Other News

சொத்துக்காக பெற்ற தாயின் தலையை துண்டித்து கொலை செய்த மகன்

புதுக்கோட்டை அருகே சொத்துத் தகராறில் பெற்ற தாயின் தலையை அவரது மகனே வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மறவன்பட்டியைச் சேர்ந்தவர் ராணி(54). இவரது மகன் ஆனந்த்(30). சொத்து தொடர்பாக ராணிக்கும், ஆனந்துக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இன்று காலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த், தனது தாய் என்றும் பாராமல் ராணியின் தலையை துண்டித்து காவல் […]

தேவை ஏற்பட்டால் அரசியலில் பிரவேசம் : கோட்டா

மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வரவேண்டிய அவசியமில்லை. எந்த வழியில் வேண்டுமானாலும் சேவை செய்ய முடியுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், தேவை ஏற்பட்டால் அரசியலில் நுழைவது குறித்து தீர்மானிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார். கோட்டாவின் அரசியல் பிரவேசம் தொடர்பாக அண்மைய காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். அரசியலில் நுழைவது தொடர்பாக […]

காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: ராஜ்நாத் சிங் எங்கே?

இந்திய ராணுவம் இல்லாத பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் இந்தியவை சேர்ந்த 5 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் இருவருக்கு மோசமாக காயம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் அருகே இருக்கும் பூன்ச் பகுதியில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதில் 5 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். காஷ்மீர் தொடர்பான பிரச்சைனை இந்தியா […]

இயற்கையாக கிடைக்கக்கூடிய கள்ளின் மருத்துவப் பயன்கள் என்ன தெரியுமா..!

தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் கள் முக்கியத்துவம் பெறுகிறது. கள்ளின் மருத்துவப் பயன்களை தெளிவாக பதிவு செய்து சென்றுள்ளனர் சித்தர்கள். சித்தர் பாடல்களின் பல இடங்களில் கள்ளின் மருத்துவ மகத்துவங்களை அறிந்துகொள்ள முடிகிறது. பனை மரத்து கள்ளால் ஆண்களுக்கு உடல் வலிமையையும், விந்து சக்தியும் அதிகரிக்கும் என அகத்தியர் குணப்பாடம் கூறுகிறது. பனை மரத்தின் பால் தெளுவு அல்லது தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். காலையில் வெறும் […]

100 தாமரை மொட்டுகளே...: தமிழிசை நம்பிக்கை

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பாஜக நிறைவேற்றும் – தமிழிசை

உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜக நிறைவேற்றும் என்றும் வரும் 30ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி அதிமுக கட்சியினர் பாஜகவை வெளிப்படையாக எதிர்த்து வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக பாஜக கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. தமிழக உரிமையை மீட்க பாஜக உறுதுணையாக இருக்கும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தார். மத்திய […]

நடராஜன் கவலைக்கிடம்

சசிகலா கணவர் நடராஜன் நெஞ்சு வலி காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே இவருக்கு உடலுறுப்பு மாற்று சிகிச்சை நடைபெற்றுள்ளது. நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கணவரை காண பரோல் வேண்டி மனு ஒன்றை பிறப்பித்துள்ளார். கணவரின் உடல் கவலைக்கிடமாக இருப்பதால் […]

தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டத்தில் கூட்டமைப்பு

2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான ஜெனீவா பிரேரணையை அமுல்படுத்துவதில் இலங்கை அரசு கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யவில்லை. இலங்கைக்கான கால அவகாசம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில் அரசு எதனையும் செய்யாது என்பது புரிகின்றது. எனவே, இந்தக் கட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசு தெரிவித்துள்ளது. ஜெனிவா கூட்டத் தொடரில் […]

மக்கள் விரும்பினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்? போன்சேகா

மக்கள் கோரிக்கை விடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட தயாராக இருப்பதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வரலாற்றில் சவால்களை ஏற்றுக்கொண்டவன் என்ற வகையில் மக்கள் வழங்கும் எந்த சவாலாக இருந்தாலும் அதனை புறந்தள்ளாது ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் பொன்சேகா கூறியுள்ளார். பொது வேட்பாளர் எண்ணக்கரு ஊடாக எதிர்பார்த்த விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை எனவும் இது தனது தனிப்பட்ட கருத்து. அன்று நான் வெற்றி பெற்றிருந்தால், சகல […]

மஹாசோன் பலகாயவுடன் புலனாய்வுப் பிரிவுக்கு தொடர்பு

மஹாசோன் பலகாய எனப்படும் அமைப்புடன் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் மஹாசோன் பலகாய என்னும் அமைப்பும் செயற்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த அமைப்புடன் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகளும், பொலிஸ் உயர் அதிகாரிகளும் தொடர்புகளை பேணியுள்ளமை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. மஹாசோன் பலகாய என்னும் அமைப்பின் பிரதானியாக அமித் வீரசிங்க என்ற […]

சட்டவிரோத செயற்பாடுகளால் பாதிக்கப்படுபவர்பளின் முறைப்பாடுகளை விசாரணைசெய்ய பொறிமுறை

காணாமல்போனோர் குடும்பங்களின் அங்கத்தவர்கள், மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்ட நபர்கள், மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நபர்கள் அடங்கலாக பொதுவான சட்டமுறையற்ற கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்கள் பற்றிய சம்பவங்களை சட்ட மற்றும் ஒழுங்கு அமைச்சு அவ்வப்போது அறிந்து கொண்டுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசு தனது சகல பிரஜைகளினதும் பாதுகாப்பை எப்பொழுதும் உறுதி செய்ய கடமைப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸாருக்கு […]