Other News

இன்றைய ராசிபலன் 07.12.2017

மேஷம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இரட்டிப்பு […]

தம்பிப்பிள்ளை அருணாசலம்

மாகி­யப்­பு­லம் வீதி, ஏழாலை வடக்­கி­னைப் பிறப்­பி­ட­மா­க­வும், மாணிக்­கர் வீதி, இணு­வில் கிழக்­கினை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட தம்­பிப்­பிள்ளை அருணா­ச­லம் 06.12.2017 புதன்­கி­ழமை கால­மா­னார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான தம்­பிப்­பிள்ளை – சிதம்­ப­ரம் தம்­ப­தி­க­ளின் பாச­மிகு மக­னும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான முத்­தையா – செல்­லாட்சி தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும், சோதிப்­பிள்­ளை­யின் அன்­புக் கண­வ­ரும், காலஞ்­சென்ற பார்­வ­தி­யின் அன்­புத் தம்­பி­யும், நாகேஸ்­வரி, திரு­ஞா­ன­செ­ல­்வம் (இந்­தியா), ஞான­காந்­தன் (ஜேர்­மனி), ஞான­தாஸ் (சுவிஸ்), யோகேஸ்­வரி (சுவிஸ்) ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யும், […]

சிங்கப்பூர் மருத்துவமனையில் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைப்பாடு காரணமாக, கடந்த சில மாதங்களாகவே தீவிர அரசியலில் இருந்து விஜயகாந்த் ஒதுங்கியிருக்கிறார். நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கூட தொலைக்காட்சி பேட்டிகளின் போது கூட கோர்வையாக பேச முடியாமல் அவர் திணறுகிறார். அந்நிலையில், கடந்த 28ம் தேதி விமானம் மூலம், சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் சென்றார். வழக்கமாக வேட்டி, சட்டையில் செல்லும் விஜயகாந்த் […]

தாய்க்கும் மகளுக்கும் ஒரே கணவர்

வங்கதேசத்தில் பின்பற்றப்படும் வினோத பாரம்பரியம் ஒன்று அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், தாயும் மகளும் ஒரே ஆணை திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் அது. வங்கதேசத்தில் உள்ள மாண்டி என்ற பழங்குடியினத்தை சேர்ந்த விதவை பெண்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திருமண முறையால் பதிக்கப்பட்ட மிட்டாமோனி என்ற பெண் ஒருவர் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எனது தாயின் இரண்டாவது கணவர், அதாவது எனது […]

தமிழகத்திற்கு கனமழை இல்லை

அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னத்தால் இன்னும் 2 நாட்களுக்கு தமிழகத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் ஓகி புயலால் கன்னியாகுமாரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது. அந்நிலையில், மேலும் ஒரு புயல் உருவாகும் எனவும், அதனால், தமிழகம் குறிப்பாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என செய்திகள் […]

வெளியேறினார் லட்சுமி!

செல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் இருந்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியேறுவது போல் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷண் ஜீ. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பல வருடங்களாக நடத்தி வருகிறார். குடும்பத்தில் உள்ள பிரச்சினை, பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என அனைத்தும் அந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் பங்கு பெறும் நபர்களுக்கு தன்னுடைய அறிவுரைகளை லட்சுமி ராமகிருஷ்ணன் வழங்குகிறார். இதில் அவர் பேசும் ‘என்னம்மா […]

பியருக்குச் சண்டை- குடும்பத்தலைவர் கொலை!

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றின் போது ஒருவர், பியர் மதுபான போத்தலால் குத்தப்பட்டு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நாவலப்பிட்டி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று முற்பகல் இடம்பெற்றது. உயிரிழந்தவரின் சடலம்  பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு இரட்டைவாய்க்காலில் வெடிபொருள்கள் வெடிப்பு!!

முல்லைத்தீவு, இரட்டைவாய்க்காலில் இன்று மாலை வெடிபொருள்கள் வெடித்ததால் மக்கள் மத்தியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. இனந்தெரியாதவர்களால் மூட்டப்பட்ட தீயால் போரில் கைவிடப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்தன என்று கூறப்படுகின்றது. புதுமாத்தளன், ஆனந்தபுரம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் இறுதிப்போரில் கைவிடப்பட்ட ஆயுதங்கள் இன்னமும் மீட்கப்படாது காணப்படுகின்றன என்று மக்கள் சுட்டிக்காட்டினர்.

வெற்றி, தோல்வியின்றி நிறைவுற்ற மூன்றாவது டெஸ்ட்

இலங்கை – இந்திய அணிகளுக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி இனிங்ஸில், 410 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு இலங்கை அணி விளையாடியது. ஐந்து விக்கட்களை இழந்து 299 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் போட்டி நிறைவுபெற்றது. இலங்கை அணியின் அறிமுக வீரர் ரோஷன் சில்வா 154 பந்துகளில் 74 ஓட்டங்களையும் நிரோஷன் டிக்வெல்ல 72 பந்துகளில் 44 ஓட்டங்களையும் பெற்றிருந்த […]