Other News

எண்ணெய் கசிவு தொல். திருமாவளவன்

திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி பரிசு

சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டப்படுவதை ஏற்றுக்கொண்டால் அனைத்து இந்து கோவில்களையும் இடித்துவிட்டு பெளத்த விகார்களாக மாற்ற வேண்டும் என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறினார். திருமாவளவனின் இந்த கருத்துக்கு இந்து அமைப்புகளும், பாஜக தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் திருமாவளவன் தலையை […]

தாயின் தலையைத் துண்டித்த 13 வயது தனயன்

சந்தேகத்தின் பேரில் பதின்மூன்று வயது சிறுவனை பொலிஸார் கைது செய்தனர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வெங்ஸிங் நகரிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தை மேற்படி சிறுவன் ஒளிப்பதிவு செய்து அதை சீனாவின் பிரபல சமூக வலைதளம் ஒன்றின் ஊடாக தனது நண்பர்களுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு அனுப்பப்பட்ட காணொளியை, மேற்படி சிறுவனின் நண்பன் ஒருவன் தனது தாயிடம் காட்டியதையடுத்தே சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். கடந்த ஞாயிறன்று தாயுடன் […]

சட்டவிரோதமாக கள் விற்ற ஒன்பது பேருக்குத் தண்டம்

சட்டவிரோதமான முறையில் கள் விற்பனை செய்த மற்றும் அளவுக்கதிகமாக கள் வைத்திருந்த ஒன்பது பேருக்கு நேற்றுத் தண்டம் விதிக்கப்பட்டது. மதுவரித் திணைக்களத்தால் பருத்தித்துறை நீதிமன்றில் தொடுக்கப்பட்ட குறித்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்போதே நீதிவான் நளினி சுபாகரனால் 13 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் கள் விற்பனை செய்த மூவருக்கு தலா 2 ஆயிரம் ரூபாவும், ஒருவருக்கு ஆயிரம் ரூபாவும் விதிக்கப்பட்டது. அளவுக்கதிகமாக கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் […]

மகிந்­த­வைப் பாது­காப்­ப­தில் ஐ.தே.கவுக்கு லாபம் உண்டு!

மகிந்­த­வைப் பாது­காப்­ப­தில் எமக்கு இலா­பம் உள்­ளது. அவ­ரது பாது­காப்­புக்கு எந்­தக் குந்­த­கம் ஏற்­ப­ட­வும் நாம் அனு­ம­தி­ய­ளிக்­க­ மாட்­டோம். இவ்­வாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில், கூட்டு எதி­ர­ணி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஸ் குண­வர்த்­த­ன­ வின் கோரிக்­கை­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே ரணில் இவ்­வாறு தெரி­வித்­தார். ‘‘உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் பரப்­பு­ரை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வி­ருக்­கும் சூழ்­நி­லை­யில் பெருந்­தொ­கை­யான மக்­கள் கலந்­து­கொள்­ளும் பரப்­பு­ரைக் கூட்­டங்­க­ளில் மகிந்த ராஜ­பக்ச பங்­கெ­டுப்­பார். அவ­ரு­டைய பாது­காப்­புக்கு […]

புலிக்கொடி அரசியல்!

புலிக் கொடி­யைத் தூக்­கிக் கொண்டு சிங்­கள, முஸ்­லிம் மக்­க­ளி­ட­மி­ருந்து நல்­லி­ணக்­கத்தை எதிர்­பார்க்க முடி­யாது என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் ஜே.வி.பி. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பிமல் ரத்­நா­யக்க. தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னின் பிறந்த நாளை வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் கொண்­டா­டி­ய­தை­யும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் வெளி­யி­டும் அறிக்­கை­க­ளை­யும் கோடி­காட்­டியே அவர் இந்­தக் கருத்­தைத் தெரி­வித்­துள்­ளார். நாடா­ளு­மன்­றத்­தில் ஆற்­றிய உரை­யின்­போது அவர் இத­னைக் குறிப்­பிட்­டார். தமி­ழர்­க­ளி­ட­மாக இருந்­தால் […]

இணக்கப் பேச்சு திடீரென தள்ளிப்போனது!

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் ஆச­னப் பங்­கீட்­டால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னுள் உரு­வா­கி­யுள்ள முரண்­பாட்­டுக்­குத் தீர்வு காண்­ப­தற்கு, எதிர்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் கொழும்­பில் நேற்று நடை­பெற இருந்த கூட்­டம் திடீ­ரெ­னக் கைவி­டப்­பட்­டது. இன்று காலை­யில் அந்­தச் சந்­திப்பு சில­வே­ளை­க­ளில் இடம்­பெ­ற­லாம் என்று தெரி­விக்­கப்­ப­ட்டது. உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­த­லில் ஆச­னப் பங்­கீடு தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளி­டையே முரண்­பாடு ஏற்­பட்­டி­ருந்­தது. இந்த முரண்­பாடு கார­ண­மாக, ரெலோ அமைப்பு தனித்­துப் போட்­டி­யி­டப்­போ­வ­தாக அறி­வித்­தி­ருந்­தது. இதன் […]

கூலித் தொழிலாளியை உயிரோடு எரித்த கொடூரன்

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தை சேர்ந்த முகமது அப்ரசுல் என்பவர் ராஜஸ்தானின், ராஜ்சமந்த் பகுதியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரை அப்பகுதியை சேர்ந்தவர் கொடூரமான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். படுகாயமடைந்த அவர் உயிருக்காக போராடி கொண்டிருக்க அவர் மீது ஆயிலை ஊற்றி உயிருடன் எரித்துள்ளார். இந்த சம்பவத்தின்போது, சம்புலால் நண்பர் கொலை சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளார். கொலை குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிவருகிறது. […]

8-வது நாளாக மீனவர்களை தேடுகிறார்கள்

தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், கடந்த 30-ந்தேதி தாக்கிய ‘ஒகி’ புயலில் சிக்கி மாயமானார்கள். இதில் ஏராளமானோர் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர் களை தேடும் பணியில் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மாயமான மீனவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி இன்று (சனிக்கிழமை) 8-வது […]

அத்துமீறி தாக்குதல் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

நடப்பு ஆண்டில் மட்டும் இந்தியா 1300 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா நடத்திய அத்துமீறிய தாக்குதலில் 52 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டதாகவும் 175 பேர் உயிரிழந்ததாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது. இஸ்லமபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறுகையில், “ காஷ்மீர் மக்களின் மீது இந்திய அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது. இந்த விவகாரத்தை உலக நாடுகள் கவனத்தில் […]

தம்பிப்பிள்ளை சிவராசா

காரைநகர், பலகாட்டைப் பிறப்பிடமாகவும் 76/4, கலட்டிப்பிள்ளையார் கோவிலடி யை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சிவராசா நேற்று (07.12.2017) வியாழக் கிழமை இறைபதம் எய்தினார். அன்னார் காலஞ்சென்ற கதிரவேலு தம்பிப்பிள்ளை – சிவபாக்கியம் தம்பதியரின் புதல்வனும் காலஞ்சென்ற அழகரத்தினம் – தெய்வானைப் பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும் சிவசோதியின் அன்புக் கணவரும் சிவநிதி (கனடா), சிவரூபன் (ஆஸ்தி ரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும் தயாபரனின் (கனடா) மாமனும் விஜயலட்சுமி கதிரவேலு, புனிதகுமாரி […]