இலங்கை செய்திகள்

மாண­வர்­க­ளுக்கு அமைச்­சர் வாழ்த்து!

ஜி.சி.ஈ. சாதா­ரண தரப் பரீட்­சைக்கு தோற்­ற­வுள்ள மாண­வர்­கள் அனை­வ­ரும் சித்­தி­ய­டைந்து எதிர்­கா­லத்தை வெற்­றி­கொள்ள வேண்­டும் என்று கல்வி அமைச்­சர் அகில விராஜ் காரி­ய­வ­சம் வாழ்த்­தி­யுள்­ளார். ஜி.சி.ஈ. சாதா­ரண தரப் பரீட்சை இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இது தொடர்­பில் கல்வி அமைச்­சர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இம்­முறை 5ஆயி­ரத்து 116 பரீட்சை மத்­திய நிலை­யங் களில் 6 லட்­சத்து 88 ஆயி­ரத்து 573 விண்­ணப்­ப­தா­ரி­ கள் தோற்­ற­வுள்­ள­னர். பரீட்சை சட்­டதிட்­டங்­க­ ளுக்கு உட்­பட்டு அனைத்து […]

யாழ்ப்­பா­ணத்­தில் 2ஆவது சுயேச்சை களத்தில்!

யாழ்ப்­பா­ணத்­தில் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்கு இரண்­டா­வது சுயேச்­சைக் குழு நேற்­றுக் கட்­டுப் பணம் செலுத்­தி­யுள்­ளது. உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்­காக அர­சி­யல் கட்­சி­கள் மற்­றும் சுயேச்­சைக் குழுக்­கள் கட்­டுப் பணம் செலுத்தி வரு­கின்­றன. யாழ்ப்­பா­ணத்­தில், சங்­கானை பிர­தேச சபை­யில் போட்­டி­யி­டு­வ­தற்கு சுயேச்­சைக்­குழு கட்­டுப் பணம் செலுத்­தி­யி­ருந்­தது. இந்த நிலை­யில் வல்­வெட்­டித்­துறை நகர சபை­யில் போட்­டி­யி­டு­வ­தற்கு சுயேச்­சைக் குழு நேற்­றுக் கட்­டுப் பணம் செலுத்­தி­யுள்­ளது. மேலும், சாவ­கச்­சேரி நகர சபைத் […]

தேர்­தல்­ தொடர்பாக முதல் முறைப்­பாடு!!

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல்­கள் தொடர்­பி­லான முத­லா­வது தேர்­தல் முறைப்­பாடு பொலி­ஸா­ருக்கு நேற்­றுப் பதி­வா­கி­யுள்­ளது. ஆரச்­சி­கட்­டுவ பொலிஸ் பிரி­வில் இந்த முறைப்­பாடு பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப் பேச்­சா­ளர் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்­தார். பெயர் பதாகை ஒன்­றுக்கு சேதம் விளை­வித்­தமை தொடர்­பி­லேயே அந்த முறைப்­பாடு கிடைக்­கப் பெற்­ற­தா­க­வும், சம்­ப­வம் தொடர்­பில் ஆரச்­சி­கட்­டுவ பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்

மன்னாரில் போட்டியிட சிறிலங்கா பொதுஜன பெரமுன இன்று கட்டுப்பணத்தை செலுத்தியது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ‘சிறிலங்கா பொதுஜன பெரமுன’ கட்சி இன்று  மாலை 3 மணியளவில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. ‘சிறிலங்கா பொதுஜன பெரமுன’ கட்சியின் வடமாகாணத்திற்கான அமைப்பாளரும், வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான எஸ்.எம்.ரஞ்சித் சமரகோண் தலைமையில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் போது கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால, மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.டிலான், […]

தொண்டமான் மகனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு.!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் புதல்வாரன ஜீவன் தொண்டமானை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு ஹட்டன் நீதவான் நீதிபதி எஸ்.சரவணராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார். தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக தெரிவித்து மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம். ரமேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் இன்று காலை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக சென்ற வேளையில் அவர்களை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். […]

மணல் கடத்தல்

போலியான அனுமதிப் பத்திரத்தைத் தயாரித்து டிப்பர் வாகத்தில் மணல் கடத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறிய லில் வைகுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்று உத்தரவிட் டது. முல்லைத்தீவு, புதுக் குடியிருப்புப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மணல் எற்றிச்சென்ற டிப்பர் வாகனங்கள் மறித்து சோதனையிடப் பட்டன. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட் டங்களின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெலிக்கன்ன வின் உடனடி முறிய டிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி […]

