Other News

முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்துகொள்ளுமா மு.கா?

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ள முஸ்லிம் கூட்டமைப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் இணைத்துக்கொள்வதற்கான பேச்சுகள் இடம்பெறவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. முஸ்லிம் கூட்டமைப்பை ஆரம்பிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  மற்றும் ஹசனலி தரப்பினர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பேச்சு எதிர்வரும் கிழமைகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது. கொழும்பில் நடைபெறவுள்ள பேச்சு முடிந்ததன் பின்னர் ஸ்ரீலங்கா […]

புதிய அரசமைப்பு அறவே வேண்டாம்! – நடவடிக்கைளை உடனே நிறுத்தக் கோருகிறார் எஸ்.பி. 

“புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான மக்கள் ஆணை இந்த அரசுக்கு இல்லை. மக்கள் ஆணை இல்லாத ஒரு செயலை எம்மால் செய்யமுடியாது. ஆகவே, புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியை இத்தோடு நிறுத்திக்கொள்வதுதான் நல்லது.” – இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவருவதற்கான ஆணையை ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சியும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடம் கோரின. ஆனால், எந்தக் […]

2020இல் ஜனாதிபதியாக கோட்டா: அச்சமடைகின்றது தேசிய அரசு! – அதனாலேயே அவரைக் கைதுசெய்ய திட்டம் என்கிறார் மஹிந்தானந்த எம்.பி.

“2020ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போகின்றார் என்ற பயத்தின் காரணமாக அவரைக் கைதுசெய்து சிறையிலடைப்பதற்கு தேசிய அரசு திட்டமிட்டுள்ளது.”  – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “மஹிந்த அணிக்கான செல்வாக்கு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருவதால் அந்தச் செல்வாக்கை எப்படியாவது குறைத்துவிடுவதற்கு தேசிய அரசு திட்டமிடுகின்றது. அந்தச் செல்வாக்குக்குப் பயந்துதான் உள்ளூராட்சி சபைத் தேர்தலை […]

போர்க்குற்ற விசாரணை இலங்கையில் படுதோல்வி! – அரசின் போக்குக் குறித்து ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் காட்டம்

ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற விடயத்தில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் முடக்க நிலைக்குள்ளாகியுள்ளதாகத் தெரிகின்றதென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மனித உரிமைககள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் பணிமனையில் நேற்று மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய நாடுகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் […]

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதை தொடர்கின்றது! – உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டம் குற்றச்சாட்டு

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அரசின் சித்திரவதையும், பாலியல் துஷ்பிரயோகமும் தொடர்கின்றன என்று உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டம் குற்றம்சாட்டியுள்ளது. பாதுகாப்புப் படையினர் தமிழர்களைக் கடத்துவதும், சித்திரவதை செய்வதும் புதிய அரசு பதவியேற்று 30 மாதங்கள் கடந்தும் தொடர்கின்றது எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் தொடரும் தமிழர்களுக்கு எதிரான இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்குப் புதிய அரசும் தவறியுள்ளது எனவும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் […]

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் டிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம்

அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு விவகாரத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி அதிபர் டிரம்ப் மீது செனட் சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு விவகாரத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி அதிபர் டிரம்ப் மீது செனட் சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரணை […]

தேர்தல் தோல்வியை அறிந்ததும் கண்ணீர் விட்டு அழுத இங்கிலாந்து பெண் பிரதமர்

தேர்தல் முடிவு எதிர் மறையாக வந்தபோது அதை தாங்கி கொள்ள முடியாமல் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கண்ணீர் விட்டு கதறி அழுதார். இங்கிலாந்தில் கடந்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. 2 ஆண்டுகள் இருக்கும் போதே பிரதமர் தெரசா மே முன்கூட்டியே தேர்தல் நடத்தினார். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் கூடுதல் மெஜாரிட்டியுடன் தெரசா மே ஆட்சியை பிடிப்பார் என்று முடிவு வெளியானது. ஆனால் எதிர்பார்த்தது போன்று […]

மனித உரிமை ஆர்வலர் இறுதி சடங்கில் பங்கேற்க நோபல் பரிசு கமிட்டி தலைவருக்கு சீனா அனுமதி மறுப்பு

சீனாவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு புற்றுநோயால் மரணமடைந்த மனித உரிமை ஆர்வலர் இறுதி சடங்கில் பங்கேற்க நோபல் பரிசு கமிட்டி தலைவருக்கு சீனா தூதரகம் அனுமதி மறுத்துள்ளது. மனித உரிமை ஆர்வலர் இறுதி சடங்கில் பங்கேற்க நோபல் பரிசு கமிட்டி தலைவருக்கு சீனா அனுமதி மறுப்பு ஆம்ஸ்டர்டாம்: சீனாவில் ஜனநாயகம் தொடர்பான ‘சார்ட்டெர் 8’ என்ற நூலை கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியிட்ட காரணத்துக்காக அந்நாட்டின் பிரபல எழுத்தாளரான லியு […]

பங்களாதேஷ் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி

பங்களாதேஷிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹஸீனா இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இரு தலைவர்களுக்குமிடையில் சுமுகமான கலந்துரையாடலை தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. இலங்கை மற்றும் பங்களாதேஷிற்கு இடையில் வர்த்தக உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பிலும் விஷேட பொருளாதார வலயமொன்றை உருவாக்கிக் கொள்வது தொடர்பிலும் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

முன்னாள் கடற்படை பேச்சாளருக்கு விளக்கமறியல்

கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கப்டன் டி.கே.பி.தஸநாயக்கவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த புதன்கிழமை முன்னாள் கடற்படை பேச்சாளர் டீ.கே.பி. திசாநாயக்க கைது செய்யப்பட்டார். அதன்படி இன்று(வெள்ளிக்கிழமை) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 19ஆம் திகதி […]