கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 650 இற்கும் அதிகமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டபோதும், பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இன்னமும் கைது செய்யப்படவில்லை. நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளைத் தேடி நவீன தொழிநுட்ப வசதிகளைக் கொண்டு சுமார் நான்கு மணிநேரம் மேற்படி தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகத்தீவிரமாகத் தேடப்பட்டுவரும் நபர்களின் பட்டியலில் ஞானசார தேரரின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருப்பதால் மேற்படி […]
இலங்கை செய்திகள்
வடக்கு மாகாண அவைத் தலைவருக்கு சோழர் கால அரசர்களைப் போன்ற சிம்மாசனம்
வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவருக்காக நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய சிம்மாசனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் நாள் நடந்த வடக்கு மாகாணசபையின் அமர்வில், புதிய சிம்மாசனத்தில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அமர்ந்திருந்தார். இதுகுறித்து கொசுறுத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ள கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று, சோழர் கால அரசர்கள் பயன்படுத்தியதைப் போன்ற ஆசனத்தை மாகாணசபையின் உயர் அதிகாரி ஒருவர் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஆலோசனை கூறலாம்; உத்தரவாதம் தர முடியாது – விக்னேஸ்வரனுக்கு சம்பந்தன் பதில்
வடக்கு மாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையைத் தீர்ப்பது தொடர்பாக, நடத்தப்படும் கலந்துரையாடலின் ஒரு கட்டமாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அனுப்பிய கடிதத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று பதில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில், அன்புக்குரிய விக்னேஸ், தங்களது 17.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி. எமக்கு முன்னால் உள்ள பிரச்சினையை மட்டுமே நான் கையாளுவேன். விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத […]
நல்லிணக்கத்தினை குழப்பினால் நடவடிக்கை: மலிக் சமரவிக்ரம
இனவாத உணர்வைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமரவிக்ரம கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளார். இது குறித்து மேலும் குறிப்பிடுகையில், “ஆரம்பத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கியத்தை வலுவூட்டி மதம் சாராத ஒரு கட்சியாக செயற்பட்டு வருகின்றது. உண்மையான இலங்கையின் அடையாளத்தைக் கட்டியெழுப்ப கட்சி அர்ப்பணிப்புடன் […]
கீதாவின் மனுவை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட நீதவான் குழு நியமனம்
கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என மேல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை எதிர்த்து அவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரிக்க ஐவர் அடங்கிய உயர்நீதிமன்ற குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி , பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் தலைமையில் இந்த நீதவான் குழு குறித்து மனுவை விசாரணைக்கு உட்படுத்த உள்ளனர். குறித்த மேன்முறையீட்டு மனுவின் பிரதிவாதிகள் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த ஐவரடங்கிய நீதவான் குழு பிரதம […]
ஞானசார தேரர் குறித்து தகவல் தாருங்கள்: பொலிஸார் வேண்டுகோள்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மறைந்திருப்பதற்கு உதவிபுரிபவர்கள் குறித்துத் தகவல் வழங்கினால் அவரைக் கைது செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி அறிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “குறித்த தேரருக்கு பாதுகாப்பு வழங்குவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் எந்தவித தராதரமும் […]
கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்படவில்லை: மல்கம் ரஞ்சித் ஆண்டகை
கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க ஆலயங்கள் மீது அண்மைக்காலமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் கருத்துக்களில் எவ்வித உண்மையுமில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நாட்டில் இனவாதிகளினால் கிறிஸ்தவர்களின் ஆலயங்களும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பல்வேறுபட்ட தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து நேற்றைய தினம் (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒவ்வொரு தரப்பினரையும் தாக்குவதற்கும், தாழ்வாக கவனிப்பதற்கும் மதங்களை கைப்பொம்மையாக […]
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொது பட்டமளிப்பு விழா
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 21ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா புதிய வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்த ராஜாவின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. பட்டமளிப்பு விழா, மட்டக்களப்பு-வந்தாறுமூலை வளாக, நல்லையா மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரம்பமானதுடன், முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய நேர அட்டவணைப்படி நான்கு அமர்வுகளாக இந்த பட்டமளிப்பு இடம்பெறுகின்றது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு, வந்தாறுமூலை மற்றும் திருகோணமலை ஆகிய வளாகங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டப்படிப்பை […]
வடக்கு விவகாரத்தில் நிதானம் முக்கியம்: யாழ். ஆயர்
வடக்கு அமைச்சர்கள் விவகாரம் எந்த தரப்பினரையும் பாதிக்காத வகையில், நிதானமாகவும் சமாதானத்துடனும் முன்னெடுக்கப்பட வேண்டுமென யாழ். ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண அமைச்சர் எஸ்.சத்தியலிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி உள்ளிட்ட குழுவினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ். ஆயரை சந்தித்து வடக்கு மாகாண அமைச்சர்கள் தொடர்பான பிரச்சினைகளை […]
டெங்கு நோய்க்கான இரத்தப் பரிசோதனைக் கட்டணங்கள் குறைப்பு!
டெங்கு நோயைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் இரண்டு இரத்தப் பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். டெங்குநோய் ஒழிப்புத் தொடர்பாக நேற்றையதினம் (சனிக்கிழமை) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் இலகுவான முறைகளில் தமது இரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கட்டணக் […]





