இலங்கை செய்திகள்

ரணிலுக்கு அழுத்தம் கொடுக்கும் கூட்டமைப்பு!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புலம்பெயர்ந்துள்ள விடுதலைப் புலிகள் மற்றும் சர்வதேச ஏகாதிபத்திய நாடுகளுடனும் அமைப்புகளுடனும் இணைந்து செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர்ந்த விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்படுகிறது. அத்துடன் சர்வதேச ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது. நாட்டை பிரித்து சமஷ்டி […]

தேர்தலில் வெற்றி பெற புது முயற்சியில் ஈடுபட்ட சுதந்திர கட்சி

பெரும் கூட்­ட­ணியை அமைத்­துத் தேர்­தலை எதிர்­கொள்­ளத் தயா­ராகி வரு­கின்­றோம். அதற்­கா­கத் தமிழ், முஸ்­லிம் கட்­சி­க­ளை­யும் அழைத்­துள்­ளோம். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் எதிர்ப்­புக் குழுக்­க­ளை­யும் இணைக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ளோம்.இவ்­வாறு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் செய­லர் றோகண லக்ஸ்­மன் பிய­தாச தெரி­வித்­தார். எதிர்­வ­ரும் தேர்­தல்­கள் தொடர்­பாக சுதந்­தி­ரக் கட்சி எடுத்­து­வ­ரும் நட­வ­டிக்­கை­கள் தொடர்­பாக விளக்­க­ம­ளிக்­கும் ­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது இந்த ஆண்­டின் ஆரம்­பத்­தில் மாகாண சபைத் தேர்­தல் […]

சற்று முன் வெளியான அறிவிப்பால் பேரதிர்ச்சியில் சம்பந்தன்

எதிர்க்கட்சித் தலைவராக குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷவே தொடர்வார் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை அவர் சற்றுமுன்னர் கட்சித் தலைவர்களுக்கு அவர் விடுத்துள்ளார். அத்துடன் எதிர்க் கட்சியின் பிரதான அமைப்பாளராக மஹிந்த அமரவீர செயற்படுவார் என்றும் அவர் அறிவித்துள்ளார். கடந்த ஆட்சிக் குழப்பத்தின் பின்னர் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களால் எதிர்க்கட்சித் தலைவர் யாருக்கு என்ற இழுபறி நிலை தொடர்ந்துவந்தது. நாடாளுமன்ற அங்கீகாரமற்ற கட்சியொன்றின் உறுப்புரிமை கொண்ட […]

Maithripala Sirisena

மைத்திரி தன்னை அழித்து விட்டதாக ஒருவர் ஒப்பாரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை அழித்து விட்டார் என கடுவலை நகர சபையின் முன்னாள் மேயர் ஜீ.எச். புத்ததாஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பொது வேட்பாளராக களமிறங்கியப் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை அழைத்ததாகவும் அதற்கமைய தான் அவருக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். […]

Gotabaya Rajapaksa

கோத்தபாய உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ​டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு […]

தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் சுமந்திரன்

புதிய அரசியலமைப்பின் சட்டமூலம் எதிர்வரும் பெப்ரவரியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுவதாக தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை. தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையையே சுமந்திரன் மேற்கொண்டுவருகின்றார். இவரின் நடவடிக்கைகள் பிரபாகரன் மேற்கொண்டுவந்த பிரசாரங்களையும் விட ஆபத்தானது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுதந்திர ஊடக கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்லேயே இவ்வாறு […]

மைத்திரிபால சிறிசேன

மைத்திரிக்கு மனநல கோளாறு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு என பெண் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்யக்கோரி இடைபுகு மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர சார்பில் அவரது சட்டத்தரணிகளால் இந்த இடைபுகு மனு தாக்கல் செய்யப்பட்டது. சிவில் செயற்பாட்டாளரான தக்சிலா ஜயவர்தனவின் ஆலோசனையின் பேரில், சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தனவால் இந்த […]

ரணில் விக்கிரமசிங்க

ரணில் தலைமையில் கடுமையான தீர்மானம்

சிறிலங்கா அரசாங்கம் சார்ந்த விளம்பரங்கள் தொடர்பில் இறுக்கமான ஒரு நடைமுறையைப் பின்பற்றுவதற்கான யோசனையொன்றுக்கு நேற்றைய தினம் முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையிலுள்ள தனியார் தொலைக்காட்சிகளுக்கு அரச விளம்பரங்களை வழங்குவதை குறைக்க திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் இதனை ஒரு யோசனையாக இன்று நடைபெறவுள்ள வருடத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. […]

துப்பாக்கிச் சூடு – கொலைகளை கட்டுப்படுத்த நாமலின் அறிவுரை

நாட்டில் அதிகரித்துவரும் துப்பாக்கிக் கலாசாரத்தை அடக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த மூன்றரை வருடங்களில் ஏறத்தாழ தினசரி துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், கொலைகள் இடம்பெற்று வருவது குறித்து தகவல்கள் செய்திகள் மூலம் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இந்நிலையில், மஹிந்த அரசில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த பாதாள உலக கும்பலும் தற்போது தலைவிரித்தாடுவதாக கூறப்படுகிறது. எனினும், பாதாள உலகத்தினரை தூண்டி விடுவது மஹிந்த அணியென ஐக்கிய […]

Maithripala Sirisena

2019 ஆம் ஆண்டில் அடங்கினார் மைத்திரி

2019 ஆம் ஆண்டிற்கான முதல் அமைச்சரவை முன்மொழிவுகள் அனைத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஆரம்பமானது. அதன் படி அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளும் இன்று ஜனாதிபதியால் ஒப்புதல் வழங்கப்பட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். மேலும் அவற்றில் பெரும்பாலான திட்டங்களை நிதி அமைச்சகத்துடன் தொடர்புபடுத்தியதாக இருந்தது என்றும் […]