ஐக்கிய நாடுகள் அமைதிக்காக்கும் படையணியிலிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ள இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர் குற்றங்களில் ஈடுப்படவில்லை என இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்காக்கும் படையில் இணைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ அதிகாரி திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி போர் குற்றச்சாட்டுகளுக்குள்ளனவர் என்பதாலேயே திருப்பி அனுப்பியதாக ஐ.நா பொதுச்செயளாலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். ஐ.நா அமைதி காக்கும் படையில் மாலியில் பணியாற்றிய லெப்.கேணல் கலன பிரியங்கர லங்காமித்ர அமுனுபுர […]
இலங்கை செய்திகள்
இலங்கை அரசாங்கத்திடம் சோரம் போகாத சகோதரி தமிழினி
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி ஜெயக்குமரன் அவர்களுக்கு இன்று மூன்றாம் நினைவு நாள். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் தமிழினின் கல்லறைக்கு சென்று மரியாதை செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், கடந்த முன்று வருடங்களுக்கு முன்பு புற்று நோய்த் தாக்கத்தினால் உயிர் துறந்த சகோதரி தமிழினி அவர்களின் அகாலமரணம் தமிழ் மண்ணின் ஒரு பேரிழப்பாகும். இந்நிலையில், இன்று தமிழினி அக்காவின் மூன்றாம் ஆண்டு […]
வவுனியாவில் தொடரும் மழை! குளம் உடையபோகும் அபாயத்தில்…
வவுனியா மாவட்டத்தில் பூம்புகார் பிரதேசத்தில் உள்ள வைராமூன்றுமுறிப்பு குளம் உடைப்பெடுக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக 2 அடி நீர் வெளியேறியுள்ளது. இதனையடுத்து அவசர அவசரமாக அதனை மறுசீரமைக்கும் பணி முழுவீச்சாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் மூன்று நாள்களாகத் தொடரும் மழையை அடுத்து குளத்துக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குளத்தின் அணைக்கட்டுப் பகுதியில் இருந்து நீர்க் கசிவு ஏற்பட்டு அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயம் காணப்பட்டது. […]
ஆவா குழுவை உருவாக்கியவர்கள் தொடர்பான மர்மம் அவிழ்ந்தது
‘ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் காவல்துறையினர்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு மீட்டதாக பொய் வழக்கைப் போட்டவர்களும் அவர்களே. அவ்வாறானவர்களால் முற்படுத்தப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அப்பாவிகள். அவர்களைப் பிணையில் விடுவிக்கவேண்டும்’இவ்வாறு கடும் தொனியில் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தார் சிரேஸ்ட சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ். கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஆடியபாதம் வீதியில் இளைஞர் ஒருவரைத் தாக்கி காயம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் 4 இளைஞர்கள் […]
பிரதமர் இன்று இந்தியா விஜயம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது. நாளை அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதன்போது இலங்கை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இடம்பெறுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளது. அத்துடன் இலங்கை மற்றும் இந்திய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் இந்தியா செல்லும் பிரதமர் ரணில், அங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனும், அந்த […]
காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல்
எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்துக் காணிகளையும் விடுவிக்க வேண்டுமென ஜனாதிபதி பணித்துள்ளமையினால், குறிப்பிட்ட திகதிக்குள், அனைத்துக் காணிகளையும் விடுவிப்பதற்கான இராணுவத்தினரின் நடவடிக்கை என்ன என்பது பற்றி அறிவிப்பதாக, இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். முப்படைகளின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (16) நடைபெற்றது. இந்தக் […]
என்னை கொலை செய்ய திட்டமிடும் இந்தியா! மைத்திரி
ஜனாதிபதி இதனை தெரிவித்தவேளை நாங்கள் அதிர்ச்சியடைந்தோம் என பெயர் குறிப்பிடவிரும்பாத அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். இதேவேளை இதனை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி ஊடக பிரிவினை தொடர்புகொண்டவேளை இது குறித்து ஆராய்ந்து கருத்து தெரிவிக்கின்றோம் என அவர்கள் தெரிவித்தனர் எனினும் பின்னர் தொடர்புகொள்ளவில்லை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற் விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே இந்த குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.இலங்கை அரசியல் தலைவர் ஒருவர் இந்திய புலனாய்வு […]
புதிய கட்சியை தொடங்கும் அனந்தி சசிதரன்
எதிர்வரும் 25 ஆம் திகதி வடமாகாண சபை கலையவுள்ள நிலையில் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதர ன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார். தமது கொள்கையுடன் இணைய விரும்பும் அனைவருக்கும் அவர் அழைப்பும் விடுத்துள்ளார். வடமாகாண சபையின் பதவிக்காலம் இம்மாதம் 25 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தமது புதிய கட்சி குறித்து அறிவிப்பு […]
வைரமுத்து வினாவால் ஈழத்தில் ஆவேசமடைந்த இயக்குனர் பாரதிராஜா
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தென்னிந்தியாவின் பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர், இயக்குனர் சிகரம் பாரதிராஜா ஊடகவியலாளர்களின் கேள்விகளால் ஆவேசமடைந்துள்ளார். ஊடக சந்திப்பின் போது, தனது கலைத்துறை தொடர்பாகவும் தனது தொழில் தொடர்பாக எது கேட்டாலும் பதில் கூறுவேன் என இயக்குனர் தெரிவித்திருந்தார். எனினும், கலந்து கொண்டிருந்த ஒரு சில ஊடகவியலாளர்கள் தமிழ்நாட்டில் தற்போது அதிக சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் ஒன்றான […]
புலிகளின் கப்பலை பார்வையிட இராணுவத்தினர் தடை
விடுதலைப் புலிகள் அமைப்பின் போர் கப்பலை, பொதுமக்கள் பார்வையிட இராணுவத்தினர் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி யோர்தான் நாட்டுக்கு சொந்தமான போர் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளது. பின்னர் குறித்த கப்பல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது இலங்கைப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதேவேளை, […]





