இலங்கை செய்திகள்

தெஹிவளையில் குண்டு வெடிப்பு! இருவர் பலி

தெஹிவளை மிருகக்காட்சிக்கு அருகில் அருகிலுள்ள ஒரு உணவகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சற்று முன்னர் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளனர். இதனால், தெஹிவளை மிருகக்காட்சிசாலையை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜுலோகிக்கல் கார்டனை பாதுகாப்பாக பார்வையிடும் பார்வையாளர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்

சிறிலங்கா முழுவதும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறிலங்காவில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்தே நாடு முழுவதும் ஊடரங்குச் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னதாக கொழும்பு தெமட்டகொட பகுதியிலும் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து வரும் நிலையிலேயே அவசரமான ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சிறிலங்காவின் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளும் […]

சி.வி. கற்பனையில் அரசியல் செய்பவர்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கற்பனையில் அரசியல் செய்வதாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். அத்தோடு அவர் தமிழ் மக்களின் மாற்று தலைமைக்கு தகுதியானவர் அல்லவெனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வடக்கு மாகாண சபையின் ஆட்சியில் இருந்தபோது முதலமைச்சராக […]

கோத்தபாய ராஜபக்

கோட்டாவின் பதிலுக்கு காத்திருக்கும் மகிந்த அணி

எமது கோரிக்கைகளுக்கு கோட்டாபய ராஜபக்ஷவின் பதிலையடுத்தே ஜனாதிபதி தேர்தலில் தீர்மானத்தை எடுப்போம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் அவரை ஆதரிப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை அதன்பின்னரே எடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக இடதுசாரி கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார கடந்த புதன்கிழமை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடிருந்தார். இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து […]

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் கைது

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படியில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் சற்றுமுன்னர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் . முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் பிரச்சனையினை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்களை திட்டமிட்டு அச்சுறுத்தும் நடவடிக்கையில் பொலீசார் மற்றும் படையினர்,படைபுலனாய்வாளர்கள் ஈடுபட்டுவருகின்றார்கள். இது தொடர்பில் ஊடக அமைப்புக்கள் பல தெரியப்படுத்தியும் எதுவித முன்னேற்றமான நடவடிக்கையும் இல்லாத நிலை […]

வவுனியாவில் குவிக்கப்பட்ட விசேட அதிரடி படையினர்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி அந்த மண்டபத்தை விசேட அதிரடி படையினர் பரிசோதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நகரசபை வாயில் மற்றும் நகரசபை மண்டபத்தில் பாதுகாப்பு அதிரடி படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பெருமளவில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் அழிவுக்கு விடுதவைப் புலிகளின் தலைவர் காரணம் அல்ல

தமிழ் மக்களின் அழிவுக்கு தமிழீழ விடுதவைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் காரணம் அல்லவென்றும் அப்போதைய அரசியல் தலைமைகளே காரணம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டியுள்ளார். கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தான் கண்ட தலைமைத்துவ பண்பு கொண்டவர்களில், பிரபாகரன் நல்லதொரு தலைமைத்துவ பண்பு கொண்டவர் என […]

பலாலி

பலாலி விமான நிலையத்திற்கு திடீர் முட்டுக்கட்டை

பலாலி விமான நிலையத்தை விஸ்தரித்து மீள இயங்க வைக்கும் தீவிர முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு தரப்பினரிடமிருந்து திடீர் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரியொருவர் இது குறித்த தகவல்களை தமிழ்பக்கத்துடன் பகிர்ந்து கொண்டார். விமானநிலைய புனரமைப்பு திட்டத்தில் புதிதாக ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமையால், இந்த திட்டத்தை முன்னெடுக்கவிருந்த இந்தியாவும் அதிருப்தியில் உள்ளதை தமிழ்பக்கம் அறிந்தது. பலாலி விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக, சர்வதேச தரத்தில் […]

பிரதமரிடம் முக்கிய கோரிக்கை வைத்த ஐ .தே .க உறுப்பினர்கள்

அமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமையை தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஐக்கிய தேசிய கட்சியின் 38 பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து முன்வைத்துள்ளனர். அவர்களுக்கு இடையிலான முரண்பாட்டை நீக்கி, ஒரே நிலைப்பாட்டில் கட்சியை முன்நடத்துமாறும் அவர்கள் கோரியுள்ளனர். கடந்த சில நாட்களாக அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் […]

கோட்டாவிற்கு எதிரான வழக்கின் பின்னணியில் மங்கள சமரவீர

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டதன் பின்னணியில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர செயற்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிடும்பொதே நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயசேகர இதனை தெரிவித்துள்ளார். அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் துணையுடன் அமைச்சர் மங்கள சமரவீர கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக இந்த வழக்கினை பதிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் […]