Friday , May 17 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ரணிலை கட்சியில் இணைய சஜித் அழைப்பு!

ரணிலை கட்சியில் இணைய சஜித் அழைப்பு!

ரணிலை கட்சியில் இணைய சஜித் அழைப்பு!

” ஐக்கிய மக்கள் சக்தியின் கதவும் திறந்தே உள்ளது.எனவே, ரணில் விக்கிரமசிங்க உட்பட ஏனைய உறுப்பினர்கள் இக்கூட்டணியில் இணையலாம்.” – என்று சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய சஜித் பிரேமதாச,
“ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரின் ஆசியுடன் கட்சி அனுமதித்த வேலைத்திட்டத்தையே நாம் முன்னெடுத்துசெல்கின்றோம்.

புதிய கூட்டணி அமைப்பதற்கும், செயலாளரை தெரிவுசெய்வதற்கும், வேட்பு குழுவின் தலைவராக செயற்படுவதற்கும் எனக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி புதிய கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நானும் கட்சி செயலாளரும் நேரில் சென்று அழைப்பு விடுத்தோம்.

அந்த அழைப்பு இன்னும் செல்லுபடியாகும். எமது கூட்டணியின் கதவு திறந்தே உள்ளது. எந்நேரத்தில் வேண்டுமானாலும் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட உறுப்பினர்கள் வந்து இணையலாம். அரசாங்கத்தை தோற்கடிக்க பலமான கூட்டணியை அமைக்கலாம்.” – என்றார்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv