இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் பரபரப்பு! தீவிரவாதிகள் பலர் கைது…

கடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு, நாட்டின் பலபகுதிகளிலும் பாதுகாப்பு படையினரால் பலத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந்நிலையில், மலையகத்தின் நுவரெலியா பகுதியில் பலத்த தேடுதல் நடவடிக்கையை சிறப்பு அதிரடிப் படையினர் ஆரம்பித்துள்ளனர். கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அச்சம் காரணமாக பலர் மலையகப் பகுதிகளில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து நேற்று இரவு முதல் […]

இலங்கையில் பர்தா போட்டு ரகசியமாக உலாவிய மர்மநபர்!

சற்று முன் வத்தளையில் பர்தா அணிந்து கொண்டு மர்மநபர் ஒருவர் வீதியில் சந்தேகித்திடமாக உலாவி வந்துள்ளார். பின் அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த மக்கள் அந்த மர்மநபரை அழைத்து அவரை விசாரித்துள்ளனர். ஆனால் அவர் முன்னும் பின்னும் முரணாக பதலளித்துள்ளார் எனவே மக்கள் அவரின் பர்தாவை விலக்கி பார்த்ததில் அதில் ஆண் உருவத்தை கண்டு மக்கள் அதிர்ச்சி ஆகியுள்ளனர். பின் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மெளன அஞ்சலியையடுத்து சபையில் சலசலப்பு

கொழும்பு மற்றும் புற பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து நாட்டில் நிலவும் அச்ச சூழல் குறித்து விவாதிப்பதற்காக விசேட பாராளுமன்ற அமர்வுக்காக சபை இன்று ஒரு மணியளவில் கூடியது. இந்த அமர்வின் போது சபாநாயகரின் ஆரம்ப உரையினையடுத்து, குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ஒரு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமிசங்க நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் உரையாற்ற ஆரம்பித்துள்ள நிலையில் […]

திட்டமிட்டு நடத்தியது ஐ.எஸ்! ஆதாரம் படங்கள் வெளியாகியுள்ளது!

இலங்கையில் நடந்த தாக்குதலை திட்டமிட்டு வழி நடத்தியது ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்று தெரிய வந்துள்ளது. நேற்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவு இணையம் ஒன்றில் மூன்று தற்கொலைப் படை பயங்கரவாதிகளின் படம் வெளியிடப்பட்டது. அந்த படங்களில் அபு உபைதா, அப்துல்பாரா, அப்துல் முக்தர் ஆகிய 3 ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்கள் ஐ.எஸ். கொடிகளை பிடித்தப்படி நிற்கிறார்கள். இவர்கள் மூவரும் கொழும்பில் தாக்குதல் நடத்திய தற்கொலை படையில் இடம் பெற்று […]

கொழும்பில் மீண்டும் வெடிகுண்டு எச்சரிக்கை!

இலங்கையில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று தீவிரவாதிகளின் சதிவேலையால் குண்டு வெடித்த சம்பவத்தில் 310 பேர்பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிகுண்டு பொருத்தப்பட்ட லொறி மற்றும் சிறிய ரக வேன் ஒன்று கொழும்பு நகரிற்குள் பிரவேசித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கண்ணீருக்கு மத்தியில் இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகள்

இலங்கையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகள் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கியுள்ளன. ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட இருந்தோரும் இலங்கைக்கு சுற்றுலா வந்தோரும் என சுமார் 321 பேர் வரை ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. இன்று தேசிய அளவில் துக்கம் அனுஷ்டிக்கப்படும் நிலையில், கொழும்பில் கட்டிடங்களில் வெள்ளைக்கொடிகள் பறக்க விடப்பட்டதோடு, காலை 8.30 முதல் […]

பல கோணங்களில் விசாரணைகள்!! இதுவரை 40 பேர் கைது

கடந்த ஞாயிற்றுக்கிழமை 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரான காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார். இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களுள் 26 பேர் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், 3 சந்தேகத்துக்குரியவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் பொறுப்பில் […]

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் வெடிப்பு சம்பவம்!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள தேவாலயமொன்றின் உள்ளே பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளையில் குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. எனினும் டைனமைட் என்ற வெடிபொருள்களாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. எனினும் உறுதியான தகவல் வெளியாக வில்லை. சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் பல பகுதிகளில் அடுத்து அடுத்து இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவத்தால் மக்கள் […]

நாளை மறுதினம் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானம்

தற்போதைய அவசர நிலையை கருத்திற் கொண்டு நாடாளுமன்றத்தை நாளை மறுதினம் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. சபாநாயகர் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து

பொலிஸ் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து பொலிஸ் மா அதிபரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.