை தேஜாஸ்வினி வெள்ளி பதக்கம் வென்றார்

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் கேம்ஸ் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் துப்பாக்கி சுடுதல் நடைபெற்றது. இந்தியா சார்பில் தேஜாஸ்வனி சவந்த், அன்சும் மவுட்கில் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தேஜாஸ்வினி சவந்த் 6 சுற்றுகள் முடிவில் 618.9 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். சிங்கப்பூர் வீராங்கனை மார்டினா லின்ட்செ வெலோசோ 621 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். ஸ்காட்லாந்து வீராங்கனை 618.1 …

Read More »

பஞ்சாப் அணி வெற்றி

ஐபிஎல்2018 தொடரின் இரண்டாவது போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல்2018 தொடரின் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் – டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் குவித்தது. இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற …

Read More »

அதிகவே அரைசதம் இலக்கை எளிதாக்கிய ராகுல்

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் அதிரடியாக அடி அதிவேக அரைசதம் விளாசினார். ஐபிஎல்2018 தொடரின் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் – டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் குவித்தது. இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் …

Read More »

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் நேற்று வண்ண வண்ண நிகழ்ச்சிகளுக்கு பின்னர் தொடங்கியது. முதல் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு …

Read More »