இஸ்ரேல் நாட்டின் தலைநகர் ஜெருசலேம் என்று அங்கீகரித்து, அதற்கான அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் வாஷிங்டனில் வெளியிட்டார்.
Other News
120 முஸ்லி।ம் குடும்பங்களுக்கு முல்லைத்தீவில் புதிய வீடுகள்!
முல்லைத்தீவைச் சேர்ந்த 120 முஸ்லிம் குடும்பங்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு அடிக்கல் நடப்பட்டது. இந்த நிகழ்வு நேற்றுக்காலை முல்லைத்தீவு கிச்சிராபுரத்தில் இடம்பெற்றது. இந்தத் திட்டத்தில் ஓரிரண்டு தமிழ்க் குடும்பங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன என அறிய முடிகின்றது. வீட்டுத் திட்டத்துக்கான நிதியை ஐக்கிய அரபு ராச்சியத்தின் தனவந்தர் ஒருவர் வழங்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. உள்நாட்டுப் போர் காரணமாக கிச்சிராபுரத்தில் இருந்து இடம்பெயர்ந்து 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீள்குடியமர்ந்த 120 குடும்பங்களுக்கே இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன. […]
கசிப்பு வியாபாரி உள்ளிட்ட நால்வர் வசமாகச் சிக்கினர்!
தர்மபுரம் பகுதியில், பொலிஸார் மேற்கொள்ளும் சுற்றிவளைப்புக்களில் பொலிஸாருக்கு டிமிக்கி விட்டுத் தப்பித்துச் செல்லும் கசிப்பு வியாபாரி உள்ளிட்ட நால்வர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர் என தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுமேத விமலகுணரத்தின தெரிவித்தார். சட்ட விரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸார் அந்தப் பகுதியில் இனங்காணப்பட்ட இடங்களை சுற்றி வளைத்துத் தேடுதல்களை நடத்திவருகின்றனர். நேற்றுமுன்தினமும் இவ்வாறு தேடுதல் இடம்பெற்றது. தேடுதலில் கஞ்சா வைத்திருந்தனர் என்ற குற்றச் சாட்டில் […]
மாவீர் துயிலும் இல்லத்தில் நடப்பட்ட பெயர்ப் பலகை பிடுங்கி எறியப்பட்டது
கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த தாவரவியல் பூங்கா என்ற பெயர்ப்பலகை இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கரைச்சிப் பிரதேச சபையினால் கடந்த திங்கட்கிழமை இந்தப் பெயர்ப் பலகை போடப்பட்டது. இந்த நிலையில், அன்றையதினம் இரவே சேதமாக்கப்பட்டு, பிடுங்கி எறியப்பட்டது. அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட த்தில், எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக தாவரவியல் பூங்கா எனும் பெயர்ப் பலகை குறித்த சபையால் நடப்பட்டது. குறித்த மாவீரர் துயிலுமில்லத்தில் […]
வடக்கு மருத்துவமனைகளுக்கு 110 தாதிய உத்தியோகத்தர்கள்!
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கு புதிதாக 110 தாதிய உத்தியோகத்தர்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு 50 தாதிய உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் வடக்கில் ஏற்கனவே கடமையாற்றுபவர்களில் 85பேர் வருடாந்த இடமாற்றம் பெற்று கொழும்பு உள்ளிட்ட மாகாணங்களுக்குச் செல்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்ததாவது:வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் தாதிய […]
ஆர் கே நகர் தேர்தல் கருத்து கணிப்பு
[poll id=”5″]
இன்றைய ராசிபலன் 08.12.2017
மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய […]
திண்டுக்கல்லில் கார் கவிழ்ந்து விபத்து
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்த திருமணவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி காலை காரில் சென்றார். காரை அவருடைய டிரைவர் மேத்யூ என்பவர் ஓட்டினார். அவருடன் சேலத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவரும் சென்று உள்ளார். இவர்கள் சென்ற கார், திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில் கலெக்டர் அலுவலகத்தை அடுத்துள்ள அஞ்சலி ரவுண்டானா மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் இடதுபக்க தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்தது. இதில் […]
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்’ டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அது குறித்த அறிவிப்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நள்ளிரவில் வெளியிட்டார். மேலும் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமுக்கு அமெரிக்க தூதரகத்தை உடனடியாக மாற்றவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். சர்வதேச அளவில் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கிற முதல் உலக நாடாக அமெரிக்கா திகழ்கிறது. முன்னதாக இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, பாலஸ்தீன நிர்வாக தலைவர் மகமது […]
தொப்பி சின்னம் யாருக்கு கிடைத்துள்ளது தெரியுமா?
சென்னை ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன், தொப்பி சின்னத்தை பெற சுப்ரீம் கோர்ட் வரை சென்றும் அவரால் இந்த விஷயத்தில் வெற்றி பெற முடியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், அந்த சின்னம் மக்கள் மனதில் பதிய பணத்தை தண்ணீராக செலவு செய்ததாக கூறப்பட்டது. எனவே மீண்டும் அதே சின்னத்தை பெற்றால் வெற்றி பெறுவது எளிது என்பதால் அந்த […]





