உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் துஷார தலுவத்தைக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவரை துஷார தலுவத்தை தாக்கியிருந்தார்.

இது குறித்த காட்சிகள் ஊடகங்களில் பரவியதையடுத்து அவர் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இடமாற்றம், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை என்பனவற்றுக்கு முகங்கொடுத்திருந்த அவர் மீது தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணையகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *