Other News

இன்றைய ராசிபலன் 18.03.2018

மேஷம்:  விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மதிப்புக் கூடும் நாள். மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்களின் வருகையால் […]

கட்சியில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத்துக்கு சி.ஆர்.சரஸ்வதி காட்டமான பதில்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற தனி அமைப்பை டிடிவி தினகரன் தொடங்கிய நிலையில் திராவிடத்தையும் அண்ணாவையும் டிடிவி விலக்கிவிட்டதாக கூறி சற்றுமுன் நாஞ்சில் சம்பத் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் நாஞ்சில் சம்பத்துக்கு ‘அம்மா முன்னேற்ற கழகத்தின் சி.ஆர்.சரஸ்வதி பதிலளித்துள்ளார். அவர் , ‘*திராவிடத்தை டிடிவி புறக்கணித்துவிட்டார் என்று நாஞ்சில் சம்பத் கூறும் காரணத்தை ஏற்க முடியாது. ஜெயலலிதாவை திராவிடத் தலைவியாகவே நாங்கள் பார்க்கிறோம்’ […]

அதிமுக பொதுச் செயலாளர்

ஜெயலலிதாவாக நடிக்க ஒருவர் கிடைத்துவிட்டார்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போவதாக இயக்குநர் ரவிரத்தினம் கூறியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க போவதாக இயக்குநர் ரவிரத்தினம் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பல மர்மங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது காதல் வாழக்கை, அவரது மறைவு உள்ளிட்ட பல மர்மங்கள் அவரது வாழ்க்கையில் உள்ளது குக்றிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் அந்த திரைப்படத்தில் இடம்பெறுமா என்பது கேள்வியாக உள்ளது. மேலும், ஜெயலலிதா […]

கமல்-விஷால் திடீர் சந்திப்பு

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2′ திரைப்படம் நேற்று சென்சார் சர்டிபிகேட் பெற்றுவிட்டதால் வெகுவிரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் தற்போது நடந்து வருவதால் ரிலீஸ் தேதி அறிவிக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் இன்று விஷாலை கமல் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் தனது விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்யும் வகையில் […]

கடலுக்கடியில் உணவகம்; அசத்தும் நார்வே

நார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. பொதுவாக அனைவருக்கும் பிடித்த ஒன்று கடற்கரை உணவங்கள். நார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. கடலுக்கு அடியில் 5 மீட்டர் ஆழத்தில் இந்த உணவகம் அமைந்திருக்கும். அடுத்த ஆண்டு இந்த உணவகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 100 வரை அமர்ந்து உணவருந்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

கிரீன் டீ தெரியும் கிரீன் காபியின் பலன்கள் தெரியுமா !

கிரீன் டீ என்பது பலருக்கும் தெரிந்த பானமாகும். உடல் எடையை குறைக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என இதன் பயன்கள் பற்றி பலர் அறிந்திருப்பார்கள். சரி, கிரீன் காபியை பற்றி தெரியுமா? அதன் அற்புத பயன்களை பற்றி கேள்விபட்டதுண்டா? கிரீன் காபி தயாரிக்கப்படும் விதைகளில் சாதா காபி விதையை விட குளோரோஜினிக் ஆசிட் அதிகளவில் அடங்கியுள்ளது. இதனால் இதை பருகுவதில் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன நீரிழிவு நோயைக் […]

ஆன்மிக இடமான இமயமலையில் அரசியல் குறித்து பேச விரும்பவில்லை

தனது குருவான பாபாவிடம் ஆசி பெறுவதற்காக ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, தமது இமயமலைப் பயணம் அன்றாட வாழ்க்கையைக் காட்டிலும் மாறுபட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். இமாச்சல பிரதேச மாநிலம் பாலம்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  தான் யாத்ரீகனாக இமயமலை வந்துள்ளதால், அரசியல் பற்றி இங்கு பேச விரும்பவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இன்றைய ராசிபலன் 17.03.2018

மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சிறப்பான நாள். ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை […]

ரஷ்யாவில் வைர மழை பொழிந்த விமானம்!

ரஷ்யாவில் புறப்பட்ட சரக்கு விமானத்தில் இருந்து வைர மற்றும் தங்கம் மழை போல் பொழிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் யாகுதியா பகுதியில் இருந்து புறப்பட்ட சரக்கு விமானத்தில் இருந்து சில நொடிகளில் தங்க கட்டிகள், பிளாட்டினம் மற்றும் வைரம் குவியல் குவியலாக மழை போன்று பொழிந்துள்ளது. உடனே விமானம் அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த சரக்கு விமானம் சுமார் 265 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பிலான […]

ஏர்செல் 50% வாடிக்கையாளர்கள் ஏர்டெல் பக்கம்

ஏர்செல் திவால் ஆனதும் வாடிக்கையாளர்கள் தங்களது ஏர்செல் மொபைல் எண்ணை மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு போர்ட் செய்து வருகின்றன. ஏர்செல் போர்ட்டிங் காரணமாக மற்ற நிறுவனங்கள் உற்சாகத்தில் உள்ளன. அந்த வகையில், தமிழ் நாடு மற்றும் சென்னையை சேர்ந்த சுமார் 15 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் நெட்வொர்க்-க்கு மாறியுள்ளனர். இந்த தகவலை ஏர்டெல் வெளியிட்டுள்ளது. அதாவது, ஏர்செல் நெட்வொர்க்-ல் இருந்து போர்ட் அவுட் செய்திருக்கும் வாடிக்கையாளர்களில் சுமார் 50% […]