உலக செய்திகள்

தென்கொரியாவில் அமெரிக்க படை தளத்தினை பார்வையிட்டார் டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுதங்களை தொடர்ந்து பரிசோதனை செய்து வருகிறார். இதற்கு அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. வடகொரியாவிடம் உள்ள அணு ஆயுதங்கள் அமெரிக்காவை தாக்க கூடிய வலிமை கொண்டவை என கிம் ஜாங் உன் கூறினார். இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 12 நாள் ஆசிய பயணத்தின் […]

கேட்டலோனியா தலைவருக்கு எதிராக சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பித்தது ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டிடம் இருந்து பிரிந்து சுதந்திரம் பெறுவதற்கான பிரகடனம், கேட்டலோனியா பிராந்திய பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதில் நடவடிக்கையாக, கார்லஸ் அரசை ஸ்பெயின் அரசு பதவியில் இருந்து அகற்றியது. கேட்டலோனியா, ஸ்பெயின் அரசின் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட கார்லஸ், தனது மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த பலருடன் பெல்ஜியத்தில் உள்ளார். அதே நேரத்தில் அங்கு தான் அரசியல் புகலிடம் கேட்க செல்லவில்லை என்று கூறினார். […]

2வது உஸ்பெகிஸ்தான் நபரை கண்டறிந்தனர் எப்.பி.ஐ. அதிகாரிகள்

நியூயார்க்கில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 2வது நபரை எப்.பி.ஐ. அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் லாரி ஒன்றை ஓட்டி வந்த மர்ம நபர் அதனை உலக வர்த்தக மைய நினைவகம் அருகே பொதுமக்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இந்த தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தினை அடுத்து தப்பியோட முயன்ற அவரை போலீசார் சுட்டு பிடித்தனர். அவரிடம் […]

நியூயார்க் பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு முழு உதவியை செய்வோம் என உஸ்பெகிஸ்தான் உறுதியளித்து உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதி டிராக்டர் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் பலியாகினர். தாக்குதலில் காயம் அடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதி உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க போலீஸ் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது. இந்நிலையில் விசாரணைக்கு முழு உதவியை வழங்குவோம் என உஸ்பெகிஸ்தான் உறுதியளித்து உள்ளது. “பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் […]

நியூயோர்க்கில் தீவிரவாதத் தாக்குதலில் 8 பேர் பலி

நியூயோர்க்கில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நியூயோர்க் – கீழ் மென்ஹாட்டன் பகுதியில் உள்ள மிதிவண்டிப் பாதை மற்றும் பாதசாரிகளுக்கான பாதைக்குள் திடீரென பிரவேசித்த டிரக் வண்டியொன்று அங்கிருந்த பொதுமக்கள் மீது மோதி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. குறித்த டிரக் வண்டியை செலுத்தி தீவிரவாதத் தாககுதலில் இடுபட்ட 29 வயதான நபர் நியூயோர்க் நகர பொலிஸாரால் சுடப்பட்ட […]

பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு – 20 போட்டியில் 36ஓ ட்டங்களால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை 3-0 எனக் கைப்பற்றி இலங்கையை வெள்ளையடிப்புச் செய்தது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானின் லாகூர் கடாபி விளையாட்டரங்களில் நேற்று இடம்பெற்றது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடனும் பெரும் […]

கேட்டலோனியா மாநில அரசு கலைக்கப்பட்டதாக அறிவிப்பு!

கேட்டலோனியா மாநில அரசு கலைக்கப்பட்டதாகவும் வரும் டிசம்பர் 21ஆம் தேதி அம்மாநிலத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் அறிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டில் இருந்து விடுதலைபெறுவது குறித்த கருத்தை அறிவதற்கான பொதுவாக்கெடுப்பு கேட்டலோனியா மாநிலத்தில் கடந்த ஒன்றாம் தேதி நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலானோர் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதை ஸ்பெயின் ஏற்காத நிலையில் கேட்டலோனியா விடுதலையடைந்ததாகத் தன்னிச்சையாக அறிவித்தது. இதையடுத்து அந்த மாநில அரசு கலைக்கப்பட்டதாகவும், மீண்டும் […]

அமெரிக்க விமானம் தாங்கிப் போர்க் கப்பல் ஒன்று இலங்கை வரவிருக்கிறது.

முப்பத்து இரண்டு வருடங்களின் பின், அமெரிக்க விமானம் தாங்கிப் போர்க் கப்பல் ஒன்று இலங்கை வரவிருக்கிறது.

சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது கட்டலோனியா

ஸ்பெயினின் கடும் எதிர்ப்பையும் மீறி, கட்டலோனிய பாராளுமன்றம் சுதந்திரக் குடியரசாகத் தன்னைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதையடுத்து, கட்டலோனிய மக்கள் பெரும் சந்தோஷக் களிப்பில் சுதந்திரத்தைக் கொண்டாடி வருகின்றனர். கட்டலோனிய பாராளுமன்றில் இன்று (27) நடைபெற்ற வாக்கெடுப்பில், சுதந்திரத்துக்கு ஆதரவாகப் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றன. இதன்மூலம், ஸ்பெயினின் ஆளுகையில் இருந்து கட்டலோனியா சுதந்திரம் பெற்றுள்ளது. கட்டலோனியாவின் ஜனாதிபதியை உடனடியாகப் பதவி விலக்கி, அதை தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு ஸ்பெயின் பிரதமர் […]

இந்தோனேஷியாவில் பட்டாசு ஆலையில் தீ விபத்து

ஜகார்த்தாவிற்கு வெளியே செயல்பட்ட பட்டாசு ஆலையில் இன்று தீ விபத்து நேரிட்டது. தீ விபத்தை அடுத்து அங்கிருந்த வெடிகள், வெடிப்பொருட்கள் வெடித்து சிதறியது, தீப்பற்றி எரிந்தது. அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் உருவாகியது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் 47 பேர் உயிரிழந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. பலர் காயம் அடைந்து உள்ளனர். காயம் […]