Friday , May 17 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – மைத்திரி

தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – மைத்திரி

தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – மைத்திரி

” பொலன்னறுவை மாவட்டமே இனிமேல் என் அரசியல் தளம். அதற்கு அப்பால் தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” கழுகு கதை கூறியதையடுத்து, என்னை இலக்கு வைத்து சிலர் சொற்கணைகளைத் தொடுத்துவருகின்றனர். எதற்காக நான் அவ்வாறு கூறினேன் என்பதுகூட தெரியாமல் குறுகிய அரசியல் நோக்கில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. ஆனால், அந்த கதையின் பொருள் பொலன்னறுவை மக்களுக்கு தெரியும்.

அதேபோல் என்னை எப்படிதான் விமர்சித்தாலும், எனக்கு எதிராக தொடுக்கப்படும் ஒவ்வொரு தாக்குதலும் பொலன்னறுவை மக்கள் மத்தியில் எனக்கான செல்வாக்கை அதிகரிக்கவே செய்யும். அவர்கள் என்னை ஒருபோதும் கைவிடமாட்டார்கள்.

இனி இங்குதான் என் அரசியல் தொடரும். தேசிய ரீதியில் சென்று தேர்தல் கேட்டும் எண்ணம் எதுவும் இல்லை.” – என்றார்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv