தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் உரிய உத்தரவாதத்தை வழங்குவோருக்கே நாம் ஆதரவளிப்போமென முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் குறித்து தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே சி.வி.விக்னேஸ்வரன் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழரின் நீண்டகால பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்தியஸ்தர் ஒருவரின் ஊடாக உத்தரவாதம் அளித்தால் மாத்திரமே ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து சிந்திக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை, […]
இலங்கை செய்திகள்
அனைத்துலக சட்டங்களின்படி கோத்தாவே பொறுப்புக்கூற வேண்டும்
அனைத்துலக சட்டங்களின்படி, சிறிலங்கா படைகளால் நிகழ்த்தப்பட்ட மீறல்களுக்கு கட்டளை வழங்கியவர் என்ற வகையில், கோத்தாபய ராஜபக்சவே பொறுப்புக்கூற வேண்டியவர் என்று அனைத்துலக சட்ட நிபுணர் ஸ்கொட் கில்மோர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில், றோய் சமாதானம் என்ற கனடாவைச் சேர்ந்த தமிழரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிவில் வழக்கை சட்ட நிபுணர் ஸ்கொட் கில்மோர் கையாளவுள்ளார். இவர், ஊடகவியலாளர் மேரி […]
கிளிநொச்சியில் வாள்வெட்டு தாக்குதல்
கிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்து கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து,இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் நான்குபேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த நால்வரும் தர்மபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் ஒருவரை மாத்திரமே தர்மபுரம் காவவல் துறையினர் கைது செய்துள்ளதாகவும் இச்சம்பவத்தில் காவவல் துறை ஏனைய சந்தேக […]
இன்றுடன் அடங்குகிறது அனல் பறந்த பிரச்சாரம்..!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில், ஒரு லோக்சபா தொகுதி மற்றும் ஒரு சட்டசபை தொகுதிக்கும் எதிர்வரும் 18 ஆம் திகதி வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கு 781 ஆண்கள், 63 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட 845 பேர் […]
வெல்லப்போகிறான் விவசாயி
அனைவரும் புரிதலோடு வாக்களிக்க வரவேண்டும். களப்பணி ஆற்றவேண்டும். எங்களை கைவிட்டு விடாமல், மதிப்புமிக்க உங்கள் வாக்கை எங்களுக்கு தந்து வெற்றிபெறச் செய்வீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையோடு, புதியதொரு தேசம் படைப்போம்; அதை மக்கள் புரட்சியால் வென்று முடிப்போம்; வெல்லப்போகிறான் விவசாயி” என்று அடையாறில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் தெரிவித்தார். இதேவேளை, “சுவையாக சாப்பாடு தயாரித்து, அதை நீங்களும் சாப்பிடாமல், மற்றவருக்கும் கொடுக்காமல் குப்பையில் கொட்டுவது எப்படிப்பட்ட செயலோ, அப்படிப்பட்ட […]
தொடர்ந்தும் வெப்பமான வானிலை நிலவும்
மத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த பகுதிகளில் 50 மில்லிமீற்றர் 75 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகுவதுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிக்கக்கூடும். எனவே, பொதுமக்கள் இடி, மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்புபெறும் வழிமுறைகளைக் கையாள வேண்டும் என காலநிலை அவதான நிலையம் […]
அரசியல் அமைப்பு சபையின் அடுத்த கூட்டத்தில் முக்கிய தீர்மானம்!
அரசியல் அமைப்பு சபையின், அடுத்த கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், புதிய பிரதம நீதியரசரை நியமித்தல் மற்றும் கணக்காய்வாளர் நியமனங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன. இலங்கை அரசியல் அமைப்பின், 19 ஆவது திருத்தத்திற்கு அமைய பிரதம நீதியரசரை நியமித்தல் மற்றும் கணக்காய்வாளரை நியமித்தல் ஆகிய பொறுப்புகள் அரசியல் அமைப்பு சபைக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைய, பதவிகளுக்காக ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் குறித்த தீர்மானம் எதிர்வரும் 30 […]
இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால பகிரங்க அறிவிப்பு
எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்திற்கொண்டு அனைத்து இலங்கையர்களும் இன்றைய தினம் (திங்கட்கிழமை) மரக்கன்றொன்றை நாட்ட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்க அறிவிப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் சுற்றாடலுக்கான பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு அனைத்து இலங்கையர்களும் மரக்கன்றொன்றை நாட்டுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை இவ்வருட சிங்கள, தமிழ் புத்தாண்டு நிகழ்வுகளில் மரம் […]
வைகோவிற்கு ஏன் இந்த நிலை??
அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி ஆகிய முழக்கங்களோடு கடந்த 1996, மே 6-ம் தேதி உருவாகியது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்(மதிமுக). சிறந்த அரசியல்வாதி, எந்தத் தலைவரையும் எந்த நேரத்திலும் சந்திக்கும் வலிமை படைத்தவர், , சொல்லாற்றல் மிக்கவர், இலக்கியவாதி, தமிழ்- தமிழர் உணர்வு மிக்கவர், தேர்ந்த வழக்கறிஞர் என பன்முகத் தன்மைகளைக் கொண்டவர் மதிமுக பொதுச் செயலாளர் வை. கோபால்சாமி. திமுகவின் கொள்கை, அறிஞர் அண்ணாவின் […]
ஜனாதிபதி தேர்தலில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இடமளிக்க கூடாது
போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்க கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பன்னாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே சந்திரிகா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் தேர்தல் குறித்த பரப்புரைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது […]





