உலக செய்திகள்

பாகிஸ்தான் தலைநகரில் பதற்றம் ரப்பர் குண்டுகளை வெடித்து போராட்டக்காரர்கள் விரட்டியடிப்பு

இதனால் அவர் பதவி விலகக்கோரி தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த ஒரு வார காலமாக தெஹ்ரிக் இ லபாயிக் ரா ரசூல் அல்லா அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு வந்தனர். இதனால் இஸ்லாமாபாத் முடங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காததால் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் அதிருப்தி அடைந்து அரசின்மீது கடும் கண்டனம் தெரிவித்தன. இதன்காரணமாக நேற்று […]

மாலியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படையினர் 4 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான மாலியில் 2013-ம் ஆண்டில் இருந்து மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மாலி மக்களை காப்பதிலும், அமைதி நிலவச்செய்வதிலும் அங்குள்ள ஐ.நா. அமைதிப்படையினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆனால் அவர்கள் மீது பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். இதுவரை அங்கு அமைதிப்படை வீரர்கள் சுமார் 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அங்கு நைஜர் நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ள மெனாகா மற்றும் மோப்தி ஆகிய […]

எகிப்தில் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு ஆயுதக்கிடங்குகள் அழிப்பு

எகிப்தில் மசூதி தாக்குதலுக்கு விமானப்படை பதிலடி கொடுக்கும் விதமாக வான்தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களின் ஆயுதக்கிடங்குகள் அழிக்கப்பட்டன. எகிப்து நாட்டில் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் இயங்கிக்கொண்டு, நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ தேவாலயங்களையும், பாதுகாப்பு படையினரையும் குறி வைத்து தாக்குதல் நடத்தி வந்தனர். இந்த நிலையில், அங்கு சினாய் தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள பீர் அல் அபெத் நகரில் அல் ராவ்டா […]

சர்க்கஸில் இருந்து தப்பிய சாலைக்கு வந்த புலி

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் சர்க்கஸ் நடைபெறவுள்ளது. இதற்காக சிங்கம், புலி, கரடி, சிறுத்தை உள்ளிட்ட விளங்குகள் வரவைகப்பட்டன. இந்நிலையில், சர்க்கஸில் இருந்து 200 கிலோ எடை கொண்ட புலி ஒன்று தப்பித்து பாரீஸ் நகர் சாலைகளில் சுற்றிதிரிந்தது. இதனால் பொது மக்கள் பீதியும், அச்சமும் அடைந்தனர். பின்னர், பாதுகாப்பு கருதி டிராம் வண்டிகளின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் […]

எகிப்தில் கொடூரத் தாக்குதல் – 235 பேர் வரை உயிரிழப்பு!!

எகிப்தில் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 235 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு சினாய் மாகாணத்தின் அல் ஆரிஷ் அருகே உள்ள பில் அல்-அபெட் நகரின் அல் ரவுடா மசூதியிலேயே இந்தக் கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

தென்மேற்கு துருக்கியில் நள்ளிரவில் பூகம்பம்

2011ஆம் ஆண்டு நிகழ்ந்த பூகம்பத்தை துருக்கி மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். ரிக்டர் அளவில் 7.2 அளவில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் சுமார் 600 பேர் பலியாகினர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் துருக்கியில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்து வெளியேறினர் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் சுமார் 6.3 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் […]

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு; 8 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர். மற்றொரு சம்பவத்தில் 15 ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலை துண்டிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போர் தொடுத்து அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்களை 2001-ம் ஆண்டு விரட்டியது. அதைத் தொடர்ந்து அங்கு மக்களாட்சி மலர்ந்தது. இருப்பினும் அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு இருந்து, சட்டம்-ஒழுங்கை பராமரிக்க அந்த நாட்டு படையினருக்கு பக்க பலமாக உள்ளனர். அத்துடன் அங்கு இன்றளவும் ஆதிக்கம் செலுத்தி வருகிற தலீபான்களை ஒடுக்க […]

பார்வையை பறிகொடுத்த வாலிபர்

வாலிபர் ஒருவர் தனது ஆசை காதலியுடன் உடலுறவில் ஈடுபட்டு, அதிக கிளர்ச்சியின் மூலம் அதீத உச்சத்தை எட்டி, ஒற்றைக்கண்ணில் பார்வை போய் மீண்ட சம்பவம் லண்டனில் நடந்து முடிந்துள்ளது. லண்டலில் வசித்து வரும் 29வயதான ஒரு வாலிபர் தனது காதலியுடன், இரவு முழுவதும் உடலுறவில் ஈடுபட்டு, கிளைமேக்ஸில் உச்சம் அடைந்து அதிக ஆர்கஸம் அடைந்தார். காலையில், அவர் தெருவில் இறங்கி நடக்கும் போது, அவரின் இடது கண்ணில் மட்டும் பார்வை […]

மாணவர்களுடன் உடலுறவு வைத்த பள்ளி ஆசிரியை கைது….

அமெரிக்காவில் உள்ள பள்ளியின் ஆசிரியை அங்கு படிக்கும் மாணவர்களுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஓஹியோ எனும் இடத்தில் உள்ள ஒரு இடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் மட்லின் மார்க்ஸ். இவர் 17 வயது மாணவர் ஒருவருடன் கடந்த ஜூன் மாதம் உடலுறவில் ஈடுபட்டதும், 16 வயது மாணவருடன் கடந்த செப்டம்பர் மாதம் உறவில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர் தனது நிர்வாண புகைப்படங்களை பல மாணவர்களுக்கு […]

உலக அழகி மனுஷி சில்லாரை கொண்டாடும் சீன இளைஞர்கள்

இந்தியாவை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவி மனுஷி சிலலார் சமீபத்தில் இந்த ஆண்டுக்கான உலக அழகியாக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியான ஒருசில நிமிடங்களில் அவர் இந்தியர்களின் நாயகி ஆகிவிட்டார். பிரதமர் மோடி முதல் பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் அவர் பல மணி நேரம் டிரெண்டிங்கில் இருந்தார் இந்த நிலையில் இந்தியாவில் மட்டுமின்றி சீனாவின் அதிகாரபூர்வ சமூக இணையதளமான வெய்போ என்ற […]