Other News

தினகரனுக்கு எதிராக நாளை இரவுக்குள் வெடிக்க இருக்கும் டைம்பாம்

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அபார வெற்றிபெற்றார். அவரது வெற்றிக்கு பின்னர் அரசியல் களத்தில் தினகரன் முக்கிய நபராக பார்க்கப்படுகிறார். தினகரனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனன் அதிக வாக்குகள் பின்தங்கி தோல்வியை தழுவினார். இருப்பினும் அவருக்கு மட்டுமே டெப்பாசிட் தொகை கிடைத்தது. திமுக உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெப்பாசிட்டை இழந்தினர். தேசிய கட்சியான பாஜக நோட்டாவை […]

கருணாநிதியை இன்று சந்திக்கும் ரஜினி

அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துவிட்ட நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து அவர் வாழ்த்து பெறுகிறார். தான் அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து விட்டார். மேலும், தனிக்கட்சி தொடங்கி, அடுத்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். தற்போது அவரது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 5 நாட்கள் தனது ரசிகர்களை சந்தித்து உரையாடிய […]

ஒரே நாளில் 50 லட்சம் உறுப்பினர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 31ஆம் தேதி அரசியல் அறிவிப்பை அறிவித்துவிட்டு, பின்னர் அடுத்த நாளே இணையதளம் மற்றும் செயலி மூலம் மன்றத்தின் உறுப்பினர் ஆக்கும் வசதியை கொண்டு வந்தார். இந்த மன்றம் தான் விரைவில் கட்சியாக மாற போகிறது. இந்த நிலையில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட மன்ற உறுப்பினர்களின் சேர்க்கையில் ஒரே நாளில் ஐம்பது லட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். இன்னும் பலர் பதிவு செய்து கொண்டே வருவதால் […]

இன்றைய ராசிபலன் 03.01.2018

மேஷம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புது வேலை அமை யும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர் கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் […]

ரஜினியின் முடிவு தவறாகத்தான் முடியும்

சென்னை ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் புத்துணர்ச்சியுடன் களமிறங்குவார். அதிமுகவை தோற்கடித்து, திமுகவை டெபாசிட் இழக்க செய்த தினகரனுக்கு இந்த இரு கட்சிகளையும் தமிழக அளவில் அனைத்து தொகுதிகளிலும் எதிர்ப்பதில் பெரிய பிரச்சனை இருக்காது. இந்த நிலையில் திடீரென ரஜினி களத்தில் இறங்கியுள்ளதால் அவருக்கு இன்னொரு போட்டியாளர் உருவாகியுள்ளார். தற்போது அவரையும் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்போதிருந்தே ரஜினியை […]

போர்ப்பாதிப்புகளில் மாற்றங்கள் இல்லை

நீண்­ட­கா­லப் போரால் சொல்­லொண்ணா துன்­பங்­களை அனு­ப­வித்த மக்­க­ளின் மனங்­களை ஆற்­றுப்­ப­டுத்­தக் கூடிய மாற்­றங்­கள் இன்­ன­மும் ஏற்­ப­ட­வில்லை – என அமெ­ரிக்க மிசன் திருச்­ச­பை­யின் முன்­னாள் தலை­வர் அருட்­தந்தை ஈனோக் புனி­த­ராஜ் தெரி­வித்­தார். அராலி தேவா­ல­யத்­தில் புது­வ­ருட நள் ளி­ர­வுத் திருப்­ப­லியை ஒப்­புக்­கொ­டுத்து மறை­யுரை ஆற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார். நாட்­டில் ஆயு­த­மோ­தல் முடி­வுக்கு வந்து எட்டு ஆண்­டு­கள் கடந்­து­விட்­டன. தற்­போ­தைய அரசு ஆட்­சிக்கு வந்து எதிர்­வ­ரும் எட்­டாம் திக­தி­யு­டன் நான்­கா­வது […]

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் பிரச்­சினை பரப்புரைகளில் தவிர்த்து கொள்­ளப்­பட வேண்­டும்

வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வைப் பெற்­றுத்­தர முடி­யா­த­வர்­கள் இந்­தப் பிரச்­சி­னையை தேர்­தல் காலங்­க­ளில் பயன்­ப­டுத்­து­வ­தனை தவிர்த்­துக்­கொள்ள வேண்­டும். பயன்­ப­டுத்­து­வதை நாங்­கள் ஒரு­போ­தும் ஏற்­றுக்­கொள்­ள­மாட்­டோம் என கிளி­நொச்சி வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் சங்கத்தின் தலைவி தெரி­வித்­துள்­ளார். வடக்கு கிழக்கு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் சங்­கத்­தி­னது தலைவி யோக­ராசா கன­க­ரஞ்­சனி ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கும் போதே இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: போர் முடி­வுக்கு வந்து எட்டு வரு­டங்­களை […]

நீர்வேலியில் சற்றுமுன்னர் விபத்து: இருவர் உயிரிழப்பு!!

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு முன்பாக சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டியும் கயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்துள்ளது. விபத்தில் பருத்தித்துறைப் பகுதியைச் சேர்ந்த இருவரே உயிரிழந்தனர். அவர்களில் 5 வயதுச் சிறுமியும் உயிரிழந்தார் எனத் தெரியவருகிறது.

சுவிடனில் வித்தியாசமான சூரிய கதிர் எதிரொளி: வைரல் வீடியோ!!

சூரியனின் கதிர்கள் பனிக்கட்டிகள் மீது பட்டு எதிரொளிக்கும் போது சூரியனை சுற்றி ஒளிவட்டம் தெரியும். இது மிகவும் சாதரணமான ஒன்றுதான். ஆனாலும், சுவீடன் நாட்டில் காணப்படும் ஒளிவட்டம் வித்தியாசமானதாக இருக்கும். அதாவது, சுவீடனில் நடுவில் சூரியனும் அதன் வலது மற்றும் இடது பக்கத்தில் சூரியனின் பிரதிபலிப்பும் தெரியும். இந்நிலையில், இதற்கான அறிவியல் காரணத்தை நாசா விளக்கியுள்ளது. நாசா கூறியுள்ளதாவது, ஒளிவட்டமானது சூரியனை பெரிய லென்சால் பார்ப்பது போல இருக்கும். அதாவது […]

கணவனின் சிகிச்சைக்காக பெற்ற குழந்தையை விற்ற மனைவி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவரின் சிகிச்சைக்கு பணமில்லாததால் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்ஸ்வரூப் மௌர்யா. இவரது மனைவி சஞ்சு தேவி. இவர்களுக்கு 15 நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கிய மௌர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் பலத்த காயமடைந்த கணவருக்கு சிகிச்சை அளிக்க பணமில்லாமல் சஞ்சு தேவி […]