இலங்கை செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

மீண்டும் பரபரப்பில் இலங்கை அரசியல்

ஆறு எம்.பி.க்களை வைத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தற்போது கொழும்பில் நடந்துவரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். அதைப் போலவே இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீமும் ரணில் விக்கிரம சிங்கே கரத்தை பலப்படுத்துவதாக அறிவித்தார். நாடாளுமன்றம் நவம்பர் 16-வரை ஒத்திவைத்துள்ளனர். இதனிடையே நாடாளுமன்றத்தை நவம்பர் 16 வரை ஒத்திவைத்து வர்த்தமாணி அறிவிப்பு […]

Ranil

மைத்திரியின் மதிய முடிவால் பேரதிர்ச்சியில் ரணில்

பிரதமரின் செயலாளர் சமன் எக்கநாயக்கவின் பதவி உடன் நடைமுறைக்கு வரும்வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளரான சமன் ஏக்கநாயக்கவின் பதவியே உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் நீக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பரிந்துரைக்கு அமைய புதிய செயலாளரை ஜனாதிபதி நியமிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய பாராளுமன்றின் இரண்டாவது கூட்டத்தொடர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் படி பாராளுமன்றின் […]

மஹிந்த தலைமையில் புதிய அமைச்சரவை

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான விசேட கூட்டம் ஒன்று தற்போது கொழும்பில் இடம்பெறுவதாக கொழுப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாளைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாகவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை மறுதினம் திங்கட்கிழமை அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள் மற்றும் பிரதமரின் செயலாளர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிப்பதாக குறித்த செய்தி தெரிவிக்கின்றது.

கருணா

மகிந்தவின் புதிய அரசில் அமைச்சராக பதவியேற்கவுள்ள கருணா?

கருணா அம்மான் அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குள் நுளையும் கருணாா முக்கிய அமைச்சு பதவி வழங்கப் படலாம்…

பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேர் அதிரடியாக கைது!

அம்பாறை ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் பொலிஸாரினால் இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகக் கட்டிடத்தில் தங்களது பெற்றோருடன் தங்கியிருந்த நிலையில் அக்கரைப்பற்றுப் பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை, தொழில்நுட்ப துறையை சேர்ந்த சில சிங்கள மாணவர்கள், கடந்த இரண்டு வார காலமாக ஆக்கிரமித்து போராடி வந்தனர். இதனையடுத்தே பல்கலைக்கழகத்தை மறு அறிவிப்பு செய்யும் வரையில், மூடும் தீர்மானம் நிர்வாகத்தினால் […]

இராணுவத்தை சி.வி.விக்னேஸ்வரன்

விக்கி புதுக்­கட்சி அறி­வித்த நாள் தமி­ழர் வாழ்­வில் கறை­ப­டிந்த நாள்

80 வய­தி­லும் பத­வி­வெறி பிடித்து, தமி­ழீழ தேசி­யத் தலை­வர் பிர­பா­ர­க­ரன் உரு­வாக்­கிய தமிழ் மக்­க­ளின் அர­சி­யல் இருப்­பான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை உருக்­கு­லைக்க சிங்­க­ளப் பேரி­ன­வா­தத்­தால் சூச­க­மாக கள­மி­றக்­கப்­பட்ட தமி­ழின துரோ­கியை அடை­யா­ளம் காட்­டி­ய­நாள் நேற்று (நேற்­று­முன்­தி­னம்). இது தமி­ழர் வர­லாற்­றில் கறை­ப­டிந்த நாள் என்று வர­லாறு தமி­ழ­ருக்கு குறித்­துச் சொல்­லும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிவ­மோ­கன் தெரி­வித்­தார். அவ­ரது இல்­லத்­தில் நேற்று […]

மஹிந்த் மற்றும் சுதந்திர கட்சி அணியை மிரட்டிய ரணில்

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்கு நிபு­ணர்­க­ளால் சமர்­பிக்­கப்­பட்ட வரைவு ஆவ­ணத்­தின் மொழி­ பெ­யர்ப்­புக்­களை படித்­துப் பார்ப்­ப­தற்கு நேரம் போதாது என்­றும் கால அவ­கா­சம் தேவை என­வும், மகிந்த அணி­யும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் சுயா­தீன அணி­யும் வலி­யு­றுத்­தின. ஆனால் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அப்­ப­டி­யா­னால் இந்த வரைவு ஆவ­ணத்தை மக்­க­ளுக்­குப் பகி­ரங்­கப்­ப­டுத்­தப் போகின்­றேன் என்று மிரட்­டி­யதை அடுத்து மகிந்த அணி­யும், சுதந்­தி­ரக் கட்­சி­யின் சுயா­தீன அணி­யும் பணிந்­தன. வழி­ந­டத்­தல் குழு­வின் […]

கிளிநொச்சி வைத்தியசாலையில் 12 வயது சிறுமிக்கு பிரசவம்! திகைத்துபோன மருத்துவர்கள்

மல்லாவியில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அம்புலன்ஸில் அழைத்துவரப்பட்ட 12 வயது சிறுமி போகும் வழியிலே பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையும் பிறந்தது. பின் கிளிநொச்சி வைத்தியசாலையில் தாயும் சேயும் அனுமதிக்கபட்டனர்.இந்த 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த செய்தி மருத்துவர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இரகசிய இராணுவக் கொலைக் குழுவை

இலங்கை அதிபராகும் கோத்தாவின் கனவு…!

டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைப்பதில் 80 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக, அடுத்த அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என நம்பப்படும் கோத்தாபய ராஜபக்ச கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக உருவாக்கப்பட்ட மேல்நீதிமன்றுக்குச் சென்றிருந்தார். அங்கு, கோத்தாபய ராஜபக்சவிடம் ‘மகிந்த தங்களை அடுத்த அதிபர் வேட்பாளராகக் களமிறக்காது, தங்களின் சகோதரரான பசில் ராஜபக்சவை அடுத்த அதிபர் வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக கூறப்படுகிறது’ என ஊடகங்கள் கேள்வியெழுப்பின. ‘எமது குடும்பத்திற்குள் பிரிவை ஏற்படுத்துவதை […]

அரசாங்கத்துடன் அமைச்சர் சம்பிக்க கருத்து மோதல்

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைகளை நீக்கிக் கொள்வதற்கு இராஜதந்திர ரீதியிலான முன்னெடுப்புக்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என மாநகர மற்றம் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கருத்தை அமைச்சர் முன்வைத்துள்ளார். இதுவல்லாமல், காணாமல் போனோர் ஆணைக்குழு, காணாமல் போனோர் செயலகங்கள், இழப்புக்களுக்கான நஷ்டஈடு வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் மூலமாக […]