இலங்கை செய்திகள்

கூட்டமைப்பில் சமரசம்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வடகிழக்கில் தனித்துக் களமிறங்க தீர்மானித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் காணப்பட்ட ஆசனப் பகிர்வு தொடர்பான முரண்பாடுகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது.

மகிந்­த­வைப் பாது­காப்­ப­தில் ஐ.தே.கவுக்கு லாபம் உண்டு!

மகிந்­த­வைப் பாது­காப்­ப­தில் எமக்கு இலா­பம் உள்­ளது. அவ­ரது பாது­காப்­புக்கு எந்­தக் குந்­த­கம் ஏற்­ப­ட­வும் நாம் அனு­ம­தி­ய­ளிக்­க­ மாட்­டோம். இவ்­வாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில், கூட்டு எதி­ர­ணி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஸ் குண­வர்த்­த­ன­ வின் கோரிக்­கை­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே ரணில் இவ்­வாறு தெரி­வித்­தார். ‘‘உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் பரப்­பு­ரை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வி­ருக்­கும் சூழ்­நி­லை­யில் பெருந்­தொ­கை­யான மக்­கள் கலந்­து­கொள்­ளும் பரப்­பு­ரைக் கூட்­டங்­க­ளில் மகிந்த ராஜ­பக்ச பங்­கெ­டுப்­பார். அவ­ரு­டைய பாது­காப்­புக்கு […]

புலிக்கொடி அரசியல்!

புலிக் கொடி­யைத் தூக்­கிக் கொண்டு சிங்­கள, முஸ்­லிம் மக்­க­ளி­ட­மி­ருந்து நல்­லி­ணக்­கத்தை எதிர்­பார்க்க முடி­யாது என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் ஜே.வி.பி. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பிமல் ரத்­நா­யக்க. தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னின் பிறந்த நாளை வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் கொண்­டா­டி­ய­தை­யும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் வெளி­யி­டும் அறிக்­கை­க­ளை­யும் கோடி­காட்­டியே அவர் இந்­தக் கருத்­தைத் தெரி­வித்­துள்­ளார். நாடா­ளு­மன்­றத்­தில் ஆற்­றிய உரை­யின்­போது அவர் இத­னைக் குறிப்­பிட்­டார். தமி­ழர்­க­ளி­ட­மாக இருந்­தால் […]

இணக்கப் பேச்சு திடீரென தள்ளிப்போனது!

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் ஆச­னப் பங்­கீட்­டால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னுள் உரு­வா­கி­யுள்ள முரண்­பாட்­டுக்­குத் தீர்வு காண்­ப­தற்கு, எதிர்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் கொழும்­பில் நேற்று நடை­பெற இருந்த கூட்­டம் திடீ­ரெ­னக் கைவி­டப்­பட்­டது. இன்று காலை­யில் அந்­தச் சந்­திப்பு சில­வே­ளை­க­ளில் இடம்­பெ­ற­லாம் என்று தெரி­விக்­கப்­ப­ட்டது. உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­த­லில் ஆச­னப் பங்­கீடு தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளி­டையே முரண்­பாடு ஏற்­பட்­டி­ருந்­தது. இந்த முரண்­பாடு கார­ண­மாக, ரெலோ அமைப்பு தனித்­துப் போட்­டி­யி­டப்­போ­வ­தாக அறி­வித்­தி­ருந்­தது. இதன் […]

வவுனியாவில் விழிப்புணர்வு வாகனப் பேரணி

வவுனியாவில் “பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்போம்” எனும் தொனிபொருளில் விழிப்புணர்வு வாகன பேரணியும் பொது மக்களிடம் கையச்சுப் பெறும் நிகழ்வும் நேற்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய அபிவிருத்தி நிதியம், ஜெர்மன் நிதி வழங்கும் நிறுவனம் ஆகியன இணைந்து இந்தப் பேரணியை முன்னெடுத்தது. பேரணியின் நிகழ்வில் பொதுமக்கள், இளைஞர்கள் கையில் ஒறேஞ் நிறத்திலான மையை பூசி கையச்சு பதியும் நிகழ்வும் வாகனத்தைக் கழுவி சுத்தம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.

ராஜபக்சவின் பாதுகாப்பை அதிகரிக்க தினேஷ் குணவர்தன கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டார். நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் நடவடிக்கைகளில் மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவுள்ளதாகவும் அதன்போது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சுட்டிக் காட்டியே தினேஷ் குணவர்தன இந்தக் கோரிக்கையை விடுத்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய பிரதமர், 154 பாதுகாப்பு அதிகாரிகள் ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருப்பதாகவும் உயிராபத்து குறித்த […]

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என இனி எவரும் தங்களை தாங்களே கூறிக்கொள்ள கூடாது

“காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினைக்காக எந்த அரசியல்வாதிகளும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களாகிய நாம் வருகின்ற உள்ளூராட்சி தேர்தலை பகிஸ்கரிக்கப் போகின்றோம்” என காணாமல் ஆக்கப்பட்வா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா சென்ற காரணம் எனக்கு மட்டுமே தெரியும்

நான் ஆயிரம் தடவை இந்தியாவுக்குச் சென்று வந்திருப்பேன். ஒவ்வொரு தடவையும் எதற்காக இந்தியா சென்றேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும் என்று கூறினார் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து அந்தக் கட்சியின் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்கவுள்ளது. அதற்கான ஒப்பந்தம் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டது. அதன்பின்னர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துக் கூறினார். “அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸூடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவீர்கள் […]

கூட்­ட­மைப்­புக்குள் ஏற்­பட்­டி­ருக்கும் பிரச்­சினை சுமு­க­மாக தீர்க்­கப்­படும் : சுமந்­திரன்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் ஏற்­பட்­டி­ருக்­கின்ற பிரச்­சி­னை­களை சம­ர­ச­மாக தீர்க்­க­மு­டியும்.

கசிப்பு வியா­பாரி உள்­ளிட்ட நால்­வர் வச­மா­கச் சிக்­கி­னர்!

தர்­ம­பு­ரம் பகு­தி­யில், பொலி­ஸார் மேற்­கொள்­ளும் சுற்­றி­வ­ளைப்­புக்­க­ளில் பொலி­ஸா­ருக்கு டிமிக்கி விட்­டுத் தப்­பித்­துச் செல்­லும் கசிப்பு வியா­பாரி உள்­ளிட்ட நால்­வர் மடக்­கிப் பிடிக்­கப்­பட்­ட­னர் என தர்­ம­பு­ரம் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி சுமேத விம­ல­கு­ண­ரத்­தின தெரி­வித்­தார். சட்ட விரோதச் செயற்­பா­டு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் கிளி­நொச்சி தர்­ம­பு­ரம் பொலி­ஸார் அந்­தப் பகு­தி­யில் இனங்­கா­ணப்­பட்ட இடங்­களை சுற்­றி­ வ­ளைத்­துத் தேடு­தல்­களை நடத்­தி­வ­ரு­கின்­ற­னர். நேற்­று­முன்­தி­ன­மும் இவ்­வாறு தேடு­தல் இடம்­பெற்­றது. தேடு­த­லில் கஞ்சா வைத்­தி­ருந்­த­னர் என்ற குற்­றச் சாட்டில் […]