நடிகர் விஷாலின் ஆர்.கே.நகர் தொகுதி வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு ஒரே காரணம் அவரை முன்மொழிந்த தீபன் மற்றும் சுமதி ஆகிய இருவரும் தாங்கள் விஷாலை முன்மொழிந்து கையெழுத்து போடவில்லை என்று கூறியதுதான் இந்த நிலையில் தேர்தல் அதிகாரி முன் தீபன் கூறும் வாக்குமூலத்தின் வீடியோவை விஷால் வெளியிட்டுள்ளார். அதில் தீபன், ‘நான் போட்ட கையெழுத்து என்னுடையதல்ல’ என்று கூறுகிறார். இதைவிட ஜனநாயக கேலிக்கூத்து எங்காவது நடந்ததுண்டு? என்றும் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார் […]
Other News
8-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீவைத்து எரிப்பு
மத்திய பிரதேசத்தில் 8-ம் வகுப்பு மாணவியை இரண்டு கொடூரர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அச்சிறுமியை தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் சாகர் மாவட்டம் தேவல் கிராமத்தில் 8ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட 2 இளைஞர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை சிறுமி மீது ஊற்றி […]
இன்றைய ராசிபலன் 09.12.2017
மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம்: நட்பால் ஆதாயம் உண்டு. வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் […]
கணபதிப்பிள்ளை ஜெயநாதன் (நாதன்)
கொக்காவில் வீதி, துணுக்காயைப் பிறப்பிட மாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப் பிள்ளை ஜெயநாதன் (நாதன்) நேற்று (07.12.2017) வியாழக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற கதிர்காமு கணபதிப் பிள்ளை மற்றும் சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மகனும் காந்திமதியின் (மதி) அன்புக் கணவரும் நிவேதன் (மாணவன் – மு / மல்லாவி மத்திய கல்லூரி), வினோஜா (மாணவி – மல்லாவி மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்புத்தந்தையும் பாக்கியநாதன் காலஞ்சென்ற அருணகிரிநாதன் (குகன்) மற்றும் […]
கோபமடையச் செய்த பாராட்டு!
ரசிகர் ஒருவரின் பாராட்டு இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவை கடும் கோபமடையச் செய்திருக்கிறது. இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இவ்வாரம் வெற்றி, தோல்வியின்றி நிறைவடைந்தது. எனினும் 1-0 என்ற கணக்கில் தொடரை இந்தியா பெற்றுக்கொண்டது. மொத்த மூன்று போட்டிகளிலும் பந்து வீசிய ஜடேஜா, பத்து விக்கட்களை வீழ்த்தியிருந்தார். அத்துடன் நாற்பது ஓட்டங்களையும் பெற்றிருந்தார். போட்டியின் பின் ரசிகர் ஒருவர் ஜடேஜாவைப் பார்த்து, “அஜய் (!) […]
வவுனியாவில் விழிப்புணர்வு வாகனப் பேரணி
வவுனியாவில் “பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்போம்” எனும் தொனிபொருளில் விழிப்புணர்வு வாகன பேரணியும் பொது மக்களிடம் கையச்சுப் பெறும் நிகழ்வும் நேற்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய அபிவிருத்தி நிதியம், ஜெர்மன் நிதி வழங்கும் நிறுவனம் ஆகியன இணைந்து இந்தப் பேரணியை முன்னெடுத்தது. பேரணியின் நிகழ்வில் பொதுமக்கள், இளைஞர்கள் கையில் ஒறேஞ் நிறத்திலான மையை பூசி கையச்சு பதியும் நிகழ்வும் வாகனத்தைக் கழுவி சுத்தம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.
போராளிகளை தாழ்த்தி பேசிய சுமத்திரன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் , துளசி
இடர்பாடுகள் நிறைந்த இன்றைய தாயகஅரசியல் களத்தில் நாவடக்கம் பிரதானமானது. தமிழர்கள் ஆயுதமேந்தியது இன்னுமோர் இனத்தின்மீது மேலாதிக்கத்தை செலுத்துவதற்காக அல்ல எங்களது தமிழினம் கொல்லப்படுவதில் இருந்து தமை பாதுகாத்துக்கொள்வதற்காகவே ஆயுதமேந்தினோம். அந்தவகையில் உயிரையும் உதிரத்தையும் கொடுத்து தமிழ்த்தேசியத்தை உருவாக்கி அதன் காவலர்களாக கவசங்களாக காத்துநின்றவர்கள் போராளிகள்தான். நாம்உருவாக்கிய தேசியத்தில் பதவிகள் தருகின்ற இதமானசூடுகளை அனுபவித்து ஆள்கின்றவர்கள், விடுதலைக்கனவுடன் ஆயுதமேந்தியோரை மலினப்படுத்தும்விதமாக ஆயுததாரிகள் என விளித்துநிற்பது அறத்திற்கு அப்பால்பட்டது. ஒவ்வொருதேர்தல்காலத்திலும் நீங்கள் அடிக்கின்ற […]
ராஜபக்சவின் பாதுகாப்பை அதிகரிக்க தினேஷ் குணவர்தன கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டார். நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் நடவடிக்கைகளில் மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவுள்ளதாகவும் அதன்போது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சுட்டிக் காட்டியே தினேஷ் குணவர்தன இந்தக் கோரிக்கையை விடுத்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய பிரதமர், 154 பாதுகாப்பு அதிகாரிகள் ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருப்பதாகவும் உயிராபத்து குறித்த […]
கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை!
முல்லைத்தீவு பெருங்கடலுக்கு நள்ளிரவில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இதுவரையில் கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என இனி எவரும் தங்களை தாங்களே கூறிக்கொள்ள கூடாது
“காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினைக்காக எந்த அரசியல்வாதிகளும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களாகிய நாம் வருகின்ற உள்ளூராட்சி தேர்தலை பகிஸ்கரிக்கப் போகின்றோம்” என காணாமல் ஆக்கப்பட்வா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.





