நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற மைத்திரி ஆட்சியிலும் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் சென்று மாவீரர்களான தமது உறவுகளை நினைவுகூருவதற்கு இராணுவத் தடைகளும், அச்சுறுத்தல்களுமே தொடர்ந்தும் காணப்படுவதாக மாவீரர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட தமது உறவுகளான மாவீரர்களுக்கு நவம்பர் 27 மாவீரர் நாள் நினைவு கூறவுள்ளதால் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை மேற்கொள்வதற்காக இன்றைய தினம்(06) சென்றுள்ளனர். எனினும், மாவீரர்களின் உறவினர்களை இராணுவத்தினர் மாவீரர் […]
முக்கிய செய்திகள்
Head News
நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கண்ணீருடன் விடை பெற்றார் இராசநாயகம்
கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபரும் மகாதேவா சைவ சிறார் (குருகுலம்) இல்லத்தின் தலைவருமான அமரர் திருநாவுகரசு இராசநாயகத்தின் இறுதி நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது நூற்றுக்கணக்கான குழந்தைகள் கதறி அழ கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதன்போது அஞ்சலி உரைகள் இடம்பெற்றன. அதனையடுத்து. பூநகரி மட்டுவில்நாடு பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.. அதிகாரிகள் அரசியல் தரப்புக்கள் பொது மக்கள் […]
இன்றைய ராசிபலன் I 06.11.17
மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். ஆடை, ஆபரணம் சேரும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திட்டங்கள் நிறைவேறும் நாள். Loading… ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப் போகும். நயமாகப் பேசுபவர்களை நம்பாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் […]
அரசை கேலி செய்யாதீர்கள், கள வீரர்களுக்கு சலாம்! நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் அரசின் சில பொறுப்பற்ற செயல்களை குறி வைத்து ட்விட்டரில் கருத்துக்களை அதிரடியாக வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் நிகழ்வுகள் மூலம் களத்திலும் நேரடியாக இறங்கிவிட்டார். அவரின் செயல்பாடுகள், அறிவிப்புகளுக்கு சில எதிர்ப்பும் தெரிவித்துவருகிறார்கள். தற்போது அவரின் மீது சில வழக்குகளும் பாய்ந்துள்ளது. நிலவேம்பு கசாயம் குறித்து சர்ச்சைக்கு முடிவுகள் கூறியுள்ளார்கள். இந்நிலையில் அவர் ட்விட்டரில் இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ […]
இலங்கையில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு! போக்குவரத்து ஸ்தபிக்கும் அபாயம்
இலங்கையில் தரமற்ற எரிபொருள் இறக்குமதி மூலம் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக நாடு பூராகவும் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்… இந்நிலையில் எதிர்வரும் சில நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன. அதற்கமைய உந்துருளி ஒன்றுக்கு 2 லீற்றர் பெற்றோலும், முச்சக்கர வண்டிக்கு 3 லீற்றர் பெற்றோலும், சிற்றூர்ந்துகளுக்கு 20 லீற்றர் பெற்றோலும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. […]
வெளிநாட்டில் 4 சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இலங்கையர்!
அவுஸ்திரேலியாவில் நான்கு சிறுமிகளை, இலங்கையர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியா கான்பரா நகரில் வசிக்கும் சுனில் பட்டகொட என்ற 62 வயதுடைய நபரே, 14 மற்றும் 15 வயதுடைய நான்கு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். தற்போது குறித்த நபரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். கான்பரா நகரில் வசிக்கும் 62 வயதுடைய சுனில் பட்டகொட என்ற […]
வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பல லட்சம் பணம் மோசடி! யாழில் சம்பவம்
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மருதங்கேணி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் பருத்தித்துறையில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் , மருதங்கேணியைச் சேர்ந்த ஒருவரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி 6 இலட்சம் ரூபாவை வாங்கியுள்ளார். எனினும் பணம் கொடுக்கப்பட்டு […]
இரணைமடுக்குளத்தின் 80 வீதமான அபிவிருத்தி பணிகள் நிறைவு
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் அபிவிருத்தி பணியின் 80 வீதமான பணிகள் நிறைவுற்ற நிலையில் இரண்டு வருடங்களின் பின் இவ்வருடம் வழமையைவிட இரண்டு அடி நீர் மேலதிகமாக சேமிக்கக் கூடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரணைமடுக்குளத்தில் வழமையாக 34 அடி நீர் சேமிக்கப்படும் ஆனால் இவ்வருடம் போதிய மழைவீழ்ச்சி கிடைக்கும் போது 36 அடி வரை நீரை சேமிக்க முடியும் என நீர்ப்பாசனத் […]
பயங்கரவாதத்தை விட பாதாள உலகக்கும்பல் ஆபத்தானது : மஹிந்த
பயங்கரவாதத்தை விட ஆபத்தான பாதாள உலகக்கும்பல்களின் செயற்பாடுகள் நல்லாட்சியில் அதிகரித்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலையில் நேற்றைய தினம் நடைபெற்ற பொதுமக்கள் ஒன்றுகூடல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் பாதாள உலகக்கும்பல்களின் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, பயங்கரவாத குழுக்களை விட பாதாள உலகக்கும்பல்கள் ஆபத்தானவை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
வித்தியா படுகொலை: மேலும் சிலர் கைது?
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ்குமார் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், குற்றப் புலனாய்வு திணைக்கள சிறப்பு குழு ஒன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் […]





