இலங்கை செய்திகள்

விமானத்தில் இருந்து குதித்து உயிரிழந்த மாணவி

விமானத்தில் இருந்து குதித்து உயிரிழந்த மாணவி இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் அலானா கட்லாண்ட் (வயது 19). இவர் அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அலானா கட்லாண்ட், தொழில்முறை பயிற்சிக்காக ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடான மடகாஸ்கருக்கு சென்றார். அங்கு வடமேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான அஞ்சாஜாவியில் தங்கியிருந்து அவர் ஆய்வுபணிகளை மேற்கொண்டு வந்தார். கடந்த மாதம் 25-ந்தேதி, உயிரினங்கள் குறித்த […]

எதிர்க்கட்சி தலைவர்களுடன் மகிந்த இன்று சந்திப்பு

எதிர்க்கட்சி தலைவர்களுடன் மகிந்த இன்று சந்திப்பு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடன் விஷேட சந்திப்பொன்றை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நடத்தவுள்ளார். எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில் நாளைய கூட்ட ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் குறித்தும் இன்றய சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மடுமாதா ஆவணித் திருவிழா ஆரம்பம்!

மன்னார் மடுமாதா திருத்தல ஆவணித் திருவிழாவுக்கான ஆயத்த வழிபாடுகள் கொடியேற்றத்துடன் 06/08/19 ஆரம்பமாகின.

பிரபாகரன் - கோட்டாபய ராஜபக்ச

கோத்தாவை வேட்பாளராக அறிவிப்பார் மகிந்த!

கோத்தாவை வேட்பாளராக அறிவிப்பார் மகிந்த! அரச தலை­வர் தேர்­த­லுக்­கான பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­பக்­சவை, எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நாளை அறி­விக்­க­வுள்­ளார் என்று ராஜ­பக்­ச­வி­ன­ருக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்­கள் தக­வல் வெளி­யிட்­டுள்­ளன. அந்த அறி­விப்பு வெளி­யி­டப்­பட்ட பின்­னர், ஒரு வார காலத்­துக்கு கோத்­த­பாய ராஜ­பக்ச நாடு முழு­வ­தி­லும் உள்ள மத வழி­பாட்டு இடங்­க­ளுக்­குச் செல்­ல­வுள்­ளார். கொழும்­பில் நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை நடக்­க­வுள்ள பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் தேசிய மாநாட்­டில், அரச தலை­வர் […]

முல்லைத்தீவில் நடந்த விபத்து- ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவில் நடந்த விபத்து- ஒருவர் உயிரிழப்பு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகிய கூலர் வாகனம் தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதின் வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளார். மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து கொக்குளாய் முல்லைத்தீவு வீதியில் சிலாவத்தை பகுதியில் இன்று காலை நடந்துள்ளது. புத்தளம் அசோகபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் விபத்தில் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆணைக்குழு ரணில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பொறுப்பை ஏற்கின்றது அரசு

உயிர்த்த ஞாயி­றுத் தினத் தாக்­கு­தல்­க­ளுக்­கான பொறுப்பை ஏற்­றுக்­கொள்­கின்­றது. பார­தூ­ர­மான இந்த விட­யத்­தில் இருந்து ஓடி­விட முடி­யாது. இவ்­வாறு தெரி­வித்­தார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. கடந்த ஏப்­ரல் மாதம் 21ஆம் திகதி நாட்­டில் நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல்­கள் தொடர்­பாக ஆரா­யும் நாடா­ளு­மன்­றத் தெரி­வுக் குழு­வில் நேற்­றுச் சாட்­சி­ய­ம­ளிக்­கும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது- எனக்­குச் சட்­டம் ஒழுங்கு அமைச்­சின் மூல­மும், இரா­ணு­வத்­தின் மூல­மும் தேசிய பாது­காப்­புத் தொடர்­பான தக­வல்­கள் […]

41 பேரின் வங்கி கணக்குகள் இடை நிறுத்தம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 134 மில்லியன் ரூபா வங்கிப் பணம் இடை நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சந்தேக நபர்களின் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் இனங்காணப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

நல்லூர்

பலத்த பாதுகாப்புடன் – நல்லூர் கந்தனுக்கு கொடியேற்றம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா கடும் பாதுகாப்புடன் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது. எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்ததிருவிழாவும் இடம்பெறும்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள்

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள், இன்று 900 நாள்களை எட்டியுள்ளமையை முன்னிட்டு ஊர்வலத்தில் ஈடுபட்டனர். கண்டிவீதி வழியாக ஊர்வலமாகச் சென்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் மணிக்கூட்டு கோபுரசந்தியை அடைந்து, அங்கிருந்து கடைவீதி வழியாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் இடத்தைச் சென்றடைந்தனர். ஊர்வலத்தில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

maithripala sirisena

கம்போடியாவுக்கு பயணித்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியாவுக்கு நான்கு நாள் அரசமுறைப் பயணமாக இன்று புறப்பட்டுள்ளார். ஜனாதிபதியை கம்போடியா நாட்டின் பிரதிப் பிரதமர் மற்றும் அந்நாட்டின் தகவல்துறை அமைச்சர் உள்ளிட்ட நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.