நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த ஐ.நா. தீர்மானம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுவதற்கு உரிய ஆவணங்கள் சதிகம் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவைக்கு வந்திருந்தார். எனினும், விவாதம் நடைபெறாது தடைப்பட்டதால் அவர் மிகுந்த கவலையடைந்தார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணி எம்.பியான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று மஹிந்த அணியான பொது எதிரணியால் ஐ.நா. […]
Other News
திட்டமிட்ட அடிப்படையிலேயே ஐ.நா. விவாதத்தைக் குழப்பியடித்தது அரசு! – இராணுவத்தினருக்குப் பெரும் அநீதி என்கிறது மஹிந்த அணி
நாட்டுக்கும், இராணுவத்துக்கும் பெரும் பாதிப்பாக அமைந்துள்ள ஐ.நா. தீர்மானம் தொடர்பில், பொது எதிரணி கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் திட்டமிட்டு இடைநிறுத்தப்பட்டது எனவும், இது பொது எதிரணிக்கு மட்டுமன்றி இராணுவத்தினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நல்லாட்சி அரசால் இழைக்கப்பட் பெரும் அநீதியாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று மஹிந்த அணியான பொது எதிரணியால் ஐ.நா. தீர்மானம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை […]
ஆஸ்திரேலியாவில் ஆறு உடைந்ததால் மூழ்கிய நகரம்
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் கடந்த வாரம் புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் ராக் கேப்டால் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதி வெள்ளத்தால் மூழ்கியது. ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் கடந்த வாரம் புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த பகுதியில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பிட்ஸ்சோவி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீர் […]
வடகொரியாவுக்கு பதிலடியாக ஏவுகணை சோதனை நடத்திய தென்கொரியா
கொரிய தீபகற்பத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் வடகொரியாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் கொரியா ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. தென் கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தென்கொரியாவுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக அணு ஆயுத சோதனைகளையும் நடத்தி வருகிறது. ஐ.நா. பொருளாதார தடை, உலக நாடுகளின் கண்டனம் என எதையும் பொருட்படுத்தாமல் […]
மக்களின் எழுச்சி மிகு ஆதரவால் எனது வெற்றி நிச்சயிக்கப்பட்டது – டி.டி.வி.தினகரன்
மக்களின் எழுச்சி மிகு ஆதரவால் எனது வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகி விட்டது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க.(அம்மா) கட்சி சார்பில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன், தண்டையார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள பிரணவ ஜோதி சக்தி விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு, தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது டி.டி.வி.தினகரனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த […]
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் மண்ணின் மைந்தன் அண்ணன் மதுசூதனனை வெற்றி பெற செய்யுங்கள்: முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பி.எஸ்.
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் மண்ணின் மைந்தனான அண்ணன் மதுசூதனனை ஆதரித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓபன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளராக கழக அவைத் தலைவர் இ.மதுசூதனன் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து இரட்டை மின் விளக்கு கம்பம் சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார். பிரசாரத்தின்போது உங்கள் வீட்டு […]
நீதியை மட்டுமல்ல நியதியையும் உணர்த்திய நீதிபதி இந்திராபானர்ஜி
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான இந்திராபானர்ஜி தாமாக முன்வந்து நான் தமிழை கத்துக்கப்போறேன் என்று புதுமையாய் கூறி இருப்பதற்கு வாழ்த்துக்கள். பாரதி கண்ட உண்மையான புதுமைப்பெண்ணுக்கு இலக்கணம் இது தான். நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தியர்கள் அனைவரும் என் உடன்பிறந்த சகோதரர்கள் என்று பள்ளி மைதானத்தில் தேசிய கொடியின் கீழ் நின்று உரக்க சொல்லும் போது மெய்சிலிர்க்கத்தான் செய்யும். ஆனால் அந்த சகோதரர்கள் நேருக்கு நேர் சந்தித்தால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள […]
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பிரசாரம்
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் என்.மருதுகணேசை ஆதரித்து 42,47வது வட்டம் சந்திப்பு, கொருக்குப்பேட்டை, மன்னப்ப முதலி தெருவில் நேற்று மாலை 7 மணி அளவில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் இரா.மனோகர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் […]
ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் 10 பெண்கள் உதவியுடன் இரவு பரபரப்பாக நடந்த பண சப்ளை
ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முன்தினம் இரவு பணப்பட்டுவாடா எப்படி நடந்தது என்பது பற்றி சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முன்தினம் இரவு பணப்பட்டுவாடா எப்படி நடந்தது என்பது பற்றி சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் ஒரு குறிப்பிட்ட கட்சியின் வெளியூர் நிர்வாகிகள் ஒவ்வொரு தெருவிலும் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். 50 வாக்காளர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். […]
நாட்டின் இளைஞர் சமூகத்திற்கான தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படும் – பிரதமர்
போட்டித்தன்மை வாய்ந்த, வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டின் இளைஞர் சமூகத்திற்கான தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற தேசிய ஏற்றுமதி மூலோபாய அபிவிருத்தி மாநாட்டில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். வெளிநாட்டுக் கடனும், நிலுவைத் தொகையும் அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பாரிய சவால்களாகும். நாட்டுக்கு போதுமான அன்னிய செலாவணி கிடைப்பதில்லை. ஏற்றுமதி சுற்றுலா மத்திய கிழக்கு தொழில்வாய்ப்பு என்பனவற்றின் மூலமே கூடுதலான அன்னிய […]





