இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லையில் சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் பீடபூமி உள்ளது. இதற்கு சீனாவும், பூடானும் சொந்தம் கொண்டாடுகின்றன. இதற்கு பூடானுக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. இந்த நிலையில் டோக்லாம் பகுதியில் சீனா கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி சாலை அமைக்க முயன்றது. அதை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து சீனாவும், இந்தியாவும் ராணுவ வீரர்களை குவித்தது. இதனால் […]
உலக செய்திகள்
ராணுவ வீரர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை: ரஷ்யா புதிய சட்டம்
பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ராணுவ சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது. ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் தொழில்முறை சிப்பாய்களும், மற்ற ராணுவ அதிகாரிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்ட மசோதா ஒன்றை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. ராணுவ வீரர்கள் இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இதர அம்சங்கள் எதிரிக்கு விவரங்களை […]
தலாய் லாமாவின் 1300 வருட பழமையான அரண்மனையை சீரமைக்கிறது சீன அரசு
திபெத் தன்னாட்சிப் பகுதியிலுள்ள பொட்டலா அரண்மனை, 1959-ம் ஆண்டு வரையில் தலாய் லாமாவின் பிரதம வசிப்பிடமாக இருந்தது. இப்போது இது நூதன காட்சிச்சாலையாகவும் உலகப் பாரம்பரியக் களமாகவும் உள்ளது. அரண்மனை 3,700 மீட்டர் (12,100 அடி) உயரத்தில், லகாசா பள்ளத்தாக்கின் மத்தியில் சிவப்பு மலையின் பக்கத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனை 1694-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இதற்கு சுமார் 45 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த அரண்மனை “யு.எஸ்.ஏ டுடே” செய்தித்தாளால் புதிய […]
இந்தோனேசியாவில் 25 அடி ராட்சத மலைப்பாம்பை கொன்று விருந்தாக்கிய கிராம மக்கள்
இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் பொதுவாக 20 அடி நீள மலைப்பாம்புகள் உள்ளன. அவற்றை அங்குள்ள கிராம மக்கள் பிடித்து உணவாக உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில், சுமத்ரா தீவின் துணை மாவட்டமான பட்டாங் கன்சாலில் 37 வயது மதிக்கத்தக்க சுடராஜா என்பவர் அங்குள்ள பகுதியில் பாம்பு பிடிக்க சென்றுள்ளார். அப்போது 26 அடி மலைப்பாம்பு ஒன்று அங்கு இருந்துள்ளது. அதனை பிடிக்க முயன்ற போது பாம்பு அவரின் இடது […]
லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு: ஐபோன் மூலம் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த பெண்மணி
அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் இசை நிகழ்ச்சியின் போது ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 59 பேர் பிரதாபமாக உயிரிழந்ததோடு 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூட்டில் காயமுற்றோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்குதல் சார்ந்த விசாரணை ஒருபுறம் நடைபெற்று வருகிறது. அதேவேளையில், சம்பவத்தில் அரங்கேறிய வீரதீர செயல்கள் சார்ந்த தகவல்கள் வெளியாகத் துவங்கியுள்ளன. அந்த வகையில் துப்பாக்கி […]
இந்தியாவின் பிரதமராக பயங்கரவாதி நரேந்திர மோடி ஆட்சி செய்கிறார் என பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப் கருத்து
மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் சமீபத்தில் பேசியபோது பாகிஸ்தானை கடுமையாக சாடினார். அந்த நாடு, பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து வருகிறது என அவர் கூறினார். அவர் அவ்வாறு கூறியதற்கு பதிலடி தருவதுபோல, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப் கருத்து வெளியிட்டுள்ளார். அவர், ஜியோ டி.வி.யில் ‘டாக் ஷோ’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, “இந்த நேரத்தில் அங்கு (இந்தியா) ஒரு […]
அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு
அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் மேண்டலே பே ஓட்டல் அருகில் திறந்த வெளியில் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்தது. இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்த போது, அங்கிருந்த உயரமான கட்டிடத்தில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அமெரிக்க நேரப்படி இரவு 10:30 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு தொடங்கியது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மக்கள் அலறியடித்து ஓடினர். இதில் இருவர் உயிரிழந்தனர். 24 பேர் […]
கனடா எட்மன்டனில் பயங்கரவாத தாக்குதல்?
கனடா-எட்மன்டனில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ஒரு பயங்கரவாத தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் குத்தப்பட்டதுடன் பாதசாரிகள் U-Haul டிரக்கினால் தாக்கப்பட்டுள்ளனர். ஓடிக்கொண்டிருந்த யு-ஹால் வாகனத்தில் இருந்து இத்தாக்குதல் நடாத்தப்பட்டுளளது. நான்கு பாதசாரிகள் மோதி விழுத்தப்பட்டுள்ளனர். எட்மன்டனை சேர்ந்த 30-வயதுடைய மனிதன் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவன் தனியாக செயல்பட்டதாக தெரிவித்த பொலிசார் இதில் மற்றவர்கள் சம்பந்தப்பட்டடிருப்பார்களா என கருதப்படவில்லை. எட்மன்டன் மக்களை- அவர்களது சுற்றாடல்களில் இருப்பவர்களை எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு எட்மன்டன் […]
பிரான்சில் புகையிரத நிலையத்தில் தாக்குதல்: இருவர் படுகொலை
தென் பிரான்ஸ் பகுதியில் உள்ள மார்செய்ல் (Marseille ) நகரில் உள்ள செயின்ட் சார்ள்ஸ் (Saint Charles ) நிலக்கீழ் புகையிரத நிலயத்தில் இன்று இனந்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி மேற்கொண்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் குறித்த பிரதேசத்துக்கு சென்ற காவல்துறையினர் தாக்குதலாளியை சுட்டுக் கொன்றுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் குறித்த தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை. குறித்த பகுதிக்கு பொதுமக்கள் […]
அமெரிக்காவை எதிர்கொள்ள 5 மில்லியன் ராணுவத்தினர் தயார்: வடகொரியா அறிவிப்பு
அமெரிக்க ராணுவத்தை எதிர்கொள்ள 5 மில்லியன் வடகொரிய ராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாக அந்த நாடு அறிவித்துள்ளது. டிரம்ப் அரசியின் அச்சுறத்தலை எதிர்கொள்ளும் பொருட்டு வடகொரிய ராணுவத்தில் இணைந்து போராட 4.7 மில்லியன் மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர் மற்றும் பணியாளர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. இதில் 1.22 மில்லியன் பேர் இளம் பெண்கள் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மட்டுமின்றி வடகொரியாவின் புகழில் களங்கம் விளைவிக்கும் […]





