இரணைமடுக் குளத்தின் வாய்க்காலில் வீழ்ந்த நீர்ப்பாசன துருசுக் கதவு சீரமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளரின் முயற்சியினால் கதவு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது – என விவசாயிகள் சம்மேளனத்தினர் தெரிவித்தனர். குளத்தின் இடதுகரை வாய்க்காலின் துருசுக் கதவுகள் இரண்டில் ஓர் கதவானது கடந்த 20 தினங்களுக்கு முன்னர் கழன்று வாய்க்காலுக்குள் வீழ்ந்தது. அவ்வாறு வீழ்ந்த கதவை மீட்டு சீர்செய்வதற்கு 15 நாள்களாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஒற்றைக் கதவின் மூலமே தண்ணீர் […]
இலங்கை செய்திகள்
நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது
நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 163 ஆவது நாடாக நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச உடன்படிக்கை சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. நிலக் கண்ணிவெடித் தடை சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதைத் தொடர்ந்து இவ்வுடன்படிக்கையில் இன்னும் சேராத நாடுகள் இலங்கையை முன்னுதாரணமாகக் கொண்டு அதனைப் பின்பற்றவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் உஸ் தெரிவித்துள்ளார்.
புதுவிதமான காய்ச்சலால் முல்லைத்தீவில் 9 பேர் உயிரிழந்தனர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 20 நாள்களுக்குள் அடையாளம் காணப்படாத காய்ச்சல் காரணமாக 9பேர் உயிரிழந்தனர். திடீர் உயிரிழப்புத் தொடர்பில் கொழும்பு அரசின் மருத்துவக் குழு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. முல்லைத்தீவு நகரப் பகுதியைச் சேர்ந்தவர்களே இந்தக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர். தொடர்ச்சியான காய்ச்சலின் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 9 பேரும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. கொழும்பு […]
பொதுஜன பெரமுன நீதிமன்றம் செல்கிறது
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு சபைகளுக்கு தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் அக்கட்சி அடுத்தவாரம் உயர்நீதிமன்றம் செல்வதற்கு தீர்மானித்துள்ளது. அகலவத்தை, பதுளை, பாணந்துறை, மஹியங்கனை, மஹரகம, வெலிகம ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொதுஜன பெரமுன தாக்கல் செய்த வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் சிறு சிறு தவறுகள் மாத்திரம் இடம்பெற்றுள்ளதாகவும், அதனை உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாம் […]
பாதிக்கப்பட்டோரின் பங்களிப்பு அவசியம் : ஐ.நா. குழு வலியுறுத்தல்
காணாமல் போனோர் தொடர் பில் ஆராய்வதற்கான அலுவல கம் உடனடியாக தொழிற்பாட்டுக்கு வரவேண்டும். இதனை அரசாங்கம் விரைந்து உறுதிப்படுத்த வேண்டும். காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தை செயற்படுத்தும் செயற்பாட்டில் பாதிக்கப்பட்டோர், சிவில், சமூக அமைப்பினர் இடம்பெறவேண்டியது அவசியமாகும் என்று இலங்கைக்கு விஜயம் செய்த தன்னிச்சையாக தடுத்துவைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகளின் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங் கம் உடனடியாக நீக்கவேண்டும். தாமதமின்றி அந்த […]
கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழர் விடுதலைக்கூட்டனி
மன்னாரில் கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழர் விடுதலைக்கூட்டனி தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் சார்பில் தமிழர் விடுதலைக்கூட்டனியின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை(15) காலை 11 மணியளவில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளில் ஒன்றான சனநாயக தமிழரசு கட்சியின் செயலாளர் வி. எஸ் .சிவகரன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. -மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை,மாந்தை மோற்கு […]
பரீட்சைக்கு தோற்றச்சென்ற இரு மாணவர்கள் கைது !
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காகச் சென்ற இரு மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதுளை, லுனுகலை பகுதியில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு மாணவர்களே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இரு மாணவர்களும் போலி ஆவணங்களுடன் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள் இருவரும் 17 மற்றும் 18 வயதுடையவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் […]
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக இவ்வருடம் 8,500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது. இதற்கிணங்க சிறுவர்களின் கட்டாய கல்வியை தடுத்தல் தொடர்பாக 1298 முறைப்பாடுகளும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் தொடர்பாக 481 முறைப்பாடுகளும், தீவிர பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 284 முறைப்பாடுகளும், 14 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகள் மீதான வன்புணர்வு தொடர்பாக 322 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தை மற்றும் இளைஞர் கட்டளை சட்டத்தின் […]
ஏ9 வீதியில் பார ஊர்தி விபத்து
வவுனியா ஏ9 வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பார ஊர்தி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் அதன் சாரதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இரும்பகம் ஒன்றிற்கு பொருட்களை ஏற்றிச்சென்ற பார ஊர்தியின் சாரதிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டமையினால் பாரஊர்தி வீதியை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந் நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்ககும் நிலையில் பார ஊர்தியின் சாரதி உயிரிழந்துள்ளார். உடனடியாக வவுனியா […]
எமது மக்களுக்கு சிறந்த தீர்வொன்றை பெற்றுக் கொடுத்து விட்டே இறப்பேன்
தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு சார்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான கட்டுப் பணம் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊடகங்களிற்கு ஆனந்தசங்கரி கருத்து தெரிவிக்கையில் “எமது கூட்டணியானது இம் முறை களமிறங்குவது தொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு உள்ளது கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எம்மால் பெற்றுக் கொடுக்கக் கூடிய […]





