“மைத்திரி – மஹிந்த கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச களமிறங்கினால் அவர் படுதோல்வியடைவது உறுதி. அதேவேளை, ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாழ்வும் முடிவுக்கு வந்துவிடும்.”இவ்வாறு பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் எமது கட்சியின் உயர்பீடம் அறிவிக்கும். எவர் களமிறங்கினாலும் ஐக்கிய தேசியக் கட்சிதான் வெற்றிவாகைசூடும்” எனவும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் […]
இலங்கை செய்திகள்
வரவு செலவுத்திட்ட இறுதி நாள் குழுநிலை விவாதம்
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான இறுதி நாளுக்குரிய குழுநிலை விவாதம் இன்று நடைபெறவுள்ளது. இன்று காலை 9.30 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன் வரவு செலவு திட்டம் மீதான இறுதி நாளுக்குரிய குழுநிலை விவாதம் 10 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இலங்கையில் முச்சக்கர வண்டி பயன்பாட்டுக்கு தடை!
இலங்கையில் வீதிகளில் பயணிக்கும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வாறு பயன்பாட்டில் உள்ள முச்சக்கர வண்டிகளை குறைத்து சிறிய மோட்டார் வாகனங்களை அறிமுகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். தற்போது பயன்பாட்டிலுள்ள two stroke இயந்திரங்களை முச்சக்கர வண்டிகளை உரிமையாளர்களிடமிருந்து அரசாங்கம் மீளவும் பெற்றுக் அழிக்கவுள்ளது. அல்லது பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு மீள் சூழற்சி மேற்கொள்ள வழங்க […]
கொழும்பு அரசியலில் தொடரும் குழப்பம்!
சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலோ அல்லது சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி சார்பிலோ அரச தலைவர் வேட்பாளர் தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை. இரு கட்சிகளும் இது தொடர்பில் பேச்சு நடத்துகின்றனர். அந்தப் பேச்சு சுமுகமாகப் போகின்றது. இறுதியில் தீர்க்கமான முடிவெடுக்கப்படும். இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தடாலடியாக நேற்றுத் தெரிவித்திருக்கின்றார். அரச தலைவர் வேட்பாளராக கோத்தபாய களமிறங்குவார் என்று அதற்கு மகிந்த ராஜபக்ச இணங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் மைத்திரிபால […]
வலி.வடக்கில் மீண்டும் நில ஆக்கிரமிப்பா?
வலிகாமம் வடக்குப் பகுதியில் கடற்படைத்தளம் அமைப்பதற்கும், சுற்றுலாத்துறை அதிகாரசபைக்குமாக சுகாதாரத் திணைக்களத்தினதும் தனியாரினதும் காணிகளை சுவீகரிக்க அரசு முயல்வதாக அறிகின்றோம். இதுதொடர்பில் நானும் சுமந்திரனும் பிரதமரிடத்தில் தெரிவித்திருந்தோம். இன்றும் நான் இது தொடர்பாக பிரதமரிடத்தில் தொலைபேசியில் உரையாடியிருந்தேன். அவர் தடுத்து நிறுத்துவதாக உறுதியளித்திருந்தார். நில ஆக்கிரமிப்பு தொடர்பாக என்னால் தொடரப்பட்ட வழக்கு தற்போதும் உயர் நீதிமன்றத்தில் உள்ளது;. இந்த விடயத்தை சட்ட ரீதியாகவும் நாம் அணுகுவோம். மீறி 22 ஆம் […]
சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து வெளியான தகவல்
நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான பணிகள் அனைத்தும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம் நாடு முழுவதிலும் 4 ஆயிரத்து 661 மத்திய நிலையங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாவை சேனாதிராசாவை நோில் கிண்டலடித்த சீ.வி.விக்னேஸ்வரன்…
யாழ்.பல்கலைக்கழக மாணவா்களால் நேற்று நடாத்தப்பட்ட கவனயீா்ப்பு போராட்டத்தில் வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரனும் மாவை சேனாதிராசாவும் நேருக்கு நோ் சந்தித்துக் கொண்டனா். இதன்போது கனகாலம் நித்திரையோ? என சீ.வி.விக்னேஸ்வரன் கேட்டுள்ளாா். இதற்கு பதிலளித்த மாவை சேனாதிராசா நாங்கள் விழிப்பாகத்தான் இருக்கிறோம். எங்கள் போராட்ட வரலாறு உங்களுக்கு தொியும்தானே? என பதிலளித்துள்ளாா்.
அரசு காணிகளை விற்பதாக போலி பிரசாரங்கள்!
இலங்கை இராணுவத் தலைமையக காணியை வெளிநாட்டுக்கு விற்ற தேசப்பற்றாளர்கள் என தம்மை இனங்காட்டிக்கொள்பவர்கள், தற்போதைய அரசாங்கமே அரச காணிகளை விற்பதாக போலி பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறு அரச காணிகள் எதனையும் விற்கவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னைய மகிந்த அரசின் காலத்தில் கொழும்பு காலி வீதியிலிருந்த பாதுகாப்பு அமைச்சின் பெருமளவு காணிகள் சீன அரசிற்கு விற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் […]
கிழக்கில் கால் பதித்த தமிழ் மக்கள் கூட்டணி!
வடக்கினை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணி கால் பதித்துள்ளது. அவ்வகையில் கூட்டமைப்பின் கோட்டை என வர்ணிக்கப்படும் பட்டிருப்புத் தொகுதியிலே முதலாவது மக்கள் சந்திப்பு இன்று நடந்துள்ளது. இச்சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். சந்திப்புக்கள் கிழக்கு மாகாணத்தில் தொடருமென தமிழ் மக்கள் கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. […]
மாங்குளத்தில் ஆதிசிவன் சிலை, திருக்குடமுழுக்கு…
முல்லைத்தீவு- மாங்குளம் பகுதியில் சிவஞான சித்தா்பீட வளாகத்தில் ஆதிசிவன் சிலை ஒ ன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், தமிழில் திருக்குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் பாாியளவில் குடியேற்றங்கள் மற்றும் திட்டமிட்ட பௌத்தமய மாக்கல் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஆதிசிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.





