தந்தை செல்வாவின் 40ஆவது நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தந்தை செல்வநாயகத்தின் 40ஆம் ஆண்டு நினைவு தினம் வுனியா பிரதான மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள நினைவுத்தூபியில், இன்றைய தினம் (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில், தந்தை செல்வநாயகத்தின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வர்த்தகர் சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *