ஐ.தே.க. இரண்டாக உடைந்தால் சஜித் பக்கமே நாங்கள்
“ரணிலும், சஜித்தும் இணைந்தால் ஐக்கிய தேசியக்கட்சியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அவர்கள் இணைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் கூட. அவ்வாறு நடைபெறாமல் தனித்தனியாக போட்டியிட்டால் சஜித் அணியையே நாம் ஆதரிப்போம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக மகளிர் முன்னணி 08.03.2020 அன்று தனது கட்சியின் சர்வதேச மகளிர் தினத்தை அட்டனில் கொண்டாடியது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் மத்தியஸ்தத்துடன் ரணில் தரப்பும், சஜித் அணியும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது சந்தோசமான தகவலாகும். இருவரும் பிளவுபடாமல் ஐக்கியமாக பயணித்தால் அது ஐக்கிய தேசியக்கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பலமாக அமையும்.
சிலவேளை இணைவு சாத்தியமில்லாமல், பொதுத்தேர்தலில் இரு அணிகள் போட்டியிட்டால் தமிழ் முற்போக்கு கூட்டணியாகிய நாம் சஜித் பக்கமே நிற்போம். அதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. எனவே, இனி முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம். எமது மக்களும் சஜித் தலைமையிலான அணிக்கு பேராதரவை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி தனித்து போட்டியிட்டால் அது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
அதேவேளை, சட்டம் அனைவருக்கும் சமமாகும். எனவே, பிணைமுறி விவகாரத்தில் ரவி கருணாநாயக்க குற்றம் இழைத்திருந்தால் நிச்சயம் தண்டனை அனுபவிக்க வேண்டும். குற்றம் இழைக்கவில்லையெனில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தான் நிரபராதி என்பதை நிரூபித்து விடுதலையாக வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை மாவட்டத்துக்கே கூடுதல் வேலைகளை செய்தார். அவர் நாட்டுக்காக பெரிதாக எதனையும் செய்யவில்லை. எனவே, தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கி, பொலன்னறுவை மாவட்டத்துக்குள்ளேயே அவர் இருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். ” – என்றார்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கமுடியாது – மஹிந்த
-
ரவி எங்கே? ஜே.வி.பி. பரபரப்பு தகவல்
-
தற்போதைய அரசாங்கத்திடம் பொருளாதாரம் குறித்து முறையான எந்த திட்டமும் இல்லை! சஜித்
-
கொரோனாஅச்சுறுத்தல் – இத்தாலி இலங்கையர்கள் 60,000 பேருக்கு பாதிப்பு!
-
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்!
-
அன்பழகன் மறைவு மலையக தமிழர்களுக்கு பேரிழப்பு
-
தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – மைத்திரி
-
பதவியை பறிக்கவே முடியாது – சஜித்
-
கொடிய கொரோனாவினால் உலகளவில் 100,000 பேர் பாதிப்பு!
-
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க பிரித்தானியா முடிவு
-
யாழில் பெண் அரச உத்தியோகத்தருக்கு வந்த மிரட்டல் கடிதம்!
-
திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவு!
-
ரவி உள்ளிட்ட 10 பேருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி
-
ரணிலை விரைவில் கைது செய்ய நடவடிக்கை!
-
இலங்கையில் கொரோனா …10 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!
-
கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் 5 நாட்களுக்கு பின்னர் உயிரிழப்பு – பெரும் அச்சம்!
-
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு ..!