“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அழுத்தங்களைக் கொடுத்தால்தான் இலங்கை அரசு பரிந்துரைகளை நிறைவேற்றும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது, இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்திருந்தார். இதற்குப் பதிலளித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே செல்வம் […]
இலங்கை செய்திகள்
அரச வைத்தியர்கள் வெள்ளியன்று மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பு! – 60 தொழிற்சங்கங்கள் ஆதரவு
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி (சைட்டம்) விவகாரம் தொடர்பில் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக அரச வைத்தியர்கள் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர் என்று இலங்கை அரச வைத்தியர்கள் சங்கத்தின் மத்திய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டாக்டர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கம், கால்நடை வைத்தியர்கள் சங்கம், அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம், இணை சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கம், வங்கி […]
சைட்டத்தை மூட இடமளியோம்! – அரசு திட்டவட்டம்
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி (சைட்டம்) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஓர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் என்பதால் அதை எக்காரணம் கொண்டும் மூடுவதற்கு அரசு இடமளிக்காது என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “சைட்டம் பிரச்சினை குறித்து கலந்துரையாட இலங்கை வைத்தியர் சங்கத்துக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தபோதிலும் அவர்கள் அந்த அழைப்பை அசட்டை செய்துவிட்டு மாணவர்களைப் […]
சீனாவின் உயர் அரசியல் ஆலோசகர் சிறிலங்காவுக்குப் பயணம்
சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் யூ செங்சென்ங் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று சீனாவின் குளோபல் ரைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான நான்கு நாட்கள் பயணத்தை அவர் இன்று ஆரம்பிக்கவுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் பாகிஸ்தான் செனெட் தலைவர் மியான் ராசா ரப்பானி ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். யூ செங்சென்ங், சீன மக்கள் அரசியல் […]
அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த இறுதி உடன்பாடு செய்யப்படவில்லை
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும் சீன நிறுவனத்துக்கும் இடையில் இன்னமும் இறுதி உடன்பாடு ஏற்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் அரசாங்கம் கடுமையான நிதி இழப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த இழப்புகள் ஈடு செய்யப்பட வேண்டும். சீன நிறுவனத்துடனான உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன்னர், இறுதி வரைவு […]
அமைச்சரவை முடிவுகள்
01.சமுத்திரத்துடன் தொடர்பான மீட்டெடுப்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை விருத்தி செய்தல் (விடய இல. 10) இலங்கை கையொப்பமிட்டுள்ள சர்வதேச ஒப்புதல்களின் அடிப்படையில் இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி மற்றும் கப்பல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற வேளையில் விபத்துக்கு உள்ளாகின்ற கப்பல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக வேண்டி தேடல் மற்றும் மீட்டெடுக்கும் சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காக வேண்டி சமுத்திரத்துடன் தொடர்பான மீட்டெடுப்பு ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. அதனடிப்படையில், பல நவீன […]
கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல்
இந்திய கடலோரக் காவல்படையின் சிஜிஎஸ் சூர் என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், நல்லெண்ண மற்றும் பயிற்சிக்கான பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தியா- சிறிலங்கா நாடுகளின் கடலோரக் காவல்படைகளுக்கு இடையில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்திக் கொள்ளும் வகையிலும், சிறி்லங்கா கடலோரக் காவல்படையின் ஆற்றலைக் கட்டியெழுப்பும் நோக்கிலும் இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல் கொழும்பு வந்திருப்பதாக, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. இந்தக் கப்பல் கொழும்பில் தரித்து நிற்கும் போது, […]
ஒட்டாவா உடன்பாட்டில் சிறிலங்காவை கையெழுத்திடக் கோருகிறது பிரித்தானியா
கண்ணிவெடிகளைத் தடை செய்யும் ஒட்டாவா உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவில் கண்ணிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளுக்கு பிரித்தானியா உதவி வழங்கி வருகிறது. 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரையான காலத்தில் சிறிலங்காவில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு 1.2 பில்லியன் ரூபாவை பிரித்தானியா செலவிடுகிறது. 2016 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் மேலும் 600 சதுர கி.மீ பரப்பளவு நிலத்தில் கண்ணிவெடிகளை அகற்றி மக்கள் […]
இந்தியப் பெருங்கடல் மீது கவனம் செலுத்தும் ஜேர்மனி – தூதுவர்களுக்கான கூட்டம் சிறிலங்காவில்
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை, புதிய மூலோபாய மற்றும் இராஜதந்திர முன்னுரிமைக்குரிய பகுதியாக கருதி, ஜேர்மனி தனது நாட்டு தூதுவர்களுக்கான கூட்டம் ஒன்றை முதல் முறையாக சிறிலங்காவில் ஒழுங்கு செய்துள்ளது. இன்று இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளதாக ஜேர்மனியின் இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பிராந்தியத்தை வடிவமைப்பதில் உலகளாவிய போட்டி நிலவுகிறது. பெர்லின் ஒரு பிரதான வணிக சக்தி என்ற வகையில், இந்தியப் பெருங்கடலில் உறுதிப்பாட்டையும், சட்டத்தையும் உறுதிப்படுத்துவதில் ஆர்வம் […]
2017 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை தமிழ்மொழிதின விழா வடக்கில்
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அகில இலங்கை தமிழ் மொழித்தின விருது வழங்கல் விழா 2017 ஆம் ஆண்டிற்கான நிகழ்வு இம்முறை வட மாகாணத்தில் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நடாத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் வட மாகாண கல்விப்பணிமனையில் நடைபெற்றது. கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மாகாண மேலதிக […]





