இலங்கை செய்திகள்

காற்­றின் வேகம் அதி­க­ரிக்­கும்!

தெற்கு அந்­த­மான் தீவு­க­ளில், இலங்­கை­யி­லி­ருந்து 900 கிலோ மீற்­றர் தொலை­வில் குறைந்த தாழ­முக்­கம் நேற்று மாலை நிலை­கொண்­டி­ருந்­தது. இந்­தக் குறைந்த தாழ­முக்­கம் கார­ண­மாக வடக்கு – கிழக்­குப் பகு­தி­க­ளில் காற்­றின் வேகம் நேற்­றைய தினத்தை விட அதி­க­மாக இருக்­கும். இவ்­வாறு வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளத்­தின் பணிப்­பா­ளர் பிமே­ர­லால் தெரி­வித்­தார். தெற்கு அந்­த­மான் தீவு­க­ளில் நிலை கொண்­டி­ருந்த குறைந்த காற்­ற­ழுத்த தாழ்வு மையம், இந்­தி­யா­வின் ஆந்­தி­ரப் பிர­தே­சத்தை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. நேற்­று­முன்­தி­னம் […]

குளத்­தில் இருந்து ஆணின் சட­லம் மீட்பு!

முல்­லைத்­தீவு மாங்­கு­ளம், மதகு வைத்த குளத்­தி­லி­ருந்து ஆண் ஒரு­வர் சட­ல­மாக நேற்று நண்­ப­கல் மீட்­கப்­பட்­டார். அதே இடத்­தைச் சேர்ந்த 2 பிள்­ளை­க­ளின் தந்­தை­யான காளி­யண்­ணன் சூரி­ய­கு­மார் (வயது – 39)என்­ப­வரே இவ்­வாறு சட­ல­மாக மீட்­கப்­பட்­ட­வ­ரா­வார். சூரி­ய­கு­மாரை நீண்ட நேர­மாக் காண­வில்லை என அவ­ரது உற­வி­னர்­கள் தேடி­னர். வீட்­டின் அரு­கில் உள்ள மதகு வைத்த குளக் கரை­யோ­ர­மாக அவ­ரின் துவிச்­சக்­கர வண்­டி­யும், அவர் அணிந்­தி­ருந்த பாத­ணி­க­ளும் காணப்­பட்­டன. இதை அடுத்து குளத்­தி­னுள் […]

அம்மன் கோயில் பின் வீதியில் புத்தர் சிலை!

கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் கோயிலின் பின்புற வீதியில் உள்ள புத்தர் சிலையை அகற்றுமாறு பலராலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றபோதும் இன்றுவரை அகற்றப்படவில்லை என்று விசனம் தெரிவிக்கப்படுகிறது. பதிலாக இரணைமடுக் குளத்துக்கு அருகிலிருந்த சிலையையே அகற்றியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. இரணைமடுக் குளத்தின் அருகில் இருந்த சிறிய இராணுவமுகாம் அகற்றப்பட்ட பின்னர் குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலையும் அகற்றப்பட்டுள்ளது. இரணைமடுக் குளத்தின் பொறியியளாலர்கள் அலுவலகம் உள்ள கட்டடத்தில் போரின் பின்னர் இராணுவத்தினர் […]

யாழில் டிப்பர் மோதி குடும்ப பெண் பலி.

யாழ்ப்பாணம் மீசாலைப்பகுதியில் இன்று புதன்கிழமை மாலை 4:00மணியளவில் மீசாலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், கணவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது. சாவகச்சேரியில் இருந்து கொடிகாமம் நோக்கி வயோதிப தம்பதிகள் மோட்டார் சைக்கிளில் சென்ற சமயம் வீதியின் ஓரத்தில் நின்ற காரின் சாரதி கார் கதவினை திடீரென திறந்த போது […]

நீண்­ட­கா­லம் சீர­மைக்­கப்­ப­டாத மின்­னங்­கட்­டுப்­பா­லம்!

