Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பதவியை பறிக்கவே முடியாது – சஜித்

பதவியை பறிக்கவே முடியாது – சஜித்

பதவியை பறிக்கவே முடியாது – சஜித்

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் பதவியை பறிக்க முடியாது என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மாவன்னல்லையில் இன்று (07) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு வழங்கிய அனுமதியின் பிரகாரமே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. அந்த கூட்டணியின் பணிகளெல்லாம் செயற்குழு வழங்கி அனுமதியுடனேயே இடம்பெறுகின்றது.

எனவே, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் பதவியை எவரும் பறிக்கமுடியாது. அதற்கு நாம் இடமளிக்கவும் மாட்டோம்.” – என்றார்.

சஜித்துக்கு ஆதரவு வழங்கியுள்ள உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் பதவிகளை பறிப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் ரணில் ஆதரவு அணி தீர்மானித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே சஜித் மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv