Other News

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கல்குடா பகுதியில் இரு தமிழ் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், நீதி விசாரணை கோரியும் இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவிற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மட்டக்கயப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், என்.சிறீநேசன், எஸ்.வியாழேந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா, மாகாண அமைச்சர் ரி.துரைராஜசிங்கம் மற்றும் பெருமளவான […]

யுத்த பாதிப்புக்கள் தொடர்பில் இலங்கை நிறைவேற்ற வேண்டிய கருமங்கள் ஏராளம்: பிரித்தானியா

யுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை இன்னும் பல்வேறு கருமங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது என பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சர் Baroness Joyce Anelay தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அந்த அறிக்கையில் மேலும் தொிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்த சில முக்கிய விடயங்களை ஐக்கிய நாடுகள் […]

அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க எங்கள் எம்.எல்.ஏக்களிடம் நண்பர்கள் மூலம் பேசிவரும் மு.க.ஸ்டாலின் – தினகரன் குற்றசாட்டு

அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க எங்கள் எம்.எல்.ஏக்களிடம் நண்பர்கள் மூலம் மு.க.ஸ்டாலின் பேசிவருவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். சென்னை ராயப்பேட்டையில் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆர்.கே.நகரில் வெற்றிபெற்று, இரட்டை இலை சின்னத்தை மீட்பேன். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.ஆர்.கே நகரில் யார் பணம் கொடுக்கிறார்கள் என மக்களிடம் கேட்டுபாருங்கள். தமிழகத்தில் அ.தி.மு.கவை ஒழித்து விட வேண்டும் என சில செயல்படுகிறார்கள். ஆட்சியை […]

சந்திரிகா குமாரதுங்க

நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய கல்வி அலகு

மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பண்புகளை வளர்பதை நோக்காகக் கொண்டு ஸ்ரீலங்காவில் புதிய கல்விப் பிரிவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சுடன் இணைந்து தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான கல்வி அழகினை ஆரம்பிக்கவுள்ளது. இந்த பாட அழகு தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் பண்டாராநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் […]

கேகாலை சிறைச்சாலைக்கு குண்டு துளைக்காத பேருந்து: சுவாமிநாதன் அறிவிப்பு

கேகாலை சிறைச்சாலையின் உபயோகத்துக்கு, குண்டுத்துளைக்காத பேருந்து ஒன்று கொள்வனவு செய்யப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசிரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். களுத்துறையில் சிறைச்சாலை பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்தே குண்டு துளைக்காத பேருந்தை கொள்வனது செய்வது தொடர்பில் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 10 நாட்களுக்குள் குறித்த குண்டு துளைக்காத பேருந்து, கொள்வனவு செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இவ்வாறான பேருந்து ஒன்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதாயின் […]

சென்னை மாநகர புதிய காவல்துறை ஆணையராக கரண் சின்ஹா பொறுப்பேற்றார்

சென்னை போலீஸ் கமி‌ஷனராக இருந்த ஜார்ஜ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கமி‌ஷனராக நியமிக்கப்பட்ட கரண் சின்ஹா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை போலீஸ் கமி‌ஷனராக இருந்த ஜார்ஜ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கமி‌ஷனராக நியமிக்கப்பட்ட கரண் சின்ஹா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை வேப்பேரியில் உள்ள கமி‌ஷனர் அலுவலகத்தில் கரண் சின்ஹா கமி‌ஷனர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஐ.பி.எஸ். அதிகாரிகள் வாழ்த்து கூறினார்கள். அதன் பின்னர் உடனடியாக கரண் சின்ஹா […]

நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து

நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து – எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் வேண்டுகோள்

நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து – எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் வேண்டுகோள் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த், நான் ஒரு கலைஞன், என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு வழங்க இருந்தார். இந்நிலையில், அவர் இலங்கைக்கு செல்லக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் […]

இலங்கைக்கு சென்று இன அரசியல் சர்ச்சை

இலங்கைக்கு சென்று இன அரசியல் சர்ச்சையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் – திருமாவளவன்

இலங்கைக்கு சென்று இன அரசியல் சர்ச்சையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் – திருமாவளவன் “இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினிகாந், இலங்கைக்குச் செல்ல வேண்டாம்” என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.0 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதுடன், இந்திய ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், லைக்கா […]

காலத்தை வீணடிக்காமல் நல்லாட்சி விரைந்து செயற்பட வேண்டும்

காலத்தை வீணடிக்காமல் நல்லாட்சி விரைந்து செயற்பட வேண்டும்

காலத்தை வீணடிக்காமல் நல்லாட்சி விரைந்து செயற்பட வேண்டும் போர்க்குற்ற விசாரணை மற்றும் போருக்குப் பின்னரான நல்லிணக்கம் தொடர்பாக ஐ.நா மனித உரிமை பேரவையின் பரிந்துரைகள் தொடர்பில், காலத்தை வீணடிக்காமல் நல்லாட்சி அரசு உடனடியாக அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். மட்டக்களப்பு செங்கலடி விவேகானந்தா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா […]

வில்பத்துக்கு வடக்கே உள்ள காணிகள் பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனம் : ஜனாதிபதி கையொப்பம்

வில்பத்து சரணாலயத்துக்கு வடக்கே அமைந்துள்ள 04 பாதுகாக்கப்பட்ட வனங்களை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையெழுத்திட்டார். வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்கேயுள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய அனைத்து வனப்பகுதிகளும் இணைக்கப்பட்டு தனியான பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்கள் இணைக்கப்பட்டு வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ‘3அ’ பிரிவின் […]