உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வடகிழக்கில் தனித்துக் களமிறங்க தீர்மானித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் காணப்பட்ட ஆசனப் பகிர்வு தொடர்பான முரண்பாடுகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது.
இலங்கை செய்திகள்
மகிந்தவைப் பாதுகாப்பதில் ஐ.தே.கவுக்கு லாபம் உண்டு!
மகிந்தவைப் பாதுகாப்பதில் எமக்கு இலாபம் உள்ளது. அவரது பாதுகாப்புக்கு எந்தக் குந்தகம் ஏற்படவும் நாம் அனுமதியளிக்க மாட்டோம். இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், கூட்டு எதிரணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்த்தன வின் கோரிக்கைகுப் பதிலளிக்கையிலேயே ரணில் இவ்வாறு தெரிவித்தார். ‘‘உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரப்புரைகள் முன்னெடுக்கப்படவிருக்கும் சூழ்நிலையில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொள்ளும் பரப்புரைக் கூட்டங்களில் மகிந்த ராஜபக்ச பங்கெடுப்பார். அவருடைய பாதுகாப்புக்கு […]
புலிக்கொடி அரசியல்!
புலிக் கொடியைத் தூக்கிக் கொண்டு சிங்கள, முஸ்லிம் மக்களிடமிருந்து நல்லிணக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொண்டாடியதையும் வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியிடும் அறிக்கைகளையும் கோடிகாட்டியே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார். தமிழர்களிடமாக இருந்தால் […]
இணக்கப் பேச்சு திடீரென தள்ளிப்போனது!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆசனப் பங்கீட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் உருவாகியுள்ள முரண்பாட்டுக்குத் தீர்வு காண்பதற்கு, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் நேற்று நடைபெற இருந்த கூட்டம் திடீரெனக் கைவிடப்பட்டது. இன்று காலையில் அந்தச் சந்திப்பு சிலவேளைகளில் இடம்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஆசனப் பங்கீடு தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே முரண்பாடு ஏற்பட்டிருந்தது. இந்த முரண்பாடு காரணமாக, ரெலோ அமைப்பு தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தது. இதன் […]
வவுனியாவில் விழிப்புணர்வு வாகனப் பேரணி
வவுனியாவில் “பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்போம்” எனும் தொனிபொருளில் விழிப்புணர்வு வாகன பேரணியும் பொது மக்களிடம் கையச்சுப் பெறும் நிகழ்வும் நேற்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய அபிவிருத்தி நிதியம், ஜெர்மன் நிதி வழங்கும் நிறுவனம் ஆகியன இணைந்து இந்தப் பேரணியை முன்னெடுத்தது. பேரணியின் நிகழ்வில் பொதுமக்கள், இளைஞர்கள் கையில் ஒறேஞ் நிறத்திலான மையை பூசி கையச்சு பதியும் நிகழ்வும் வாகனத்தைக் கழுவி சுத்தம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.
ராஜபக்சவின் பாதுகாப்பை அதிகரிக்க தினேஷ் குணவர்தன கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டார். நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் நடவடிக்கைகளில் மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவுள்ளதாகவும் அதன்போது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சுட்டிக் காட்டியே தினேஷ் குணவர்தன இந்தக் கோரிக்கையை விடுத்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய பிரதமர், 154 பாதுகாப்பு அதிகாரிகள் ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருப்பதாகவும் உயிராபத்து குறித்த […]
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என இனி எவரும் தங்களை தாங்களே கூறிக்கொள்ள கூடாது
“காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினைக்காக எந்த அரசியல்வாதிகளும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களாகிய நாம் வருகின்ற உள்ளூராட்சி தேர்தலை பகிஸ்கரிக்கப் போகின்றோம்” என காணாமல் ஆக்கப்பட்வா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா சென்ற காரணம் எனக்கு மட்டுமே தெரியும்
நான் ஆயிரம் தடவை இந்தியாவுக்குச் சென்று வந்திருப்பேன். ஒவ்வொரு தடவையும் எதற்காக இந்தியா சென்றேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும் என்று கூறினார் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து அந்தக் கட்சியின் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்கவுள்ளது. அதற்கான ஒப்பந்தம் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டது. அதன்பின்னர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துக் கூறினார். “அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸூடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவீர்கள் […]
கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்படும் : சுமந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளை சமரசமாக தீர்க்கமுடியும்.
கசிப்பு வியாபாரி உள்ளிட்ட நால்வர் வசமாகச் சிக்கினர்!
தர்மபுரம் பகுதியில், பொலிஸார் மேற்கொள்ளும் சுற்றிவளைப்புக்களில் பொலிஸாருக்கு டிமிக்கி விட்டுத் தப்பித்துச் செல்லும் கசிப்பு வியாபாரி உள்ளிட்ட நால்வர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர் என தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுமேத விமலகுணரத்தின தெரிவித்தார். சட்ட விரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸார் அந்தப் பகுதியில் இனங்காணப்பட்ட இடங்களை சுற்றி வளைத்துத் தேடுதல்களை நடத்திவருகின்றனர். நேற்றுமுன்தினமும் இவ்வாறு தேடுதல் இடம்பெற்றது. தேடுதலில் கஞ்சா வைத்திருந்தனர் என்ற குற்றச் சாட்டில் […]





