இலங்கை செய்திகள்

ரணிலின் திருகுதாளங்களை போட்டுடைத்தார்: சுமந்திரன்

வரவு – செலவுத்திட்ட மதிப்பீடுகளில் போதியளவு உண்மைத்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் இல்லை, தரவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது மிகப்பெரும் குறைபாடாக இருக்கின்றது என்கிறார் எம்.ஏ.சுமந்திரன். இவ்விடயம் தொடர்பில் எமது குழு அறிக்கையைத் தயாரிப்பதற்குத் தேவையான தகவல்களைக் கோரியிருந்த போதிலும் நிதியமைச்சு அதற்கு ஒத்துழைக்கவில்லை. தகவல்களை வழங்குவதற்கு அவர்கள் தாமதித்தமையின் காரணமாகவே நாங்கள் அறிக்கை சமர்ப்பிப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன், எம்முடைய குழு […]

இலங்கை மக்களிற்கு அபாய அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை காணப்படும் எனவும் முதியோர் மற்றும் சிறுவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இதன்படி, மேல், தெற்கு மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் எனவும் நிலையம் குறிப்பிட்டுள்ளது. இப்பகுதிகளில் 32 இற்கும் 41 இற்கும் இடைப்பட்ட செல்சியஸ் வெப்பநிலை காணப்படும் எனவும் கூறியுள்ளது. இந்த வெப்பநிலைக்கு […]

ஜனாதிபதி

தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சை தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை இரத்துச் செய்யப்படுமாக இருந்தால் அதற்கு முன்னர் அது தொடர்பான மாற்று வேலைத்திட்டங்களை தயாரித்த பின்னரே அது நடக்குமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இவ்வாறு மாற்று வேலைத் திட்டத்தை தயாரிக்காது அந்த பரீட்சை இரத்துச் செய்யப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் இந்த வருடத்திலிருந்தோ அல்லது அடுத்த வருடத்திலிருந்தோ அதனை செய்யப் போவதில்லை. எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் […]

இலங்கையில் முச்சக்கரவண்டி இறக்குமதிக்கு தடை?

இலங்கைக்கு முச்சக்கரவண்டிகளை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக தீர்க்கமான தீர்மானம் ஒன்று எட்டப்பட வேண்டும் எனவும் நவீன் திசாநாயக கூறியுள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றுவரும் வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தற்போது இலங்கையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக முச்சக்கரவண்டிகள் உள்ளதாகவும், அதனால் மில்லியன் […]

போர்க்குற்றங்கள் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரத்தியேக விசாரணை

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக, புலம்பெயர் அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரத்தியேக (தனியார்) விசாரணையை நடத்தவுள்ளது. இந்த விசாரணைக்காக ஐக்கிய நாடுகள் சபை இலங்கை தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகள் அடங்கிய விபரங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் நேற்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துயருற்ற தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் சரியான முன்னேற்றம் காண ஐ.நா […]

தனிநபர் கொலைகள் தொடர்பில் கவலையில் டக்ளஸ்

நாட்டில் இடம்பெற்றிருந்த தனிநபர் கொலைகள் தொடர்பிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை தற்போது காணப்படுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றுவரும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் […]

தரம் 5 பரீட்­சைக்­குப் பதி­லாக 8ஆம் தரத்­தில் பரீட்சை!!

5 ஆம் ஆண்டு புல­மைப் பரி­சில் பரீட்­சைக்­குப் பதி­லாக 7 அல்­லது 8ஆம் ஆண்­டில் பரீட்சை ஒன்றை நடத்த எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அந்­தப் பெறு­பே­று­க­ளுக்­க­மை­வாக மாண­வர்­க­ளின் திற­மை­க­ளுக்­கேற்ப ஒவ்­வொரு பாட பிரி­வு­க­ளுக்­கும் மாண­வர்­களை நெறிப்­ப­டுத்­தும் வகை­யில் கல்­வி­யி­ய­லா­ளர்­க­ளின் வழி­காட்­ட­லில் அந்­தப் புதிய திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இவ்­வாறு அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தார்.கொட­கம சுபா­ரதி மகா மாத்ய வித்­தி­யா­ல­யத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற நிகழ்­வில் உரை­யாற்­றும்­போது அவர் இவ்­வாறு தெரி­வித்­தார் என்று அர­ச­த­லை­வர் […]

Ranil

கூட்டமைப்பை அவசரமாக சந்திக்கும் ரணில்!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திகள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது கூட்டமைப்பிடம் கோரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. வரவு செலவுத்திட்டத்தினை தோற்கடிக்கும் முயற்சியில் மஹிந்த அணியினர் திரைமறைவில் காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வரும் நிலையில், […]

ரணிலுடன் இணைய மாட்டோம்! சு.கவின் முக்கியஸ்தர்கள் பிடிவாதம்…

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. பதுளையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கம் ஒன்றை மீண்டும் அமைப்பதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டிணையாது என அவர் கூறியுள்ளார். எதிர்த்தரப்பிலிருந்து யாரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு […]

கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை அமுல்

கடவுச்சீட்டு விநியோகிப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், சாதாரண மற்றும் ஒருநாள் சேவை கடவுச்சீட்டு விநியோகிப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை காலமும், சாதாரண சேவை ஊடாக கடவுச்சீட்டு விநியோகிப்பு நடவடிக்கையின் போது, 3000 ரூபாய் அறவிடப்பட்டு வந்தநிலையில், அந்த கட்டணம் 3500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் சேவைக்காக இதுவரை காலமும் 10 ஆயிரம் ரூபா […]