Other News

அமெரிக்காவில் 17 ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

அமெரிக்காவில் ஒரே நாளில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிகழ்வு 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 17 ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் அமெரிக்காவில் மரண தண்டனை வி‌ஷ ஊசி போட்டு நிறைவேற்றப்படுகிறது. அத்தகைய தண்டனை ஒரு நாளில் ஒருவருக்கு மட்டுமே நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தெற்கு மாகாணமான ஆர்கன்சாசில் ஒரே நாள் இரவில் 2 […]

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து பிரித்தானியாவுடன் கூட்டமைப்பு பேச்சு

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரீஸுடன், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்துரையாடியுள்ளார். கூட்டமைப்பிற்கும், பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான விசேட சந்திப்பு எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. குறித்த சந்திப்பின்போது, புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம், இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் தலைவருக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் […]

ஜனநாயக போராட்டத்திற்கு மதிப்பளிக்காவிடின் தமிழினம் வேறு வழியை கையாளும்

மனிதாபிமான போராட்டம் தீர்வின்றி தொடருமாயின், அது எமது இனத்தவரை வேறு வழிக்கு திசைதிருப்புவதற்கே வழிவகுக்கும்” என கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 66ஆவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தீர்வின்றி தொடர்ந்து வருகின்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தந்தையொருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனது ஆதங்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்திய அவர், “இந்த ஜனநாயக […]

தந்தை செல்வாவின் 40ஆவது நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

தந்தை செல்வநாயகத்தின் 40ஆம் ஆண்டு நினைவு தினம் வுனியா பிரதான மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள நினைவுத்தூபியில், இன்றைய தினம் (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில், தந்தை செல்வநாயகத்தின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், […]

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் சார்பில் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உபகுழுவிற்கு முறைப்பாடுகளை சமர்ப்பிக்க சந்தர்ப்பம்

2005ம் ஆண்டுக்கும் 2015ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடையூறுகள் , பாதிப்புக்களால் மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவை உபகுழுவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் தமது முறைப்பாடுகளை மே மாதம் 1ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க முடியும். பாராளுமன்ற மறுசீரமைப்ப மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக இன்று இந்த விடயங்களை குறிப்பிட்டார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் […]

சிரியா-ஈராக்கில் குர்து பகுதியில் துருக்கி குண்டுவீச்சு: 23 பேர் பலி

சிரியா, மற்றும் ஈராக்கில் உள்ள குர்து பகுதிகள் மீது நேற்று துருக்கி போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்தினார்கள். இதில் குர்து இனத்தை சேர்ந்த 23 பேர் பலியாயினர். ஈராக் மற்றும் சிரியாவின் வட பகுதிகளில் குர்து இனத்தவர் அதிக அளவில் உள்ளனர். இப்பகுதியில் குர்து இன மக்கள் தன்னாட்சி அதிகாரத்துடன் ஆட்சி நடத்தி வருகின்றனர். இவர்கள் ஆதரவுடன் அமெரிக்காவும், ரஷியாவும் ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். ஆனால் குர்து […]

ஸ்ரீலங்காவிற்கு ஜி.எஸ்.பி பிளஸ் கிடைக்க வாய்ப்பில்லை

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அரசாங்கம் உயர் பதவிகளை வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டும் நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன இதனூடாக அவர்களது தவறுளை ஏற்றுக்கொள்வதாக அரசாங்கம் அறிவிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். விக்ரமபாகு கருணாரத்ன “முன்னைய ஆட்சியின்போது நடந்த மனித உரிமை மீறல்களால் எமக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இல்லாமல்போனது. மீள எமக்கு அது கிடைக்கவில்லை. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு […]

அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தென்கொரியா வருகை: வடகொரியா ராணுவ பயிற்சியால் போர் பதட்டம்

அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் தென் கொரியா வருகையாலும், வட கொரியா ராணுவ பயிற்சியாலும் கொரிய தீபகற்பத்தில் போர்பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஐ.நா.வின் உத்தரவு மற்றும் பொருளாதார தடையை எதிர்த்து வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியா மீது தீவிர நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறார். தற்போது […]

வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ள ஏவுகணை எதிர்ப்பு கவன் அமைப்பதில் அமெரிக்கா தீவிரம்

ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கி அழிப்பதற்காக வட கொரியா ஒத்திகை பார்த்துள்ள நிலையில் வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ளும் வகையில் ஏவுகணை தடுப்பு கவன் அமைக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச […]

சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்புடன் தொடர்புடைய புதிய பதவி

சிறிலங்காவின் முப்படைகளுடனும் இணைந்து செயற்படும் வகையில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு புதியதொரு பதவியை உருவாக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியின் இந்த யோசனைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதாக, அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய வகையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள பதவியை பீல்ட் மார்ஷல் சரத் […]