Friday , May 17 2024
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / டோலி சாய்வாலாவை சந்தித்து அவரது கைவண்ணத்தில் தயாரான டீயை பருகினார் – பில் கேட்ஸ்

டோலி சாய்வாலாவை சந்தித்து அவரது கைவண்ணத்தில் தயாரான டீயை பருகினார் – பில் கேட்ஸ்

இந்தியாவில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். அப்போது, நாக்பூர் சென்ற அவர் டோலி சாய்வாலாவை சந்தித்து அவரது கைவண்ணத்தில் தயாரான டீயை பருகினார். இந்தியாவில் திரும்புகிற திசை எங்கும் புதுமையை காணலாம் என்றும் அதில் ஒன்று இந்த டீ தயாரிப்பு என்றும் பில்கேட்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

பல லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்து பகிர்ந்து வருகின்றனர். பில்கேட்ஸ்-ஐயே தனது டீக்கு ரசிகராக்கியதன் மூலம் ஒரே நாள் இரவில் டோலி சாய்வாலா உலக அளவில் பிரபலமாகியுள்ளார்.

இப்போ இவருக்கு டீ போடறதை விட பல்வேறு டிவி சேனல்களுக்கு பேட்டிக் கொடுக்கவே நேரம் சரியா இருக்குதாம்

அதே , யார் இந்த டோலி சாய்வாலா என இணையத்தில் தேடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

டீ தொழிலாக இருந்தாலும் அதை விரும்பி செய்தால், உலக பணக்காரர்களே உங்களது வாடிக்கையாளர் ஆவார்கள் என்பதை டோலி சாய்வாலா புரூப் பண்ணிட்டாரில்லே

Check Also

இலங்கை செய்திகள் 25/02/2024 – Sri lanka Tamil News | Tamil Nadu News Tamil l World News Tamil

இலங்கை செய்திகள் 25/02/2024 – Sri lanka Tamil News | Tamil Nadu News Tamil l World …