க.பொ.த. சாதா­ரண தர பரீட்சை நாளைமறு நாள் ஆரம்பம்

கல்வி பொதுத் தரா­தர சாதா­ரண தர பரீட்சைகள் எதிர்­வரும் 12 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளன. 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்­பெ­ற­வுள்­ளன. இது தொடர்பில் பரீட்­சைகள் திணைக்­களம் வெளியிட்­டுள்ள அறிக்­கையில், காலை 8.30 மணி­ய­ளவில் பரீட்­சைகள் ஆரம்­ப­ம­ாகும். எனினும் பரீட்­சார்த்­திகள் 8 மணி­ய­ள­வில் பரீட்சை நிலை­யங்­க­ளுக்கு சமு­க­ம­ளிக்க வேண்டும். பரீட்­சைக்கு சமுக­ம­ளிக்­கும்­போது பரீட்சை அனு­மதி அட்டை, தேசிய அடை­யாள அட்டை அல்­லது அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அ­டை­யாள […]

பெற்­றோ­ருக்கு முழு அறிவு வேண்­டும்!

மாண­வர்­கள் காப்­பீட்­டுத்­திட்­டம் தொடர்­பாக பெற்­றோர்­க­ளும் பூர­ண­மாக அறிந்து வைத்­தி­ருக்­க­வேண்­டும். காப்­பு­றுதி பெறு­வ­தில் கடப்­பா­டு­கள் இருக்­கின்­றன. எனவே பெற்­றோர் அதைப்­பற்­றிய விளக்­கத்­து­டன் இருந்­தாலே உரிய நன்­மையை இல­கு­வா­கப் பெற்­றுக்­கொள்­ள­லாம். வவு­னியா சைவப்­பி­ர­காச மக­ளிர் கல்­லூ­ரி­யில் இல­வச காப்­பீட்­டுத்­திட்­டத்தை மாண­வர்­க­ளுக்கு அறி­மு­கம் செய்­யும் நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய வலய கல்­விப்­பி­ர­தி­நி­தி­யும் தமிழ்­பாட ஆசி­ரிய ஆலோ­ச­க­ரு­மான நிறை­மதி தெரி­வித்­தார். அவர் மேலும் தனது உரை­யில் தெரி­வித்­த­தா­வது: மாணவ சமூ­கத்தை முன்­னேற்­று­ வ­தன் […]

கழிப்­பறை வசதி கொண்ட பிர­தே­சம் ஆறு ஆண்­டு­க­ளாகப் பூட்­டிய நிலை­யில்!

கிளி­நொச்­சி­யில் 2010ஆம் ஆண்­டில் கரைச்­சிப் பிர­தேச சபை­யி­னால் சந்தை அமைக்­கும் நோக்­கில் அமைக்­கப்­பட்ட 5 கழிப்­பறை வச­தி­கள் கொண்ட பிர­தே­சம் 6 ஆண்­டுக­ளாகப் பூட்­டிய நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது என­வும் இத­னால் கழிப்­ப­றை­க­ளும் பாழ­டை­கின்­றன என­வும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு ­கின்­றது. கிளி­நொச்சி மாவட்­டத்­தில் போருக்­குப் பின்­னர் மீளக்­கு­டி­ய­மர்ந்த காலத்­தில் மக்­கள் போக்­கு­வ­ரத்து இடை­யூறு கார­ண­மாக வாழ்­வி­டங்­க­ளுக்கு அண்­மை­யில் தமக்­கான அங்­கா­டி­களை அமைக்க முற்­பட்­ட­வே­ளை­யில் கரைச்­சிப் பிர­தேச எல்­லைப் பரப்­புக்­குள் ஏ- 9 வீதி­யின் […]

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் விமானப்படை வீரர் படுகாயம்

வவுனியாவில் இன்று மாலை கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் வன்னி விமானப்படைத்தளத்தில் பணியாற்றும் விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று மாலை 4 மணியளவில் வன்னி விமானப்படை தளத்திற்கு அருகில் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த விமானப்படை வீரரை நுவரெலியாவிலிருந்து வந்த மோட்டார் கார் மேதியதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த வன்னி விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]