மன்­னார் மாந்தை பிர­தேச செய­லர் பிரி­வுக்­குட்­பட்ட கள்­ளி­ய­டிக் கிரா­மத்­துக்­குச் செல்­லு­கின்ற மின்­னங்­கட்­டுப்­பா­லம் நீண்­ட­கா­ல­மாக சீர­மைக்­கப்­ப­டாது இருப்­ப­தாக மக்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர். குறித்த பாலம் சீர­மைக்­கப்­ப­டாது காணப்­ப­டு­வ­தால் அத­னூ­டா­கப் பய­ணிக்­கும்­போது சிர­மத்­துக்­குள்ளாகும் நிலை­யில், தற்­போது மழை­நீ­ரும் தேங்கி நிற்­ப­தால் மிகுந்த சிர­மத்தை எதிர்­கொள்­கின்­றோம் என அவர்­கள் மேலும் தெரி­வித்­த­னர். மண்­டக்­கல்­லாறு, அரு­வி­யா­றுப் பாலங்­கள் தொடர்ச்­சி­யாக சீர­மைக்­கப்­பட்டு வரும் நிலை­யில் மின்­னங்­கட்­டுப்­பா­லத்தின் கட்­டு­மா­னப்­ப­ணி­கள் இது­வரை இடம்­பெ­ற­வில்லை என­வும் அவர்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர். எனவே […]

ரெலோவும் தனித்துக் களமிறங்க முடிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று ரெலோ கட்சியும் தீர்மானித்துள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு ரெலோவின் தலைமைத்துவக் கூட்டம் ஆரம்பமானது என்றும் அதில் சற்றுமுன்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ரெலோக் கட்சியின் 16 முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண சபையின் 111 ஆவது அமர்வு இன்று

வடக்கு மாகாண சபையின் 111 ஆவது அமர்வு தற்போது ஆரம்பமாகி நடைபெறுகிறது. யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண அலுவலக கட்டிடத்தில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் நடைபெற்று வருகிறது.

எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனு!

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் எல்லை நிர்­ண­யம் மற்­றும் அவற்­றின் உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை தொடர்­பாக வெளி­யி­டப்­பட்ட அர­சி­தழ் அறி­வித்­த­லுக்கு எதி­ராக உயர் நீதி­மன்­றில் அடிப்­படை உரிமை மீறல் மனு நேற்று தாக்­கல் செய்­யப்­பட்­டது. கடந்த நவம்­பர் மாதம் 2ஆம் திகதி அமைச்­சர் பைசர் முஸ்­த­பா­வால் வெளி­யிட்­டப்­பட்ட அர­சி­தழை இல்­லாது செய்ய வேண்­டும் என்று கோரியே இந்த மனு தாக்­கல் செய்­யப்­பட்­டது. அம்­ப­க­முவ பிர­தேச சபை முன்­னாள் உறுப்­பி­னர் விதா­ன­க­மகே நந்­த­ராஜா மனு­வைத் தாக்­கல் […]

பிற­ருக்கு உதவ வேண்­டு­மென்று நினைப்­ப­வர்­க­ளி­டம் வசதி இல்லை

‘‘உதவி செய்ய வேண்­டும் என்று நினைப்­ப­வர்­க­ளி­டம் வசதி இருப்­ப­தில்லை. வசதி இருப்­ப­வர்­கள் உதவி செய்­வ­தில்லை. இவ்­வா­றான சமூ­கத்­தி­லேயே நாம் வாழ்ந்­து­ கொண்டு இருக்­கி­றோம்.’’ இவ்­வாறு வடக்கு மாகாண மக ளிர் விவகார அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் தெரி­வித்­தார். பன்­னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழிப்­பு­ணர்வு தின நிகழ்வு யாழ்ப்­பாண நகர விடு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யில் அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: யாழ்ப்­பாண […]

வயாவி­ளான் பகு­தி­யில் வெடி­பொ­ருள்­கள் தொடர்­பில் எச்­ச­ரிக்கைப் பதா­கை­கள்

இரா­ணு­வத்­தால் அண்­மை­யில் விடு­விக்­கப் பட்ட பகு­தி­யான வலி­. வ­டக்கு வய­ாவி­ளான் பகு­திக்­குச் செல்­லும் மக்­கள் வெடி­பொ­ருள்­க­ளில் இருந்து பாது­காப்­புப் பெறு­வ­தற்கு அங்கு ஆங்­காங்கே எச்­ச­ரிக்கைப் பதா­கை­கள் தொங்க விடப்­பட்­டுள்­ளன. இலங்கை இரா­ணு­வத்­தின் கட்­டுப்­பாட்­டில் 27 வரு­டங்­க­ளாக இருந்த வயாவி­ளான் பகுதி கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் மக்­க­ளி­டம் மீண்­டும் கைய­ளிக்­கப்­பட்­டது. அங்கு ‘மிதி­வெடி, வெடி­பொ­ருள்­க­ளில் இருந்து எமது மக்­க­ளைப் பாது­காப்­போம்’ என்ற தொனிப்­பொ­ரு­ளில் எச்­ச­ரிக்­கைப் பதா­கை­கள் பல தொங்க விடப்­பட்­டுள்­ளன. […]