Other News

கொழும்பில் டெங்கு நோய் தொற்று அதிகரிப்பு

கொழும்பின் பல்வேறு இடங்களில் டெங்கு நோய், வைரஸ் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவல் அதிகரித்துள்ளதால் மக்களை அவதாதனமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. பாரிய வறட்சிக்கு பின்னர் கடுமையான மழை பொழிந்ததால் குப்பை கூலங்களில் கழிவு அகற்றப்படாமை, கால்வாய்களில் அசுத்தமான நீர் பெருக்கம் மற்றும் சூழல் சுத்தமின்மையால் இவ்வாறு நோய்கள் பரவி வருகின்றன. குறிப்பாக மத்திய கொழும்பின் பல்வேறு இடங்களில் நோய் தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு […]

சீனாவில் மழலையர் பள்ளியில் குண்டுவெடிப்பு: 7 பேர் உயிரிழப்பு

சீனாவில் மழலையர் பள்ளியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 59 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணம், ஜுஜோ பகுதியில் பிரபலமான நர்சரி பள்ளியில் இருந்து இன்று மாலை குழந்தைகளை பெற்றோர் அழைத்துக் கொண்டு சென்றனர். அப்போது பள்ளியின் பிரதான வாயில் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதனால், குழந்தைகளும் பெற்றோரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தனர். பலரது உடல் உறுப்புகள் […]

கியூப ராணுவத்திற்கு அமெரிக்காவின் நிதியுதவியை நிறுத்தும் திட்டம்: டிரம்ப் இன்று அறிவிக்கிறார்

கியூப ராணுவத்திற்கான அமெரிக்கா வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்தும் திட்டம் அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அறிவிக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது. பின்னர், அமெரிக்க அதிபர் […]

செர்பியாவில் ஓரினச் சேர்க்கை பெண் பிரதமர்: அதிபர் நியமனம் செய்தார்

செர்பியாவில் புதிய பிரதமராக ஓரினச் சேர்க்கையாளர் அனா பிரபிக் என்ற பெண் தேர்வு செய்யப்பட்டார். இவரை அதிபர் அலெக்சாண்டர் வுசிக் நியமனம் செய்தார். செர்பியா நாட்டின் புதிய அதிபராக அலெக்சாண்டர் வுசிக் சமீபத்தில் பதவி ஏற்றார். அதை தொடர்ந்து புதிய பிரதமர் தேர்வு நடைபெற்றது. அதில் பலரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் புதிய பிரதமராக அனா பிரபிக் என்ற பெண் தேர்வு செய்யப்பட்டார். இவரை அதிபர் அலெக்சாண்டர் வுசிக் நியமனம் […]

வவுனியாவில் தமிழரசுக்கட்சிக்கு எதிராகச் சுவரொட்டிகள்!

வவுனியா மாவட்டத்தின் நகரின் சில பிரதேசங்களில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி’ எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வன்னி மக்கள் எனும் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி, அரசுக்கூட்டுச்சதியை முறியடிப்போம்’ எனும் தமிழரசுக்கட்சிக்கு எதிரான வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக்கட்சியினாலும், சில வடக்கு மாகாணசபை உறுப்பினர்களாலும் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை எதிர்த்து, முதலமைச்சருக்கு ஆதரவாகத் தொடர்ச்சியாகப் பல இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. […]

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு காலதாமதமின்றி கூட்டப்பட வேண்டும்: ரெலோ வலியுறுத்தல்

வட. மாகாண சபையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு சுமூகமான தீர்வை எட்டும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் காலதாமதமின்றி உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என ரெலோ அமைப்பின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறிகாந்தா வலியுறுத்தியுள்ளார். வட. மாகாண சபையில் எழுந்துள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் கலந்தாலோசிக்கும் வகையில் ரெலோ அமைப்பு நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுத்த ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் […]

குற்றவாளிகளை காப்பாற்றும் வடக்கு முதல்வரின் தீர்மானத்தை ஏற்க முடியாது: சுமந்திரன்

வடக்கு முதல்வர் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சித்தமையாலேயே அவருக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக தமிழரசு கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு முதல்வர் சி.வி.க்கு எதிராக தமிழரசு கட்சியினரால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கையில் இரு அமைச்சர்கள் மட்டுமே குற்றவாளிகள் எனவும் ஏனைய […]

முதல்வருக்கு ஆதரவாக குடா நாட்டில் ஹர்த்தால்

வட. மாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வட. மாகாணம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மருந்தகங்கள் மற்றும் சில உணவகங்கள் தவிர்ந்து ஏனைய வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, வட. மாகாணத்தில் முதலமைச்சருக்கு ஆதரவு வெளிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, போக்குவரத்தும் முழுமையாக தடைப்பட்டுள்ளதால் தூர பிரதேசங்களுக்கு பயணிக்கும் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சருக்கு எதிராக […]

இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க அரசாங்கம் தீர்மானம்

இந்திய கடற்தொழிலாளர்களின் படகுகளை விடுவிக்கவுள்ளதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. தமிழக கடற்தொழிலாளர்கள் மீண்டும் எல்லைத்தாண்டக்கூடாது என்ற கடும் நிபந்தனைக்கு அமையவே படகுகள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 2015ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்ட 42 படகுகள் விடுவிக்கப்படவுள்ளன. கைப்பற்றப்பட்ட காலத்தின் அடிப்படையில் ஏனைய படகுகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என்றும் கடற்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

என்னை பதவியிலிருந்து நீக்கும் சதித்திட்டம் கொழும்பிலேயே தீட்டப்பட்டது : சி.வி

என்னை பதவியிலிருந்து நீக்கும் சதித்திட்டம் கொழும்பிலேயே தீட்டப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். வடமாகாண முதலமைச்சரை பதவியிலிருந்து அகற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிக்கும் வகையிலும் இன்று குடா நாட்டில் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது. இந்த பேரணி முதலமைச்சரின் இல்லத்தை அடைந்த போது பேரணி முன்னிலையில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தான் வடமாகாண முதலமைச்சர் பதிவியில் நீடிக்க போவதில்லை என்பதை அரசாங்கத்தின் […]