உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் 300–க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், தையல் எந்திரங்கள், ஆடைகள் என நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை வீழ்த்த வேண்டும். இந்த […]
முக்கிய செய்திகள்
Head News
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்று முடிகிறது
ஆர்.கே.நகர் சட்ட சபை தொகுதியின் உறுப்பினராக இருந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கையை தேர்தல் கமிஷன் கடந்த மாதம் 27-ந்தேதி வெளியிட்டது. அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் 4 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதையடுத்து ஒவ்வொரு நாளும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். இதுவரை 5 நாட்கள் வேட்புமனு தாக்கல் […]
இந்துத்துவாவை எதிர்க்க திமுகவை ஆதரிப்பதா?
வைகோ இந்துத்துவாவை எதிர்ப்பதாக இருந்தால் முதலில் எதிர்க்க வேண்டியது ராகுல் காந்தியையும், திமுகவையும்தான் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தமிழக மக்கள் நலன் கருதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக வைகோ அறிவித்தார். திராவிட இயக்கத்தை சிதைத்து இந்துத்துவாவை திணிக்க முயற்சிக்கும் பாஜகவை வீழ்த்த திராவிட இயக்கமான திமுகவை ஆதரிப்பதாக வைகோ கூறினார். இதற்கு பதி[ல் அளித்துள்ள தமிழக […]
மண்சரிவு அபாய எச்சரிக்கை 24 மணித்தியாலங்களுக்கு நீடிப்பு.!
மண்சரிவு அபாய எச்சரிக்கை மீண்டும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை தொடர்ந்தும் நீடிக்க, தேசிய கட்டட ஆய்வு மையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று காலை 9.30 முதல் நாளை காலை 9.30 வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன்பிரகாரம், இரத்தினபுரி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, பதுளை ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு இடர் […]
மஹிந்தவிற்கு உயிர் அச்சுறுத்தல்
உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பொது எதிரணியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு மேலதிகமாக படையினரை தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்காக பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நாட்டின் சகல பகுதிகளிலும் மக்கள் சந்திப்புகளை முன்னெடுத்து வருகின்றார். இந்நிலையில் தமது அணியிரனுக்கும் தனக்கும் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் ஆகவே தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை மேலும் […]
செம கடுப்பில் நடிகை ஓவியா…!!
ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வேறு லெவலுக்கு சென்றுவிட்டார். இதை தொடர்ந்து இவருக்கு பல படங்கள் குவிந்தது. இதில் இவர் லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-3யை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார், இந்நிலையில் இந்த படத்திலிருந்து ஓவியா விலகியதாக நேற்று ஒரு செய்தி உலா வந்தது. இதை படக்குழு தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது, மேலும் ஓவியா படத்திற்கு முழு ஒத்துழைப்பு தருகின்றார், அதோடு யார் இப்படியெல்லாம் கிளப்பி விடுகின்றனர் என […]
இன்றைய ராசிபலன் 04.12.2017
மேஷம்: குடும்பத்தில் கல கலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமை கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம்: இரவு 7.19 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். அடுத்தவர்களை […]
சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த காலநிலையால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பண்டாரவளை, ஹிக்கடுவ, அம்பலாங்கொட, கொஸ்கொட, கம்புறுப்பிட்டிய, மீற்ரியாகொட மற்றும் மடுள்சீம ஆகிய பிரதேசங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக […]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது.!
இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வந்த நபர் ஒருவர் நேற்று நண்பகல் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். 35 வயதான குறித்த சந்தேகநபர் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. ஏசியா எயார்லைன்சுக்கு சொந்தமான எ.கெ 043 என்ற விமானத்தில் மலேசியா கோலாலம்பூரியில் இருந்து வருகை தந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரின் பயணப் பொதியில் இருந்து 355 கிராம் […]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு மதிமுக ஆதரவு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் மருதுகணேஷுக்கு ஏற்கனவே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆகியவை ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தற்போது மதிமுகவும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. இன்று சென்னையில் மதிமுகவின் தலைமை அலுவலகமான ‘தாயகம்’ அலுவலகத்தில் மதிமுகவின் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக வைகோ […]





