“போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டுள்ள படையினரைக் காப்பாற்றும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார். இவர் தன்னுடைய இனத்தைக் காப்பாற்ற முற்படுகின்றார்; அழிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட தமிழினத்துக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கப் பின்னடிக்கின்றார்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் தெரிவித்துள்ளது. “ஜனாதிபதி சர்வதேச சமூகத்தினருக்கு வழங்கிய அல்லது அவர்களுடன் இணங்கிக் கொண்ட விடயங்களைச் செய்வது நல்லது” என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. […]
Other News
ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரத்தை கையிலெடுக்கின்றது மு.கா.! – ஜனாதிபதியின் அவசர தலையீட்டைக் கோரினார் ஹக்கீம்; சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை கொண்டு வரவும் முடிவு
மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்தும், ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங்கை அரசு நேசக்கரம் நீட்டவேண்டும் எனக் கோரியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை கொண்டுவரவுள்ளது. இந்தத் தகவலை தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் உறுதிப்படுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம், ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக இலங்கை ஆதரவுக்குரல் எழுப்பவேண்டியதன் அவசியத்தைப் பற்றி தான் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் எடுத்துரைத்துள்ளார் என்றும் […]
ஆறாவது முறையாக அணு குண்டு பரிசோதனை செய்து வடகொரியா அடாவடி
சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கண்டம்விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைகளையும் இந்நாடு பரிசோதித்துள்ளது. அமெரிக்காவை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் வட கொரியாவின்மீது ஐ.நா.சபை சமீபத்தில் புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. இது வடகொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய பொருளாதார தடை எங்கள் இறையாண்மைக்கு எதிரானது. அதற்கு அமெரிக்கா உரிய விலை […]
தே.மு.தி.க. அமைப்பு தேர்தல்: விஜயகாந்த் அறிவிப்பு
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- தே.மு.தி.க.வின், 2017 கழக அமைப்பு தேர்தல் 3-ம் கட்டமாக இன்று முதல் 7-ந்தேதி வரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட கழக அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட கழகத்திற்கும் கழக அமைப்பு தேர்தல் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படும் பதவிகள், மாவட்ட கழக செயலாளர், அவைத் தலைவர், பொருளாளர், 4 துணை செயலாளர்கள், 2 செயற்குழு உறுப்பினர்கள், 5 பொதுக்குழு உறுப்பினர்கள் […]
வடகொரியாவின் அணு குண்டு பரிசோதனை கவலை அளிப்பதாக உள்ளது
சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் இந்நாடு பரிசோதித்துள்ளது. இந்நிலையில், வட கொரியா நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிக்கு இடையில் உள்ள சுங்ஜிபேகாம் பகுதியில் (உள்ளூர் நேரப்படி) இன்று பகல் 12.36 மணியளவில் சக்திவாய்ந்த அணு குண்டினை வடகொரியா பரிசோதித்ததாகவும் இதன் விளைவாக 6.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. வட கொரியா இன்று […]
தமிழக அரசு அளித்த ரூ.7 லட்சம் நிதியுதவியை வாங்க மறுத்த அனிதா குடும்பத்தினர்
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனது மருத்துவக் கனவு தகர்ந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு மாநிலம் முழுவதும் மாணவர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 7 லட்சம் […]
கட்டட விபத்தில் பெற்றோரை இழந்த ஒன்றரை வயது குழந்தைக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி
தமிழக முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம், டவுன் கிராமத்தில் இன்று (3.9.2017) தனியாருக்குச் சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில், இரண்டாவது தளத்தில் வசித்து வந்த கார்த்திக், அவருடைய மகன் சிறுவன் ஹரீஸ் மற்றும் பழனி, அவருடைய மனைவி ராஜாத்தி ஆகிய நான்கு நபர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். இந்த […]
‘புளூவேல்’ விளையாட்டால் ரெயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை
இந்தியாவில் தற்போது ‘புளூவேல்‘ ஆன்லைன் விளையாட்டால் மாணவ–மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. தற்கொலை விளையாட்டு என்றழைக்கப்படும் இந்த விளையாட்டுக்கு மாணவ–மாணவிகள் அடிமையாகி இருப்பது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ‘புளூவேல்‘ விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தாலும், இந்த விளையாட்டு ஒழிந்தபாடில்லை. இந்தியாவில் இந்த விளையாட்டால் ஏராளமான மாணவ–மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த விபரீத விளையாட்டானது, 50 நாட்களை இலக்காக கொண்டு […]
அடுத்த கல்வியாண்டில் 800 பொறியியல் கல்லூரிகளுக்கு மூடு விழா?
கடந்த 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக 30%க்கும் குறைவான இடங்களே நிரம்பும் பொறியியல் கல்லூரிகளை அடைக்கப்பட உள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) தலைவர் அனில் தத்தாத்ரயா கூறியுள்ளார். பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தத்தாத்ரயா நாடு முழுவதும், 2018-19 கல்வி ஆண்டில் குறைவான தரத்துடனும், முழுமையான அளவில் சீட்கள் நிரப்பப்படாத 800க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என கூறினார். தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 10,363 […]
சமூகநீதியையும், மாநில உரிமையையும் பறிகொடுத்து விடுவோமோ!
அந்தோ அனிதா.. உன்னைப் போலவே சமூகநீதியையும், மாநில உரிமையையும் பறிகொடுத்து விடுவோமோ என்ற வேதனைத் தீ நெஞ்சில் எரிகிறது. அந்தத் தீயையே சுடராக்கி போராட்டக் களம் காண்போம். உன் உயிர்ப்பலிக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளை ஜனநாயக முறையில் வீழ்த்தி, சமூகநீதியை என்றும் பாதுகாப்போம் எனத் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் அனைவரும் சூளுரை மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் […]





