இலங்கை செய்திகள்

இர­ணை­ம­டுக் குளத்­தின் துரு­சுக்­க­தவு சீர­மைப்பு!!

இர­ணை­ம­டுக் குளத்­தின் வாய்க்­கா­லில் வீழ்ந்த நீர்ப்­பா­சன துரு­சுக் கதவு சீர­மைக்­கப்­பட்­டுள்­ளது. மாவட்ட நீர்ப்­பா­ச­னப் பொறி­யி­ய­லா­ள­ரின் முயற்­சி­யி­னால் கதவு தற்­போது சீர்­செய்­யப்­பட்­டுள்­ளது – என விவ­சா­யி­கள் சம்­மே­ள­னத்­தி­னர் தெரி­வித்­த­னர். குளத்­தின் இட­து­கரை வாய்க்­கா­லின் துரு­சுக் கத­வு­கள் இரண்­டில் ஓர் கத­வா­னது கடந்த 20 தினங்­க­ளுக்கு முன்­னர் கழன்று வாய்க்­கா­லுக்­குள் வீழ்ந்­தது. அவ்­வாறு வீழ்ந்த கதவை மீட்டு சீர்­செய்­வ­தற்கு 15 நாள்க­ளாக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. இத­னால் ஒற்­றைக் கத­வின் மூலமே தண்ணீர் […]

நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 163 ஆவது நாடாக நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச உடன்படிக்கை சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. நிலக் கண்ணிவெடித் தடை சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதைத் தொடர்ந்து இவ்வுடன்படிக்கையில் இன்னும் சேராத நாடுகள் இலங்கையை முன்னுதாரணமாகக் கொண்டு அதனைப் பின்பற்றவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் உஸ் தெரிவித்துள்ளார்.

புது­வி­த­மான காய்ச்­ச­லால் முல்­லை­த்தீவில் 9 பேர் உயி­ரி­ழந்­தனர்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கடந்த 20 நாள்­க­ளுக்­குள் அடை­யா­ளம் காணப்­ப­டாத காய்ச்­சல் கார­ண­மாக 9பேர் உயி­ரி­ழந்­தனர். திடீர் உயி­ரி­ழப்­புத் தொடர்­பில் கொழும்பு அர­சின் மருத்­து­வக் குழு முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் ஆய்­வில் ஈடு­பட்­டுள்­ளது. முல்­லைத்­தீவு நக­ரப் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­களே இந்­தக் காய்ச்­சல் கார­ண­மாக உயி­ரி­ழந்­தனர். தொடர்ச்­சி­யான காய்ச்­ச­லின் பின்­னர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட 9 பேரும் உயி­ரி­ழந்­த­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பில் வடக்கு மாகாண சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தின் கவ­னத்­துக்குக் கொண்டு செல்­லப்­பட்­டது. கொழும்பு […]

பொது­ஜன பெரமுன நீதி­மன்றம் செல்கிறது

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­காக ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஆறு சபை­க­ளுக்கு தாக்­கல்­ செய்த வேட்­பு­ம­னுக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டமை தொடர்பில் அக்­கட்சி அடுத்­த­வாரம் உயர்­நீ­தி­மன்றம் செல்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளது. அக­ல­வத்தை, பதுளை, பாணந்­துறை, மஹி­யங்­கனை, மஹ­ர­கம, வெலி­கம ஆகிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு பொதுஜன பெரமுன தாக்கல் செய்த வேட்பு மனுக்­களே நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வினால் தாக்கல் செய்­யப்­பட்ட வேட்பு மனுக்­களில் சிறு சிறு தவ­றுகள் மாத்­திரம் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும், அதனை உயர்­நீ­தி­மன்ற தீர்ப்பின் பிரகாம் […]

பாதிக்கப்பட்டோரின் பங்களிப்பு அவசியம் : ஐ.நா. குழு வலியுறுத்தல்

காணாமல் போனோர் தொடர் பில் ஆராய்­வ­தற்­கான அலு­வ­ல கம் உட­ன­டி­யாக தொழிற்­பாட்­டுக்கு வர­வேண்டும். இதனை அரசாங்கம் விரைந்து உறு­திப்­ப­டுத்த வேண்டும். காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலு­வ­ல­கத்தை செயற்­ப­டுத்தும் செயற்­பாட்டில் பாதிக்­கப்­பட்டோர், சிவில், சமூக அமைப்­பினர் இடம்­பெ­ற­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்று இலங்­கைக்கு விஜயம் செய்த தன்­னிச்­சை­யாக தடுத்­து­வைத்தல் தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடு­களின் செயற்­குழு உறுப்­பி­னர்கள் தெரி­வித்­துள்­ளனர். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை இலங்கை அர­சாங் கம் உட­ன­டி­யாக நீக்­க­வேண்டும். தாம­த­மின்றி அந்த […]

கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழர் விடுதலைக்கூட்டனி

மன்னாரில் கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழர் விடுதலைக்கூட்டனி தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் சார்பில் தமிழர் விடுதலைக்கூட்டனியின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை(15) காலை 11 மணியளவில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளில் ஒன்றான சனநாயக தமிழரசு கட்சியின்  செயலாளர் வி. எஸ் .சிவகரன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. -மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை,மாந்தை மோற்கு […]

பரீட்சைக்கு தோற்றச்சென்ற இரு மாணவர்கள் கைது !

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காகச் சென்ற இரு மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதுளை, லுனுகலை பகுதியில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு மாணவர்களே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இரு மாணவர்களும் போலி ஆவணங்களுடன் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள் இருவரும் 17 மற்றும் 18 வயதுடையவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் […]

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்

சிறு­வர் துஷ்­பி­ர­யோ­கம் தொடர்பாக இவ்வருடம் 8,500 முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை அறி­வித்­துள்­ளது. இதற்கிணங்க சிறு­வர்­களின் கட்­டாய கல்­வியை தடுத்தல் தொடர்­பாக 1298 முறைப்­பா­டு­களும் பாலியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்­பாக 481 முறைப்­பா­டு­களும், தீவிர பாலியல் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பாக 284 முறைப்­பா­டு­களும், 14 வய­துக்­குட்­பட்ட பெண் பிள்­ளைகள் மீதான வன்­பு­ணர்வு தொடர்­பாக 322 முறைப்­பா­டு­களும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. குழந்தை மற்றும் இளைஞர் கட்­டளை சட்­டத்தின் […]

ஏ9 வீதியில் பார ஊர்தி விபத்து

வவுனியா ஏ9 வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பார ஊர்தி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் அதன் சாரதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இரும்பகம் ஒன்றிற்கு பொருட்களை ஏற்றிச்சென்ற பார ஊர்தியின் சாரதிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டமையினால் பாரஊர்தி வீதியை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந் நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்ககும் நிலையில் பார ஊர்தியின் சாரதி உயிரிழந்துள்ளார். உடனடியாக வவுனியா […]

எமது மக்களுக்கு சிறந்த தீர்வொன்றை பெற்றுக் கொடுத்து விட்டே இறப்பேன்

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு சார்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான கட்டுப் பணம் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊடகங்களிற்கு ஆனந்தசங்கரி கருத்து தெரிவிக்கையில் “எமது கூட்டணியானது இம் முறை களமிறங்குவது தொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு உள்ளது கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எம்மால் பெற்றுக் கொடுக்கக் கூடிய […]