தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் நலன்கருதி நேற்று முதல் மேலதிக பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த மேலதிக பஸ்சேவை எதிர்வரும் 14ம் திகதி வரை இடம்பெறும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு – புறக்கோட்டை பிரதான பஸ் நிலையத்திலிருந்து மேலதிகமாக 3900 பஸ்பயணங்கள் இடம்பெறவிருக்கின்றன.

சொந்த இடங்களிலிருந்து பிரதான நகரங்களுக்கு திரும்பும் மக்களின் நலன்கருதி எதிர்வரும் 15ம் திகதி முதல் 25ம் திகதி வரை மேலதிக பஸ் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள், நடத்துனர்கள் உட்பட அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ளவர்களின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *