காணிகளுக்குள் கால் பதிக்கும் வரை, உணவுத் தவிர்ப்பு போராட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்னாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் போராட்டம் பதினாறாவது நாளாக தொடரும் அதேவேளை சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களிற்கு சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியே குறித்த போராட்டம் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக […]
இலங்கை செய்திகள்
யாழில் விழிப்புணர்வு சிரமதான நடைபவனி
யாழில் விழிப்புணர்வு சிரமதான நடைபவனி தூய்மையான யாழ்ப்பாணம் நோக்கிய பயணம்’ எனும் தொனிப்பொருளில் பொலித்தீன் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு சிரமதான நடைபவனி இன்று யாழ். நகரில் இடம்பெற்றது. குறித்த விழிப்புணர்வு பேரணியில் சுகாதார உத்தியோகத்தர்கள், மாணவர்கள், தன்னார்வ தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டிருந்தனர். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், யாழ். மாநகர சபை மற்றும் அகில இலங்கை சைவ மகா சபை ஆகியன ஒன்றிணைந்து குறித்த சிரமதான பேரணியை […]
மோடி இலங்கை வருகை
மோடி இலங்கை வருகை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதன்படி விசாகப் பண்டிகை நிகழ்வில் கலந்துக் கொள்ளும் வகையில் எதிர்வரும் மே மாதம் இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. விசாகப் பண்டிகை நிகழ்வை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் இலங்கை அரசாங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய […]
ஐ.நா. தீர்மானத்தில் மாற்றம் வேண்டாம் – சுமந்திரன்
ஐ.நா. தீர்மானத்தில் மாற்றம் வேண்டாம் – சுமந்திரன் திடீர் பயணம் மேற்கொண்டு ஜெனீவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அங்கு நேற்று நடைபெற்ற இரு முக்கிய சந்திப்புக்களில் கலந்துகொண்டார். இதன்போது “ஐ.நா.தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்ற பரிந்துரையை நீக்கிஇ ஐ.நா. தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது. எனவே […]
இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை விஜயம்
இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை விஜயம் இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (சனிக்கிழமை) இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வரவுள்ளார். நாளை இலங்கைவரும் வெளியுறவு செயலாளர் எதிர்வரும் 20ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்விஜயத்தின் போது இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ள உள்ள புதிய இருதரப்பு ஒப்பந்தங்கள், திருகோணமலை மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் என்பன குறித்து […]
கேப்பாபுலவு மக்களுடன் கிழக்கு பல்கலை மாணவர்கள்
கேப்பாபுலவு மக்களுடன் கிழக்கு பல்கலை மாணவர்கள் கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்ட இடத்திற்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். கேப்பாபுலவு மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்காகவே தாம் இன்றைய தினம் கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து சென்றதாக மாணவர்கள் தெரிவித்தனர். எனினும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் […]
இழுத்தடிக்காது தீர்வை வழங்குங்கள் – அருட்தந்தை மங்களாராஜா
இழுத்தடிக்காது தீர்வை வழங்குங்கள் – அருட்தந்தை மங்களாராஜா கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு தொடர்ந்தும் யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு ஆதரவு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் கோப்பபுலவு பிலவுக்குடியிருப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை மங்களாராஜா தெரிவித்தார். 18 ஆவது நாளாக மக்களின் போராட்டம் தீர்வின்றி தொடரும் நிலையில் எதற்காக தொடர்ந்தும் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்கின்றது என தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். […]
சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா.
சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா. எவ்வித அநீதியான செயற்பாடுகளும் இன்றி சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் தெரிவித்தார். உலக நாடுகளின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அநீதியான செயற்பாடுகள் தொடர்பில் செய்ட் அல் ஹுசைன் மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் சிறுபான்மை மக்கள் மற்றும் சிறுபான்மை […]
கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களை வீதியில் நிர்க்கதியாக்கியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இராணுவத்தினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளை நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விமானப்படையினர் விடுவிக்க வேண்டும் என கோரி கடந்த மாதம் […]
விக்னேஸ்வரன் போராடினாலும் வட,கிழக்கை இணைக்க முடியாது: ஹக்கீம்
விக்னேஸ்வரன் போராடினாலும் வட,கிழக்கை இணைக்க முடியாது: ஹக்கீம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் எவ்விதமாக ஆர்ப்பாட்டம் செய்தாலும் அதனூடாக வடக்கையும், கிழக்கையும் ஒன்றிணைப்பது சாத்தியமாகாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெறுவதற்கான பேச்சுக்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தமது கட்சி ஈடுபட்டுவரும் நிலையில், நாடாளுமன்ற பெரும்பான்மையின்றி வட,கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாதென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். […]





