ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க வலியுறுத்தி சென்னையில் போஸ்டர் ஓட்டிய புரட்சிகர மாணவர் முன்னணியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓகி புயலில் சிக்கிய மீனவர்கள் இன்னும் கரை திரும்பாத நிலையில் மீனவர்களை மீட்டுத்தரக்கோரி அவர்களது உறவினர்கள் மூன்று நாட்களாக தொடர்ந்து குழித்துறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் ஆங்காங்கே பரவலாக மீனவர்களை மீடகக் கோரி, மீட்பு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து […]
Other News
பெற்றோருக்கு முழு அறிவு வேண்டும்!
மாணவர்கள் காப்பீட்டுத்திட்டம் தொடர்பாக பெற்றோர்களும் பூரணமாக அறிந்து வைத்திருக்கவேண்டும். காப்புறுதி பெறுவதில் கடப்பாடுகள் இருக்கின்றன. எனவே பெற்றோர் அதைப்பற்றிய விளக்கத்துடன் இருந்தாலே உரிய நன்மையை இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாம். வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இலவச காப்பீட்டுத்திட்டத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வலய கல்விப்பிரதிநிதியும் தமிழ்பாட ஆசிரிய ஆலோசகருமான நிறைமதி தெரிவித்தார். அவர் மேலும் தனது உரையில் தெரிவித்ததாவது: மாணவ சமூகத்தை முன்னேற்று வதன் […]
இன்றைய ராசிபலன் 10.12.2017
மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். புதியவரின் நட்பால் ஆதாய மடைவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வரக் கூடும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்த ரவு குறையும். உழைப்பால் உயரும் நாள். […]
வீதியை சீரமைக்கக் கோரிக்கை
தாளையடியில் இருந்து கட்டைக்காடு செல்லும் முதன்மை வீதியை சீரமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சிப் பகுதியில் உள்ள கட்டைக்காடு கிராமத்தையும் தாளையடிக் கிராமத்தையும் இணைக்கம் முதன்மை வீதி மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த கட்டைக்காட்டினைச் சேர்ந்த விமலதாஸ் தெரிவித்ததாவது; ‘நான் 12 வயதில் இருக்கும்போது இந்த வீதியில் பள்ளிக்கு நடந்துசென்றேன். அப்போதிலிருந்து இன்றுவரை, சுமார் […]
ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன்
பருத்தியடைப்பு, ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும் செழியன் வீதி, ஓட்டு மடத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன் நேற்று (08.12.2017) வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் நாகரெத்தினத்தின் (அம்பாள்) அன்புக்கணவரும் ஆசைப்பிள்ளை அன்ன பூரணம் தம்பதியரின் கனிஸ்டபுத்திரனும் காலஞ்சென்ற வர்களான அருணகிரிநாதன், அருந்ததியம்மா மற்றும் பழனிநாதன், அமிர்தசெல்வநாயகி ஆகியோரின் சகோ தரரும் ஆனந்தரூபி, ஆனந்தகௌரி, செல்வானந்தன், லோகானந்தி ஆகி யோரின் அன்புத்தந்தையும் பாலச்சந்திரன், நவநீதராஜா, ஜீவரஞ்சினி, கிரிகரன் ஆகி யோரின் மாமனாரும் மயூரன், […]
ஆர்.கே.நகரில் தினகரனுக்கு பெருகும் ஆதரவு
ஆர்.கே.நகரில் பிரச்சாரத்திற்கு செல்லும் டிடிவி தினகரனுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அதே தொகுதியில் தினகரன் போட்டியிட்டார். சூறாவளி பிரச்சாரமும் செய்தார். ஆனால் பணப்பட்டுவாடா தொடர்பான புகார் எழுந்ததால் தேர்தல் நிறுத்தப்பட்டது. தற்போது அதே தொகுதியில் தினகரன் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுகவின் சின்னமான இரட்டை இலை கைவிட்டுப் போனது. மேலும், தொப்பி, விசில், கிரிக்கெட் மட்டை என அவர் கேட்ட எந்த சின்னமும் […]
வடக்கில் தனியரசு
புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வடக்குக்கு முதலீடுகள் அவசியம் எனில், வடக்கை தனி அரசாகப் பிரித்துத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். ‘வெளிநாடுகளில் புலம்பெயர் சமூகத்தினர் செல் வச் செழிப்போடு வாழ்கின்றனர். ஆடம்பர விடுதிகள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த விடயங்களுக்காக அவர்கள் வடக்கில் […]
கழிப்பறை வசதி கொண்ட பிரதேசம் ஆறு ஆண்டுகளாகப் பூட்டிய நிலையில்!
கிளிநொச்சியில் 2010ஆம் ஆண்டில் கரைச்சிப் பிரதேச சபையினால் சந்தை அமைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட 5 கழிப்பறை வசதிகள் கொண்ட பிரதேசம் 6 ஆண்டுகளாகப் பூட்டிய நிலையில் காணப்படுகின்றது எனவும் இதனால் கழிப்பறைகளும் பாழடைகின்றன எனவும் சுட்டிக்காட்டப்படு கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் போருக்குப் பின்னர் மீளக்குடியமர்ந்த காலத்தில் மக்கள் போக்குவரத்து இடையூறு காரணமாக வாழ்விடங்களுக்கு அண்மையில் தமக்கான அங்காடிகளை அமைக்க முற்பட்டவேளையில் கரைச்சிப் பிரதேச எல்லைப் பரப்புக்குள் ஏ- 9 வீதியின் […]
இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த நபர் கைது
வவுனியா – நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை நெளுக்குளம் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி, காத்தான் கோட்டம், தாஸ்கோட்டம், ஊர்மிளா கோட்டம், கூமாங்குளம் போன்ற பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெளுக்குளம் பொலிஸ் பொருப்பதிகாரி ஏ. எம். எஸ். அத்தநாயக்க அவர்களின் தலமையிலான பொலிஸ் குழு குறித்த நபரை […]
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் விமானப்படை வீரர் படுகாயம்
வவுனியாவில் இன்று மாலை கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் வன்னி விமானப்படைத்தளத்தில் பணியாற்றும் விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று மாலை 4 மணியளவில் வன்னி விமானப்படை தளத்திற்கு அருகில் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த விமானப்படை வீரரை நுவரெலியாவிலிருந்து வந்த மோட்டார் கார் மேதியதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த வன்னி விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]





