போரினால் ஊனமுற்ற இராணுவத்தினருக்காக இந்த அரசாங்கம் எந்தவொரு செயற்திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்று மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “அரசாங்கம் இராணுவத்துக்கு எவ்வாறான மரியாதைக் வழங்குகிறது என்பது எமக்கு நன்றாகத் தெரியும். 30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் […]
இலங்கை செய்திகள்
இதுவரை அனுபவிக்காத ஒரு தருணத்தில் ஈழத்து பெண் சின்மயி!
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் பங்குபெறும் ஒவ்வொரு பாடகரும் மக்களிடம் நல்ல அங்கீகாரத்தை பெறுகின்றனர். அதோடு தங்கள் திறமையால் சினிமாவிலும் ஜொலிக்க ஆரம்பிக்கிறார்கள். சிறுவர்களுக்கான போட்டி இப்போது நடந்து வருகிறது இதில் பங்குபெற்ற இலங்கை பெண் சின்மயி இப்போது மகிழ்ச்சியில் உச்சத்தில் உள்ளார். ஏனெனில் இதுவரை தான் தனது தாய் நாட்டிற்கு சென்றதில்லை என்று கூறி மன வருத்தம் அடைந்தார். இந்த […]
தமிழ் மக்களுக்கும் இறைமை உண்டு! சம்பந்தன் தெரிவிப்பு
தமிழ் மக்களுக்கும் இறைமைய உண்டு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த இறுதிநாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் புதிய அரசியலமைப்பின் உருவாக்கப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. எனினும் தற்போது அந்த பணிகள் கைவிடப்பட்டுள்ளன. ஏன் அந்த பணிகள் […]
மஹிந்த அணியின் எச்சரிக்கை
நாட்டை நேசிப்பவர்கள் வரவு செலவுத்திட்டத்தினை எதிர்க்க வேண்டும் என மஹிந்த அணி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான இறுதி நாள் விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த இறுதிநாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினர் இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் […]
த.தே.கூட்டமைப்பு இன்று மாலை தீர்மானம்
பாதீட்டுக்கான வாக்களிப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று மாலை நான்கு மணியளவில் கலந்துரையாடவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதேவேளை, பாதீட்டுடின் இறுதி வாக்களிப்பின் போது அதில் கலந்து கொள்ளாமல் இருப்பற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று பிற்பல் நாடாளுமன்ற வளாகத்தில் […]
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய தீர்மானம்
வரவு- செலவு திட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர் குறித்த வரவு – செலவுதிட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மாத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த அணியால் சபையில் சலசலப்பு
மாகாண சபை தேர்தலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் நடத்துவதற்கான பிரேரணை இதுவரை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படாமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இன்று நாடாளுமன்றத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து வரவு செலவுத்திட்டம் மீதான […]
சிறிலங்கா இன்னும் அதிகம் செய்ய வேண்டும் – நோர்வே அமைச்சர்
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஏற்றுக் கொள்ளுகின்ற அதேவேளை, இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது என்று நோர்வேயின், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்ட அவர், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். “சிறிலங்காவின் நல்லிணக்க செயல்முறைகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக, நோர்வே மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. நாங்கள் […]
மகிந்த – மைத்திரி தலைமையில் அவசர கலந்துரையாடல்
வரவு செலவுத்திட்டம் குறித்த இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று மாலை 4 மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தக் கலந்துரையாடலில், எதிர்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது, […]
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு – இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04.04.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: நாணயம் வாங்கும்விலை விற்கும்விலை டொலர் (அவுஸ்திரேலியா) 121.7039 126.9493 டொலர் (கனடா) 128.5144 133.3428 சீனா (யுவான்) 25.4076 26.6326 யூரோ (யூரோவலயம்) 192.8029 199.7343 யென் (ஜப்பான்) 1.5392 1.5969 டொலர் (சிங்கப்பூர்) 126.9464 131.3531 ஸ்ரேலிங்பவுண் (ஐக்கியஇராச்சியம் ) 226.3746 233.8107 பிராங் (சுவிற்சர்லாந்து) 171.9774 178.1643 டொலர் (ஐக்கியஅமெரிக்கா) 172.6505 176.4949 […]





