இலங்கையின் அண்மைக்கால அழிவுகளுக்கு எமது நாட்டின் காபன் துகள்கள் அதிகரித்த தரம் குறைந்த எரிபொருட்களே காரணமாகும். நிலக்கரி, மசகு எண்ணெய் என்பவற்றின் பாவனையே சூழலை பாதித்துள்ளதாக பாரிய நகர் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், உலகம் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றது. சூழலியல் பிரச்சினை காரணமாக உலகில் பல்வேறு நாடுகளில் […]
Other News
கருத்து கணிப்பு 2017
[poll id=”3″]
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இயக்குநர் பாலசந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நேற்று தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இது மசூலிபட்டினத்திற்கு தென்கிழக்கே 1160 […]
ஆர்கே நகரில் விஷால் போட்டியிடுவது அதிமுகவுக்கு..
[poll id=”2″]
காற்றின் வேகம் அதிகரிக்கும்!
தெற்கு அந்தமான் தீவுகளில், இலங்கையிலிருந்து 900 கிலோ மீற்றர் தொலைவில் குறைந்த தாழமுக்கம் நேற்று மாலை நிலைகொண்டிருந்தது. இந்தக் குறைந்த தாழமுக்கம் காரணமாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் காற்றின் வேகம் நேற்றைய தினத்தை விட அதிகமாக இருக்கும். இவ்வாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பிமேரலால் தெரிவித்தார். தெற்கு அந்தமான் தீவுகளில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. நேற்றுமுன்தினம் […]
குளத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!
முல்லைத்தீவு மாங்குளம், மதகு வைத்த குளத்திலிருந்து ஆண் ஒருவர் சடலமாக நேற்று நண்பகல் மீட்கப்பட்டார். அதே இடத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான காளியண்ணன் சூரியகுமார் (வயது – 39)என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். சூரியகுமாரை நீண்ட நேரமாக் காணவில்லை என அவரது உறவினர்கள் தேடினர். வீட்டின் அருகில் உள்ள மதகு வைத்த குளக் கரையோரமாக அவரின் துவிச்சக்கர வண்டியும், அவர் அணிந்திருந்த பாதணிகளும் காணப்பட்டன. இதை அடுத்து குளத்தினுள் […]
மகனுடன் சேர்ந்து கணவரை அடித்துக் கொன்ற பெண்…!
பணப் பிரச்னையால் விவசாயி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் அருகே என்.புதுப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ். இவர் தனது மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், விவசாயி செல்வராஜ் அரசின் தொகுப்பு வீடு திட்டத்தின் மூலம் வீடு கட்டி உள்ளார். இதற்கு மானியமாக 55 ஆயிரம் ரூபாய் அவரது வங்கிக் […]
இசையமைப்பாளர் ஆதித்யன் திடீர் மரணம்…
பிரபல தமிழ் சினிமா இசையமைப்பாளர் ஆதித்யன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். நடிகர் கார்த்திக் நடித்த அமரன் தொடங்கி, சிம்ரன் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி வரை 25 படங்களுக்கும் மேல் இசையமைத்தவர் ஆதித்யன். இவர் இசையமைத்ததில் அமரன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றன. அதன்பின் சினிமாவிலிருந்து ஒதுங்கி தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சி செய்து கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் மீடியாக்களிலிருந்து ஒதுங்கி இருந்த அவர் உடல் நலக்குறைபாடு […]
வேறொரு சுயேட்சைக்கு ஆதரவு தருவேன்
ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய விஷாலின் வேட்புமனு நேற்று நிராகரிக்கப்பட்ட நிலையில் அவருடைய அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே அரசியல் தலைவர்கள் மற்றும் விமர்சகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் இன்று கமல்ஹாசனை சந்திக்கும் விஷால், அதனையடுத்து தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்கவுள்ளார். மேலும் அவர் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஒருவேளை ஆர்.கே.நகரில் […]
விஷால் வேட்புமனு மீண்டும் நிராகரிப்பு!
நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற செய்தி வெளிவந்ததில் இருந்தே ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கதிகலங்கியது. எப்படியாவது விஷாலை போட்டியில் இருந்து விலக்கி விட வேண்டும் என்பதில் இருகட்சிகளும் ஒன்றிணைந்தது. விஷாலின் வேட்புமனு நேற்று பரிசீலனைக்கு வந்தபோது திமுகவும், அதிமுகவும் இணைந்து எதிர்ப்பு தெரிவித்ததில் இருந்தே இரு கட்சிகளின் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது. இந்த நிலையில் முதலில் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்ததாக கூறிய தேர்தல் அதிகாரி பின்னர் அவரது […]





