யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதனால் நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் – பின் வீதியில் இன்று மாலை 5.30 மணியளவில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதன்போது நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் […]
Other News
பொது எதிரணியின் இறுதி அஸ்திரமாகிறார் கோட்டா! – மக்கள் செல்வாக்கை நாடிபிடித்துப் பார்க்க உள்ளூராட்சி தேர்தல் ஆய்வுக் களமாகின்றது
இலங்கையில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு முயற்சித்துவரும் மஹிந்த அணியான பொது எதிரணி, இதற்கான தமது இறுதி அரசியல் அஸ்திரமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையே முழுமையாக நம்பியிருக்கின்றது எனத் தெரியவருகின்றது. இதன்படி மக்கள் மத்தியிலுள்ள அவருக்குள்ள செல்வாக்கை நாடிபிடித்துப் பார்ப்பதற்கான பரீட்சைக் களமாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தலை பொது எதிரணி கையாளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட பொது எதிரணி உறுப்பினர் ஒருவர், கோட்டாபயவையும், […]
புதிய அரசமைப்பு உருவாவதைத் தடுக்க மஹிந்த அணியினர் இருமுனைத் தாக்குதல்!
புதிய அரசமைப்பொன்றை இயற்றும் தேசிய அரசின் முயற்சியைத் தோற்கடிப்பதற்கு இருமுனைத் தாக்குதலை நடத்துவதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தீர்மானித்துள்ளது. சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொது எதிரணி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றுமுன்தினம் கூடினர். கொழும்பு, விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்தவின் இல்லத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில், அரசமைப்பு மீளமைப்பு பணி, உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், வெளிநாட்டுப் பிரமுகர்களில் இலங்கைப் […]
உள்ளூராட்சி தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகள் யானைச் சின்னத்திலேயே களமிறங்கும்! – கூட்டமைப்பு , ஜே.வி.பி. தனிவழிப்பயணம்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் டிசம்பரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தேர்தலை எதிர்கொள்வதற்காக பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றன. குறித்த தேர்தல் கலப்பு முறையிலேயே நடைபெறவுள்ளதுடன், அதற்குரிய திருத்தச் சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆளுங்கட்சியின் பிரதான பங்காளியான ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பின்கீழ் யானைச் சின்னத்தில் களமிறங்கவுள்ளது. சிறுகட்சிகள் பல ஐ.தே.கவுடன் கைகோர்க்கவுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், […]
வடக்கு மாகாண சபை விவகாரம்: சம்பந்தன் – விக்கி சந்திப்புக்கு இன்னும் திகதி முடிவாகவில்லை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து கலந்து பேசித் தீர்ப்பதற்காக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இந்த வார இறுதியில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப் பட்ட போதிலும் இதுவரை அந்தச் சந்திப்புக்கான ஒழுங்குகள் இறுதிசெய்யப்பட வில்லை. இருவருக்கும் பொதுவான நண்பரான ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனின் பங்கு பற்றுதலுடன் இந்தச் சந்திப்பு நடைபெறுகின்றமையை சம்பந்தன் விரும்புகின்றார் எனக் கூறப்படுகின்றது. சட்டத்தரணி […]
தீவிரவாதத்தை ஒழிக்க புதிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் சவூதி அரேபியா
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முறியடிக்க உள்துறை அமைச்சகத்தில் இருந்து பிரித்து புதிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்க சவூதி அரேபியா மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முறியடிக்க உள்துறை அமைச்சகத்தில் இருந்து பிரித்து புதிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்க சவூதி அரேபியா மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் தலைமையிலான கேபினட் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், எல்லை தாண்டிய தீவிரவாதம் உள்ளிட்ட விவகாரங்களை கையாள்வதற்காக […]
உளவு மற்றும் தீவிரவாத குழுவுடன் தொடர்பு: குவைத்தில் இருந்து ஈரான் தூதர்கள் வெளியேற்றம்
உளவு மற்றும் தீவிரவாத குழுவுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி குவைத்தில் இருந்து 15 ஈரான் தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். குவைத்தில் 2015-ம் ஆண்டில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. அந்த வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் 24 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தீவிரவாத தாக்குதல் நடத்தவும், உளவு வேலை பார்க்க இவர்களுக்கும் ஈரான் தூதரக அதிகாரிகள் மற்றும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து குவைத்தில் இருந்து […]
நடைபயிற்சியின்போது ஏற்பட்ட பாசத்தால் நாயை தத்தெடுத்த ராணி எலிசபெத்
நடைபயிற்சியின்போது ஏற்பட்ட பாசத்தால் நாயை தத்தெடுத்து இங்கிலாந்து ராணி எலிசபெத் பராமரித்து வருகிறார். இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு நாய்களின் மீது பிரியம் அதிகம். எனவே அவர் 3 நாய்களை வளர்க்கிறார். அந்த நாய்களுடன் நடைப்பயிற்சி மேற்கொள்வார். அப்போது முன்னாள் விளையாட்டு வீரர் பில் பென்விக் என்பவரும் தனது விஸ்பா என்ற கார்ஜி இன நாயுடன் நடைபயிற்சி செய்து வருவார். அந்த நாயின் மீது ராணி எலிசபெத் பாசம் வைத்தார். இந்த […]
தடைகள் யாவும் நீக்கம்; விரைவில் குட்டித் தேர்தல்! – நம்பிக்கை வெளியிடுகின்றார் உள்ளூராட்சி அமைச்சர் பைசர்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தேர்தல் முறையில் தொகுதி மற்றும் விகிதாசார அடிப்படையில் ஆசனங்களை ஒதுக்கீடுசெய்வது குறித்தும், பெண்களுக்கு 25 வீத வாய்ப்பளிப்பது குறித்தும் பேச்சுகள் நடைபெற்றுவருகின்றன. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலம், பேச்சுகளையடுத்து […]
அரசிலிருந்து எவரும் வெளியேறமாட்டர்! – டிசம்பரில் சு.கவின் முடிவை அறிவிப்போம் என்கிறார் துமிந்த
“வீடு என்றால் ஆயிரம் சண்டை இருக்கும். சாதாரண சண்டைக்காக உடனே எவரும் வெளியேறமாட்டார்கள். டிசம்பர் மாத இறுதியில் தேசிய அரசில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்து இருக்குமா? இல்லையா? என்று அறிவிப்போம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தேசிய அரசில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டுவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து சிலர் விலகவுள்ளனர் […]





