இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்காவில் மனித உரிமை காப்பு

ஸ்ரீலங்காவில் மனித உரிமை காப்பு: அல் ஹுசைனுக்கு மங்கள விளக்கம்

ஸ்ரீலங்காவில் மனித உரிமை காப்பு: அல் ஹுசைனுக்கு மங்கள விளக்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைனை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டுள்ள ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமவீர, நேற்றைய தினம் மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஸ்ரீலங்காவில் மனித […]

சித்திரவதைக் குற்றங்களை இலங்கை - மங்கள சமரவீர

சித்திரவதைக் குற்றங்களை இலங்கை ஏற்றுக்கொள்கின்றது – மங்கள சமரவீர

சித்திரவதைக் குற்றங்களை இலங்கை ஏற்றுக்கொள்கின்றது – மங்கள சமரவீர இலங்கையில் இடம்பெற்றுவரும் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை மிகவும் அவதானத்துடன் கையாள்வதற்கு முயற்சிக்கின்றோம் என ஐ.நா. கூட்டத்தொடரில் உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அத்தோடு சித்திரவதைகளை சிறிதளவும் சகித்துக் கொள்வதில்லை என்ற கொள்கையை அரசு பின்பற்றுகின்றது என்றும் குறிப்பிட்டார். மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் திணைக்களம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட அமைப்புக்களுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்ட […]

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கண்காணி

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கண்காணிப்பில் திறைசேரியின் முறி விநியோகம்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கண்காணிப்பில் திறைசேரியின் முறி விநியோகம் திறைசேரி முறி விநியோகத்தின் போது கடந்த காலத்தில் பாரிய ஊழல் மோசடி இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், மத்திய வங்கியில் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள முறி விநியோகத்தை நேரடியாக கண்காணிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு மத்திய வங்கிக்கு சென்றுள்ளது. பிணை முறி மோசடி குறித்து கண்டறிவதற்காக அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவின் முன்னிலையிலேயே இன்றைய முறி விநியோகம் இடம்பெறவுள்ளது. இன்றைய தினம் திறைசேரியின் […]

வறிய மக்களின் நலனுக்கு அரசு முன்னுரிமை

வறிய மக்களின் நலனுக்கு அரசு முன்னுரிமை வழங்கியுள்ளது – ஜனாதிபதி

வறிய மக்களின் நலனுக்கு அரசு முன்னுரிமை வழங்கியுள்ளது – ஜனாதிபதி உலக பொருளாதார நெருக்கடியினால் நாடு பொருளாதார சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் வறிய மக்களின் நலனுக்கு அரசு முன்னுரிமை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற பேண்தகு நிதி தொடர்பான செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். சுமார் முப்பது சதவீதமான நாட்டு மக்கள் […]

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்த தடை

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்த தடை

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்த தடை பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதை தடை செய்யும் வகையில் கல்வி அமைச்சு சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைவாக வெளிநபர்களும் குழுக்களும் அனுமதியின்றி பாடசாலைகளுக்குள் பிரவேசிப்பதும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதும் முழுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக மாணவர்கள் மத்தியில் அடிப்படைவாத கருத்துக்களை முன்னெடுப்பதற்கு சில குழுக்களும் நபர்களும் முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மாணவர்களின் கல்விக்கும், ஒழுக்கத்தைப் […]

பெண்களுக்கு எதிரான வன்முறை - யாழ்.அரச அதிபர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்: யாழ்.அரச அதிபர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்: யாழ்.அரச அதிபர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென யாழ். அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று முதல், ஒருவார காலத்திற்கு மகளிர் தின வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்ற நடைபயணத்தில் கலந்துகொண்ட […]

தவறான செய்திகளை பிரசுரிக்கவேண்டாம் - சீ.வி.விக்னேஷ்வரன்

என்னைப்பற்றி தவறான செய்திகளை பிரசுரிக்கவேண்டாம் – சீ.வி.விக்னேஷ்வரன்

என்னைப்பற்றி தவறான செய்திகளை பிரசுரிக்கவேண்டாம் – சீ.வி.விக்னேஷ்வரன் வழக்கமான வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக கொழும்பில் தன்னுடைய வீட்டில் தங்கியிருப்பதாகவும், சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கடுமையான சுகயீனமடைந்துள்ளதாகவும் தவறான செய்திகளை பிரசுரிக்கவேண்டாம். எனவும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தமது ஊடக இணைப்பாளர் ஊடாக குரல் பதிவு ஒன்றையும் அனுப்பியுள்ளார். இரத்த குழாய்களில் உள்ள அடைப்புக்கள் தொடர்பாக வைத்தியர்கள் தன்னை பரிசோதிக்க உள்ளதாகவும், அதனை […]

ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம்

ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம்

ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டெரஸ் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெனீவாவில் ஐ.நா. செயலாளர் நாயகத்தை அமைச்சர் மங்கள சமரவீர நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடியபோது இதற்கான அழைப்பை விடுத்ததாகவும், ஐ.நா. செயலர் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. செயலாளர் நாயகமாக அந்தோனியோ குட்டெரஸ் பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதலாவது இலங்கை விஜயமாக இது […]

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை உரிய வகையில் செயற்படவில்லை: பிரித்தானியா

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை உரிய வகையில் செயற்படவில்லை: பிரித்தானியா பொறுப்புக்கூறல், மனித உரிமை, பாதுகாப்பு மற்றும் மீள்கட்டமைப்பு விடயங்களில் இலங்கை உரியவகையில் செயற்படவில்லை என பிரித்தானியா குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) சிறப்பு விவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் ஜேம்ஸ் பெரி இக் குற்றச்சாட்டை […]

வட.கிழக்கு மீளிணைப்பை தமிழர்கள்

வட.கிழக்கு மீளிணைப்பை தமிழர்கள் கைவிட்டுவிட்டனர்: ஐக்கிய தேசியக் கட்சி

வட.கிழக்கு மீளிணைப்பை தமிழர்கள் கைவிட்டுவிட்டனர்: ஐக்கிய தேசியக் கட்சி புதிய அரசியலமைப்பினை மக்கள் கருத்துக் கணிப்பிற்கு செலுத்தக்கூடாது என்று நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான இரண்டு கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துவரும் நிலையில் பொதுமக்கள் கருத்துக் கணிப்பு அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுதிபடத் தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்புப் பணிகள் உருவாக்கம் தொடர்பான இன்னும் யோசனையே பெற்று வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது. […]